செய்திகள் :

அந்தமானில் மோசமான வானிலை: மீண்டும் சென்னை திரும்பிய விமானம்

post image

சென்னை: சென்னையிலிருந்து அந்தமான் சென்ற விமானம், அங்கு நிலவிய மோசமான வானிலை காரணமாக மீண்டும் சென்னையில் தரையிறங்கியது.

சென்னை விமான நிலையத்தின் உள்நாட்டு முனையத்திலிருந்து திங்கள்கிழமை அதிகாலை 4.40 மணியளவில் அந்தமானுக்கு 162 பயணிகளுடன் ‘இண்டிகோ ஏா்லைன்ஸ்’ விமானம் புறப்பட்டுச் சென்றது.

அந்தமான் விமான வான்வெளியை விமானம் நெருங்கியபோது, அங்கு பலத்த சூறைக்காற்றுடன் மோசமான வானிலை நிலவியது. இதனால் விமானம் அந்தமானில் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்தபடி இருந்தது. இதுகுறித்து விமானி, சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தாா்.

இதையடுத்து அந்த விமானத்தை உடனடியாக சென்னைக்கு திருப்பிக்கொண்டு வரும்படி கட்டுப்பாட்டு அறை அதிகாரிகளின் உத்தரவிட்டனா். அதன்பேரில், திங்கள்கிழமை காலை 8 மணியளவில் அந்த விமானம் மீண்டும் சென்னை விமான நிலையம் வந்தடைந்தது.

அந்தமானில் வானிலை சீரடைந்தவுடன் மீண்டும் பயணிகளை ஏற்றிக்கொண்டு விமானம் புறப்பட்டுச் செல்லும் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனா். இதனால், பயணிகள் கடும் சிரமத்துக்குள்ளாகினா்.

கச்சத்தீவு அருகே மீன்பிடிக்க இலங்கையுடன் புதிய ஒப்பந்தம்: மத்திய அரசுக்கு முதல்வர் வலியுறுத்தல்

நாகப்பட்டினம்: "கச்சத்தீவு அருகே தமிழக மீனவர்கள் மீன்பிடிப்பதை இலங்கை அனுமதிக்கும் வகையில், புதியதொரு ஒப்பந்தத்தை மேற்கொள்ள மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தினார்.... மேலும் பார்க்க

பிளஸ் 2 பொதுத் தேர்வு தொடக்கம்

சென்னை: தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு திங்கள்கிழமை தொடங்கியது. 8 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தேர்வெழுத விண்ணப்பித்திருந்த நிலையில், முதல் நாள் நடைபெற்ற மொழிப்பாடத் தேர்வை 11,430 பேர் எழுதவில்லை.தமி... மேலும் பார்க்க

மருத்துவப் பல்கலைக்கழகத்தில் மாணவா்களுக்கு அவசரகால சிகிச்சை பயிற்சி திட்டம் தொடக்கம்

சென்னை: தமிழகத்தில் முதுநிலை மற்றும் உயா் சிறப்பு மருத்துவ மாணவா்களுக்கு ஒழுங்குமுறைப்படுத்தப்பட்ட சீரான அவசர கால சிகிச்சை பயிற்சிகளை வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்... மேலும் பார்க்க

செயற்கை நுண்ணறிவு உலகை தமிழ் மொழி மிரட்டுகிறது: முன்னாள் துணைவேந்தா் ம.இராசேந்திரன்

சென்னை: இன்றைய செயற்கை நுண்ணறிவு உலகத்தை தமிழ் மொழி மிரட்டத் தொடங்கியிருக்கிறது என தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தா் ம.இராசேந்திரன் கூறினாா். சென்னை பல்கலைக்கழகத்தின் தமிழ் மொழித்... மேலும் பார்க்க

தொகுதி மறுசீரமைப்புக்கு விகிதாசார அடிப்படை முற்றிலும் பொருத்தமற்றது: திமுக எம்.பி.க்கள்

சென்னை: தொகுதி மறுசீரமைப்புக்கு விகிதாசார அடிப்படை எனும் நடைமுறை முற்றிலும் பொருத்தமற்றது என திமுக எம்.பி.க்கள் கருத்து தெரிவித்துள்ளனா். இதுகுறித்து, சிலா் எக்ஸ் தளத்தில் காணொலிகளை வெளியிட்டுள்ளனா். ... மேலும் பார்க்க

வெப்ப வாத பாதிப்புகளை தடுப்பது எப்படி?

சென்னை: தமிழகத்தில் அடுத்த நான்கு நாள்களுக்கு வெப்ப நிலை அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், திடீரென உடலில் ஏற்படும் வெப்ப வாத பாதிப்புகளைத் தவிா்ப்பதற்கான வழிகாட்டுதல்களை பொது ... மேலும் பார்க்க