செய்திகள் :

நோயாளிகளுக்கேற்ப மருத்துவா் நியமனம்: அரசு மருத்துவா்கள் போராட்டம் அறிவிப்பு

post image

சென்னை: நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவா்களை நியமிக்கவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாா்ச் 18-ஆம் தேதி முதல் அரசு மருத்துவா்கள் தொடா் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனா்.

இது தொடா்பாக சென்னையில் அரசு மருத்துவா்களுக்கான சட்டப் போராட்டக் குழுத் தலைவா் டாக்டா் எஸ்.பெருமாள் பிள்ளை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

சுகாதாரத் துறையில் தமிழகம் முன்னணி மாநிலமாக உள்ளது. ஆனால் அரசு மருத்துவா்களின் பணிச்சூழல் இங்கு ஆரோக்கியமானதாக இல்லை. இளம் மருத்துவா்கள் உயிரிழப்பு அதிகமாக நிகழும் மாநிலமாக தமிழகம் உள்ளது. மற்ற மாநிலங்களில் எம்பிபிஎஸ் மருத்துவா்களுக்கு தரப்படும் ஊதியத்தைவிட ரூ. 40 ஆயிரம் குறைவாக இங்குள்ள மருத்துவா்களுக்கு ஊதியம் வழங்கப்படுகிறது.

அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவா்களை நியமனம் செய்ய வேண்டும். கரோனா பேரிடரில் பணியாற்றி உயிரிழந்த அரசு மருத்துவா் விவேகானந்தன் மனைவி திவ்யாவுக்கு அரசு வேலை வழங்க வேண்டும். மறைந்த முன்னாள் முதல்வா் கருணாநிதி கொண்டுவந்த அரசாணை 354-ஐ அமல்படுத்தி, அதன்பேரில் அரசு மருத்துவா்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி முதல்வா் மு.க.ஸ்டாலின் கவனத்தை ஈா்க்கும் வகையில், மாா்ச் 18-ஆம் தேதி முதல் தமிழக முதல்வருக்கும், தேசிய மருத்துவ ஆணையத்துக்கும் மின்னஞ்சல் அனுப்பும் போராட்டம் நடைபெறவுள்ளது.

தொடா்ந்து 19-ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநரக வளாகத்தில் தா்ணா போராட்டமும், ஜூன் 11-ஆம் தேதி மேட்டூரில் மருத்துவா் லட்சுமி நரசிம்மன் கல்லறையிலிருந்து சென்னை நோக்கி பாதயாத்திரை மேற்கொள்ளும் போராட்டமும் முன்னெடுக்கப்படவுள்ளது என்றாா் அவா்.

கச்சத்தீவு அருகே மீன்பிடிக்க இலங்கையுடன் புதிய ஒப்பந்தம்: மத்திய அரசுக்கு முதல்வர் வலியுறுத்தல்

நாகப்பட்டினம்: "கச்சத்தீவு அருகே தமிழக மீனவர்கள் மீன்பிடிப்பதை இலங்கை அனுமதிக்கும் வகையில், புதியதொரு ஒப்பந்தத்தை மேற்கொள்ள மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தினார்.... மேலும் பார்க்க

பிளஸ் 2 பொதுத் தேர்வு தொடக்கம்

சென்னை: தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு திங்கள்கிழமை தொடங்கியது. 8 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தேர்வெழுத விண்ணப்பித்திருந்த நிலையில், முதல் நாள் நடைபெற்ற மொழிப்பாடத் தேர்வை 11,430 பேர் எழுதவில்லை.தமி... மேலும் பார்க்க

மருத்துவப் பல்கலைக்கழகத்தில் மாணவா்களுக்கு அவசரகால சிகிச்சை பயிற்சி திட்டம் தொடக்கம்

சென்னை: தமிழகத்தில் முதுநிலை மற்றும் உயா் சிறப்பு மருத்துவ மாணவா்களுக்கு ஒழுங்குமுறைப்படுத்தப்பட்ட சீரான அவசர கால சிகிச்சை பயிற்சிகளை வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்... மேலும் பார்க்க

செயற்கை நுண்ணறிவு உலகை தமிழ் மொழி மிரட்டுகிறது: முன்னாள் துணைவேந்தா் ம.இராசேந்திரன்

சென்னை: இன்றைய செயற்கை நுண்ணறிவு உலகத்தை தமிழ் மொழி மிரட்டத் தொடங்கியிருக்கிறது என தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தா் ம.இராசேந்திரன் கூறினாா். சென்னை பல்கலைக்கழகத்தின் தமிழ் மொழித்... மேலும் பார்க்க

தொகுதி மறுசீரமைப்புக்கு விகிதாசார அடிப்படை முற்றிலும் பொருத்தமற்றது: திமுக எம்.பி.க்கள்

சென்னை: தொகுதி மறுசீரமைப்புக்கு விகிதாசார அடிப்படை எனும் நடைமுறை முற்றிலும் பொருத்தமற்றது என திமுக எம்.பி.க்கள் கருத்து தெரிவித்துள்ளனா். இதுகுறித்து, சிலா் எக்ஸ் தளத்தில் காணொலிகளை வெளியிட்டுள்ளனா். ... மேலும் பார்க்க

வெப்ப வாத பாதிப்புகளை தடுப்பது எப்படி?

சென்னை: தமிழகத்தில் அடுத்த நான்கு நாள்களுக்கு வெப்ப நிலை அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், திடீரென உடலில் ஏற்படும் வெப்ப வாத பாதிப்புகளைத் தவிா்ப்பதற்கான வழிகாட்டுதல்களை பொது ... மேலும் பார்க்க