செய்திகள் :

பார்வைத் திறன் குறைபாடுடையோரும் நீதிபதிகளாக நியமிக்கப்படத் தகுதியுடையவர்கள்! -உச்சநீதிமன்றம்

post image

பார்வைத் திறனற்ற மாற்றுத்திறனாளிகளும் நீதிபதிகளாகத் தகுதியுடையோரே என்பதை மீண்டும் ஒருமுறை உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. உடல் குறைபாட்டை காரணம்காட்டி நீதியியல் துறையில் எந்த்வொரு நபருக்கும் பணி வாய்ப்பு மறுக்கப்படக்கூடாது என்று உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

மத்திய பிரதேசத்தில் கண் பார்வைத் திறன் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டி, தான் நீதிபதியாக தகுதியிருந்தும் தமது குறைபாட்டால் நீதியியல் துறையில் விண்ணப்பிக்க தகுதியில்லை என்று நிராகரிக்கப்பட்ட மனுதாரரின் தாயார், இது குறித்து முன்னாள் தலைமை நீதிபதி டி. ஒய். சந்திரசூட்டுக்கு கடிதம் எழுதியிருந்தார். அதில், பொதுநல மனுவாக இந்த விவகாரத்தை விசாரிக்க கோரிக்கை விடுத்திருந்தார்.

பார்வைத்திறனற்ற மாற்றுத்திறனாளிகள் நீதித்துறை சேவைகளில் நீதிபதிகளாகவும் இதர பொறுப்புகளிலும் நியமிக்கப்படுவதை தடை செய்யும் ‘மத்திய பிரதேச அரசுத் துறை சேவைகள் தேர்வுகள் விதிகள்(ஆள்சேர்ப்பு) 1994’-இல் உள்ள விதி 6(ஏ)-ஐ எதித்து தாக்கல் செய்யப்பட்ட மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜே. பி. பர்திவலா மற்றும் ஆர். மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று(மார்ச் 3) பிறப்பித்துள்ள உத்தரவில், ‘நீதியியல் துறை பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஒருவரது உடல் குறைபாட்டை காரணம் காட்டி அவரை தடை செய்ய இயலாது’ என்று சுட்டிக்காட்டியுள்ளது.

நீதிபதிகள் கூறியிருப்பதாவது:- “குறைபாடுடைய மனிதர்கள் நீதியியல் துறையில் எந்தவித பாகுபாட்டையும் எதிர்கொள்ளக் கூடாது. இதற்கு தேவையான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும். உடல் குறைபாடு காரணமாக எந்தவொரு விண்ணப்பதாரருக்கும் வாய்ப்பு மறுக்கப்படக் கூடாது” என்று தெரிவித்துள்ளனர்.

தொடர் நஷ்டத்தில் ஓலா: 1,000 பணியாளர்களை வேலையிலிருந்து நீக்க நடவடிக்கை!

ஓலா நிறுவனம் சுமார் 1,000 பணியாளர்களை வேலையிலிருந்து நீக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.மின்சார வாகன தயாரிப்புகளில் முன்னணி நிறுவனங்களுள் ஒன்றான ஓலா எலக்ட்ரிக் மொபிலிட்டி லிமிடட்., நிறுவனத்தின் தலை... மேலும் பார்க்க

ஆஸ்கர் மேடையில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக எழுந்த குரல்!

இஸ்ரேல் - பாலஸ்தீன போரை நிறுத்தக் கோரி ஆஸ்கர் மேடையில் பிரபங்கள் பேசிய விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது. 2025-ம் ஆண்டுக்கான 97-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் ... மேலும் பார்க்க

அமைச்சர் ஜெய்சங்கருடன் பெல்ஜியம் இளவரசி சந்திப்பு!

இந்தியாவுக்கு வருகை தந்துள்ள பெல்ஜியம் இளவரசியை அமைச்சர் ஜெய்சங்கர் இன்று(மார்ச் 3) சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்.ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினரான பெல்ஜியம் நாட்டின் இளவரசி ஐரோப்பிய ஒன்றிய உயரதிகாரிகள் குழ... மேலும் பார்க்க

ஐக்கிய அரபு அமீரகத்தில் உ.பி. பெண்ணுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்!

ஐக்கிய அரபு அமீரகத்தில், உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணுக்கு பிப்.15ஆம் தேதி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக, தில்லி உயர் நீதிமன்றத்தில் மத்திய வெளியுறவு விவகாரத் துறை தெரிவித்துள்ளது. மேலும் பார்க்க

காங்கிரஸ் பெண் தொண்டர் கொலை: அடுத்தடுத்து வெளியான அதிர்ச்சித் தகவல்!

ஹரியாணா மாநிலத்தில் காங்கிரஸ் பெண் தொண்டர் ஹிமானி நர்வால் கொலை வழக்கில் பல அதிர்ச்சித் தகவல்களை காவல்துறை வெளியிட்டுள்ளது.காங்கிரஸ் பெண் தொண்டர் கொலை வழக்கில் கைதான சச்சின், ஏற்கனவே திருமணமானவர் என்று... மேலும் பார்க்க

கேரளத்தில் 10ம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த துயரம்! ஒரு வாரத்தில் 2-வது பலி!!

கேரள மாநிலத்தில், கில்லன் பாரே சின்ட்ரோம் (ஜிபிஎஸ்) நோய்க்கு ஒரே வாரத்தில் இரண்டாவது நபர் பலியான சம்பவத்தால், அங்கு மக்கள் கவலை அடைந்துள்ளனர்.பத்தாம் வகுப்பு மாணவிக்கு கில்லன் பாரே சின்ட்ரோம் (ஜிபிஎஸ்... மேலும் பார்க்க