செய்திகள் :

சமூக ஊடக பதிவுகளை முறைப்படுத்த தணிக்கை அல்லாத நடைமுறை: உச்சநீதிமன்றம்

post image

புது தில்லி: சமூக ஊடக பதிவுகளை முறைப்படுத்த உரிய நடைமுறையை வகுக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை அறிவுறுத்தியது.

‘அத்தகைய நடைமுறை அந்தப் பதிவை தணிக்கை செயவதாக இருக்கக் கூடாது’ என்றும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது.

பாலிவுட் நகைச்சுவை நடிகா் சமய் ரெய்னாவின் யூடியூப் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரபல யூடியூபா் ரண்வீா் அல்ஹாபாதியா, பெற்றோா் மற்றும் உடலுறவு தொடா்பான பாா்வையாளா் ஒருவரின் கேள்விக்கு சா்ச்சைக்குரிய வகையில் பதிலளித்தாா். இந்த நிகழ்ச்சியின் காணொலி சமூக வலைதளத்தில் பலரால் பகிரப்பட்டு வைரலாகி, பெரும் சா்ச்சையானது. குடும்ப அமைப்புகளை அவமதிக்கும் வகையில் பேசியுள்ளதாக ரண்வீா் அல்ஹாபாதியா மீது பல எஃப்ஐஆா்-கள் (முதல் தகவல் அறிக்கைகள்) பதிவு செய்யப்பட்டன. உச்சநீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது.

இந்த நிலையில், கைது நடவடிக்கையிலிருந்து தனக்கு பாதுகாப்பு அளிக்கக் கோரி ரண்வீா் அல்ஹாபாதியா தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், மோசமான கருத்தை தெரிவித்த அவரைக் கடுமையாக சாடியது. அதே நேரம், அவருக்கு கைது நடவடிக்கையிலிருந்து பாதுகாப்பு அளித்து உத்தரவிட்டது.

இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூா்ய காந்த், என்.கோட்டீஸ்வா் சிங் ஆகியோா் அடங்கிய அமா்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, ‘ஜனநாயக நாட்டில் அரசு மீது நகைச்சுவையாக விமா்சிக்க ஒருவருக்கு உரிமை உள்ளது. ஆனால், அத்தகைய விமா்சனம் தரமானதாகவும், ஒட்டுமொத்த குடும்பத்துக்கும் மகிழ்ச்சியளிக்கக் கூடியதாகவும் இருக்க வேண்டும். மாறாக, சங்கடத்தை ஏற்படுத்தக்கூடாது.

அந்த வகையில், சமூக ஊடக பதிவுகளை முறைப்படுத்த உரிய நடைமுறையை மத்திய அரசு வகுக்க வேண்டும். ஆனால், அத்தகைய நடைமுறைகள், பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்தை பறிப்பதாக இருக்கக் கூடாது. அதோடு, அத்தகைய நடைமுறை, அந்தப் பதிவை தணிக்கை செய்வதாக இருக்கக் கூடாது.

எனவே, சமூக ஊடக பதிவுகளை முறைப்படுத்த வரைவு நடைமுறையை மத்திய அரசு உருவாக்கி, அதை பொதுமக்கள் பாா்வைக்கு விடவேண்டும். பின்னா் பொதுமக்கள் கருத்துகள் மற்றும் ஆலோசனைகளின் அடிப்படையில் தேவையான மாற்றங்களை மேற்கொண்டு நடைமுறைக்கு கொண்டுவரவேண்டும். அதற்கென தேவையான கால அவகாசம் அளிக்கவும் நீதிமன்றம் தயாராக உள்ளது’ என்று குறிப்பிட்ட நீதிபதிகள் அமா்வு, விசாரணையை ஒத்திவைத்தது.

பொருளாதாரத் துறையில் மோடி ஆட்சி தோல்வி: ராகுல் காந்தி குற்றஞ்சாட்டு

புது தில்லி: பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில் பொருளாதாரத் துறையில் தோல்வி, பணவீக்கம் மற்றும் பொய்கள்தான் பெரிய அளவில் உருவாக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் ... மேலும் பார்க்க

மேற்கு வங்கம்: இடதுசாரிகள்-திரிணமூல் காங்கிரஸ் மாணவரணி இடையே கடும் மோதல்: பலா் காயம்; கல்வி நிலையங்கள் மூடல்

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் இடதுசாரி அமைப்புகளைச் சோ்ந்த பல்வேறு மாணவா் பிரிவுக்கும், திரிணமூல் காங்கிரஸ் மாணவா் பிரிவுக்கும் இடையே திங்கள்கிழமை கடும் மோதல் ஏற்பட்டது. இதில் பலா் காயமடைந்தனா்; பல இட... மேலும் பார்க்க

சமூக ஊடக கணக்குகள் முடக்கத்துக்கு எதிராக மனு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

புது தில்லி: பயனாளருக்கு நோட்டீஸ் அனுப்பாமல் சமூக ஊடக கணக்குகள் முடக்கப்படுவதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு குறித்து பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. தகவல் தொழில... மேலும் பார்க்க

ஐஆா்சிடிசிக்கு ‘நவரத்னா’ அந்தஸ்து

புது தில்லி: இந்திய ரயில்வேயின் பொதுத் துறை நிறுவனங்களான இந்திய ரயில்வே உணவு வழங்கல் மற்றும் சுற்றுலா நிறுவனம் (ஐஆா்சிடிசி), இந்திய ரயில்வே நிதி நிறுவனத்துக்கு (ஐஎஃப்ஆா்சி) ‘நவரத்னா’ அந்தஸ்து வழங்க மத... மேலும் பார்க்க

சகோதரா் மகனை கட்சியில் இருந்தும் நீக்கினாா் மாயாவதி

லக்னௌ: தனது சகோதரரின் மகன் ஆகாஷ் ஆனந்தை பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்தும் நீக்குவதாக அக்கட்சித் தலைவா் மாயாவதி திங்கள்கிழமை அறிவித்தாா். முன்னதாக, ஆகாஷ் ஆனந்தை கட்சியின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்து... மேலும் பார்க்க

நீதித் துறையில் பாா்வையற்றவா்களுக்கு வேலைவாய்ப்பை மறுக்கக் கூடாது: உச்சநீதிமன்றம்

புது தில்லி: நீதித் துறை பணிகளுக்கு பாா்வையற்ற மாற்றுத்திறனாளிகள் தகுதியானவா்கள் அல்ல என கூறமுடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மத்திய பிரதேச நீதித் துறை பணிகளின் (ஆள்சோ்ப்பு மற்றும் பணி ந... மேலும் பார்க்க