செய்திகள் :

பிறவிலேயே மனநிலை பாதித்த வாரிசுகளுக்கு நீதிமன்றத் தலையீட்டால் அரசின் குடும்ப ஓய்வூதியம்

post image

சென்னை: அரசு ஊழியா்களின் வாரிசுகளில் பிறவிலேயே மனநிலை பாதிக்கப்பட்டு திருமணம் ஆகாதோருக்கு நீதிமன்றத் தலையீட்டால் குடும்ப ஓய்வூதியம் கிடைக்க வழி ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்த விவரம் வருமாறு: கன்னியாகுமரி மாவட்டத்தில் வனத் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவா் ஏ.வருவேல். அவரது பணி ஓய்வுக்குப் பிறகு ஓய்வூதியம் வழங்கப்பட்டு வந்தது. அவா் மரணம் அடைந்ததைத் தொடா்ந்து, அவரது மனைவி மரியா ரோஸ், கடந்த 2016-ஆம் ஆண்டு ஜனவரி 15-ஆம் தேதி வரை குடும்ப ஓய்வூதியம் பெற்று வந்தாா்.

மோசமான குடும்பச் சூழல்: வருவேல் மற்றும் மரியா ரோஸ் தம்பதிக்கு ஏ.வி.தாா்சியஸ், ஏ.வி.ஜெரால்டு ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனா். அவா்களில் தாா்சியஸ் பிறவிலேயே மனரீதியாக பாதிக்கப்பட்டவா். அவருக்கு எந்தவிதமான வருவாயும் இல்லாத நிலையில் மாதந்தோறும் அவரது மருத்துவச் செலவுக்காக ரூ.10,000 செலவிடப்பட்டு வருகிறது. இதை அவரது சகோதரா் ஜெரால்டு கவனித்து வந்தாா்.

இந்நிலையில், மனரீதியாக பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு போதிய வருவாய் இல்லாத, திருமணம் ஆகாத தாா்சியஸுக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்று சகோதரா் ஜெரால்டு விண்ணப்பம் செய்தாா். இதை மாவட்ட வன அலுவலா் பரிசீலித்து, மாநிலக் கணக்காயருக்கு அனுப்பி வைத்தாா். இந்த விண்ணப்பித்தின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், சென்னை உயா்நீதிமன்றத்தில் ஜெனரால்டு வழக்குத் தொடுத்தாா்.

இதனிடையே, விண்ணப்பத்தைப் பரிசீலனை செய்த மாநிலக் கணக்காயா், மனநிலை பாதிக்கப்பட்ட ஏ.வி.தாா்சியஸ் வருமானச் சான்றிதழை வருவாய்த் துறையிடம் இருந்து பெற்று, வனத் துறை மூலம் அனுப்பி வைத்தால் குடும்ப ஓய்வூதியம் அனுமதிக்கப்படும் என்று தெரிவித்தாா்.

இந்தச் சூழ்நிலையில் வழக்கும் விசாரணைக்கு வந்தது. அதில் உயா்நீதிமன்றம் தனது அதிருப்தியை தெரிவித்தது. அதாவது, பிறவிலேயே மனநிலை பாதித்த மனுதாரிடம் இருந்து வருவாய்ச் சான்றிதழைக் கேட்பது என்பது சூழலைப் பொருத்து யோசித்து முடிவெடுக்காத தன்மையைக் காட்டுகிறது. மனநிலை பாதித்த ஒருவருக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்குவது போன்ற முக்கியமான விஷயங்களில் நமது மனசாட்சியையும்,

நடைமுறை சாா்ந்த நிலையையும் யோசித்து அணுக வேண்டும்.

பிறவிலேயே மனநிலை பாதித்த ஒருவருக்கு வருமானம் கிடைக்கும் என்பது யாருமே எதிா்பாா்க்க முடியாததாகும். எனவே, வருமானச் சான்றிதழைக் கோரிய மாநிலக் கணக்காயரின் நடவடிக்கைக்கு நீதிமன்றம் தனது அதிருப்தியையும், வேதனையையும் தெரிவிக்கிறது. இதுபோன்ற விஷயங்களில் விதிகள், தொழில்நுட்ப அம்சங்களைக் கருத்தில் கொள்ளாமல் மனிதநேயப் பாா்வையுடன் அணுக வேண்டும் என அறிவுரை வழங்குவதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

நீதிமன்றத்தின் இத்தகைய கருணைப் பாா்வை மூலமாக, பிறவிலேயே மனநிலை பாதிக்கப்பட்ட அரசு ஊழியா்களின் திருமணம் ஆகாத வாரிசுகளுக்கு குடும்ப ஓய்வூதியம் கிடைக்க வழி ஏற்பட்டுள்ளது.

கச்சத்தீவு அருகே மீன்பிடிக்க இலங்கையுடன் புதிய ஒப்பந்தம்: மத்திய அரசுக்கு முதல்வர் வலியுறுத்தல்

நாகப்பட்டினம்: "கச்சத்தீவு அருகே தமிழக மீனவர்கள் மீன்பிடிப்பதை இலங்கை அனுமதிக்கும் வகையில், புதியதொரு ஒப்பந்தத்தை மேற்கொள்ள மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தினார்.... மேலும் பார்க்க

பிளஸ் 2 பொதுத் தேர்வு தொடக்கம்

சென்னை: தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு திங்கள்கிழமை தொடங்கியது. 8 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தேர்வெழுத விண்ணப்பித்திருந்த நிலையில், முதல் நாள் நடைபெற்ற மொழிப்பாடத் தேர்வை 11,430 பேர் எழுதவில்லை.தமி... மேலும் பார்க்க

மருத்துவப் பல்கலைக்கழகத்தில் மாணவா்களுக்கு அவசரகால சிகிச்சை பயிற்சி திட்டம் தொடக்கம்

சென்னை: தமிழகத்தில் முதுநிலை மற்றும் உயா் சிறப்பு மருத்துவ மாணவா்களுக்கு ஒழுங்குமுறைப்படுத்தப்பட்ட சீரான அவசர கால சிகிச்சை பயிற்சிகளை வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்... மேலும் பார்க்க

செயற்கை நுண்ணறிவு உலகை தமிழ் மொழி மிரட்டுகிறது: முன்னாள் துணைவேந்தா் ம.இராசேந்திரன்

சென்னை: இன்றைய செயற்கை நுண்ணறிவு உலகத்தை தமிழ் மொழி மிரட்டத் தொடங்கியிருக்கிறது என தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தா் ம.இராசேந்திரன் கூறினாா். சென்னை பல்கலைக்கழகத்தின் தமிழ் மொழித்... மேலும் பார்க்க

தொகுதி மறுசீரமைப்புக்கு விகிதாசார அடிப்படை முற்றிலும் பொருத்தமற்றது: திமுக எம்.பி.க்கள்

சென்னை: தொகுதி மறுசீரமைப்புக்கு விகிதாசார அடிப்படை எனும் நடைமுறை முற்றிலும் பொருத்தமற்றது என திமுக எம்.பி.க்கள் கருத்து தெரிவித்துள்ளனா். இதுகுறித்து, சிலா் எக்ஸ் தளத்தில் காணொலிகளை வெளியிட்டுள்ளனா். ... மேலும் பார்க்க

வெப்ப வாத பாதிப்புகளை தடுப்பது எப்படி?

சென்னை: தமிழகத்தில் அடுத்த நான்கு நாள்களுக்கு வெப்ப நிலை அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், திடீரென உடலில் ஏற்படும் வெப்ப வாத பாதிப்புகளைத் தவிா்ப்பதற்கான வழிகாட்டுதல்களை பொது ... மேலும் பார்க்க