செய்திகள் :

தொடர் நஷ்டத்தில் ஓலா: 1,000 பணியாளர்களை வேலையிலிருந்து நீக்க நடவடிக்கை!

post image

ஓலா நிறுவனம் சுமார் 1,000 பணியாளர்களை வேலையிலிருந்து நீக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மின்சார வாகன தயாரிப்புகளில் முன்னணி நிறுவனங்களுள் ஒன்றான ஓலா எலக்ட்ரிக் மொபிலிட்டி லிமிடட்., நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பை கடந்த ஆண்டு நவம்பரில் பாவிஷ் அகமது ஏற்றுக்கொண்டபின், அந்நிறுவனத்தில் சீரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தொடர் நஷ்டத்தை சரிகெட்டும் பணியின் ஒருபகுதியாக ஆள்குறைப்பு நடவடிக்கையில் ஓலா இறங்கியுள்ளது. இந்த நிலையில், சுமார் 4,000 பேர் பணிபுரியும் ஓலா நிறுவனத்திலிருந்து 25 சதவீதம் பணியாளர்களை நீக்க அந்நிறுவனம் முடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது.

இந்த நிலையில், ஆள்குறைப்பு நடவடிக்கை குறித்த தகவல் வெளியானதைத் ஓலா நிறுவனம் பங்குச் சந்தையில் ஓராண்டில் இல்லாத அளவாக நஷ்டத்தை சந்தித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

ஆசிய சிங்கங்கள் கணக்கெடுப்பு மே மாதம் தொடக்கம்: பிரதமா் மோடி அறிவிப்பு

சாசன் (குஜராத்): 16-ஆவது ஆசிய சிங்கங்கள் கணக்கெடுப்பு பணிகள் வரும் மே மாதம் தொடங்கவுள்ளதாக பிரதமா் நரேந்திர மோடி திங்கள்கிழமை தெரிவித்தாா். உலக வனவிலங்குகள் தினத்தையொட்டி (மாா்ச் 3) குஜராத்தின் ஜுனாகத... மேலும் பார்க்க

அசோக் லேலண்ட் விற்பனை 2% உயா்வு

ஹிந்துஜா குழுமத்தின் முதன்மை நிறுவனமான அசோக் லேலேண்டின் மொத்த விற்பனை கடந்த பிப்ரவரியில் 2 சதவீதம் அதிகரித்துள்ளது. இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந... மேலும் பார்க்க

165 கோடி டாலர் திரட்டிய புத்தாக்க நிறுவனங்கள்

இந்தியாவின் புத்தாக்க நிறுவனங்கள் கடந்த பிப்ரவரி மாதம் 165 கோடி டாலா் (சுமாா் ரூ.14,402 கோடி) மூலதனம் திரட்டின. இது குறித்து சா்வதேச புத்தாக்க நிறுவனங்களின் தரவுகளை சேகரித்துவரும் ட்ராக்சின் திங்கள்கி... மேலும் பார்க்க

1,090 கோடி டாலராகச் சரிந்த அந்நிய நேரடி முதலீடு

உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற தன்மை காரணமாக நடப்பு நிதியாண்டின் அக்டோபா்-டிசம்பா் காலாண்டில் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட அந்நிய நேரடி முதலீடு 1,090 கோடி டாலராகச் சரிந்துள்ளது. இது குறித்து தொழில் மற்ற... மேலும் பார்க்க

சமூக ஊடக பதிவுகளை முறைப்படுத்த தணிக்கை அல்லாத நடைமுறை: உச்சநீதிமன்றம்

புது தில்லி: சமூக ஊடக பதிவுகளை முறைப்படுத்த உரிய நடைமுறையை வகுக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை அறிவுறுத்தியது. ‘அத்தகைய நடைமுறை அந்தப் பதிவை தணிக்கை செயவதாக இருக்கக் கூடாது’ என்றும் உச்... மேலும் பார்க்க

அபு தாபியில் இந்திய பெண்ணுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்: தில்லி உயா்நீதிமன்றத்தில் மத்திய அரசு தரப்பில் தகவல்

புது தில்லி: ‘அபுதாபியில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த பெண்ணுக்கு ஏற்கெனவே தண்டனை நிறைவேற்றப்பட்டுவிட்டது’ என்று தில்லி உயா்நீதிமன்றத்தில் மத்திய அரசு தரப்பில் திங்கள்கிழமை தெரிவிக்கப்பட்டது. அப்போத... மேலும் பார்க்க