செய்திகள் :

காங்கிரஸ் பெண் தொண்டர் கொலை: அடுத்தடுத்து வெளியான அதிர்ச்சித் தகவல்!

post image

ஹரியாணா மாநிலத்தில் காங்கிரஸ் பெண் தொண்டர் ஹிமானி நர்வால் கொலை வழக்கில் பல அதிர்ச்சித் தகவல்களை காவல்துறை வெளியிட்டுள்ளது.

காங்கிரஸ் பெண் தொண்டர் கொலை வழக்கில் கைதான சச்சின், ஏற்கனவே திருமணமானவர் என்றும், ஜஜ்ஜார் மாவட்டத்தில் மொபைல் கடை நடத்தி வந்தவர் என்றும் காவல்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது.

ஹிமானி நர்வால் கொலை வழக்கில், குற்றம்சாட்டப்பட்டுள்ள சச்சினை திங்கள்கிழமை காவல்துறையினர் கைது செய்தனர். அப்போதுதான், அவர் மொபைல் சார்ஜர் மூலம் ஹிமானியைக் கொன்றதை ஒப்புக்கொண்டுள்ளார்.

சச்சினும், ஹிமானியும் சமூக ஊடகம் மூலம் நட்பாகி பழகி வந்ததும், அவ்வப்போது ஹிமானி வீட்டுக்கு அவர் வந்து சென்றதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விஜய் நகரில் உள்ள ஒரு வீட்டில் ஹிமானி தனியாக வாழ்ந்து வந்துள்ளார்.

இந்த நிலையில், பிப். 27 அன்று அவரது வீட்டுக்கு சச்சின் வந்துள்ளார். இருவருக்குள்ளும் தகராறு ஏற்பட்டுள்ளது. மொபைல் சார்ஜரைக் கொண்டு சச்சின், ஹிமானி கழுத்தை நெறித்துக் கொன்றுள்ளார்.

பிறகு, அவரது நகை, செல்போன், லேப்டாப் உள்ளிட்டவற்றை அங்கிருந்த சூட்கேசில், ஹிமானி உடலுடன் வைத்து தனது கடைக்குக் கொண்டு வந்துள்ளார். அங்கே நகை, செல்போன், லேப்டாப் உள்ளிட்டவற்றை வைத்துவிட்டு, சூட்கேசுடன் சம்ப்லா பேருந்து நிலையம் வந்து அதனை வீசிவிட்டுச் சென்றிருக்கிறார்.

குற்றத்தை அவர் ஒப்புக் கொண்டிருப்பதையும், இருவருக்குள்ளும் பணப்பரிமாற்றம் நடந்திருப்பதையும் காவல்துறையினர் உறுதி செய்திருக்கிறார்கள். கைதான சச்சின் கையில் கடித்த அடையாளமும் காயங்களும் இருப்பதையும் காவல்துறையினர் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

தொடர் நஷ்டத்தில் ஓலா: 1,000 பணியாளர்களை வேலையிலிருந்து நீக்க நடவடிக்கை!

ஓலா நிறுவனம் சுமார் 1,000 பணியாளர்களை வேலையிலிருந்து நீக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.மின்சார வாகன தயாரிப்புகளில் முன்னணி நிறுவனங்களுள் ஒன்றான ஓலா எலக்ட்ரிக் மொபிலிட்டி லிமிடட்., நிறுவனத்தின் தலை... மேலும் பார்க்க

ஆஸ்கர் மேடையில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக எழுந்த குரல்!

இஸ்ரேல் - பாலஸ்தீன போரை நிறுத்தக் கோரி ஆஸ்கர் மேடையில் பிரபங்கள் பேசிய விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது. 2025-ம் ஆண்டுக்கான 97-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் ... மேலும் பார்க்க

அமைச்சர் ஜெய்சங்கருடன் பெல்ஜியம் இளவரசி சந்திப்பு!

இந்தியாவுக்கு வருகை தந்துள்ள பெல்ஜியம் இளவரசியை அமைச்சர் ஜெய்சங்கர் இன்று(மார்ச் 3) சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்.ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினரான பெல்ஜியம் நாட்டின் இளவரசி ஐரோப்பிய ஒன்றிய உயரதிகாரிகள் குழ... மேலும் பார்க்க

பார்வைத் திறன் குறைபாடுடையோரும் நீதிபதிகளாக நியமிக்கப்படத் தகுதியுடையவர்கள்! -உச்சநீதிமன்றம்

பார்வைத் திறனற்ற மாற்றுத்திறனாளிகளும் நீதிபதிகளாகத் தகுதியுடையோரே என்பதை மீண்டும் ஒருமுறை உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. உடல் குறைபாட்டை காரணம்காட்டி நீதியியல் துறையில் எந்த்வொரு நபருக்கும் பணி... மேலும் பார்க்க

ஐக்கிய அரபு அமீரகத்தில் உ.பி. பெண்ணுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்!

ஐக்கிய அரபு அமீரகத்தில், உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணுக்கு பிப்.15ஆம் தேதி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக, தில்லி உயர் நீதிமன்றத்தில் மத்திய வெளியுறவு விவகாரத் துறை தெரிவித்துள்ளது. மேலும் பார்க்க

கேரளத்தில் 10ம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த துயரம்! ஒரு வாரத்தில் 2-வது பலி!!

கேரள மாநிலத்தில், கில்லன் பாரே சின்ட்ரோம் (ஜிபிஎஸ்) நோய்க்கு ஒரே வாரத்தில் இரண்டாவது நபர் பலியான சம்பவத்தால், அங்கு மக்கள் கவலை அடைந்துள்ளனர்.பத்தாம் வகுப்பு மாணவிக்கு கில்லன் பாரே சின்ட்ரோம் (ஜிபிஎஸ்... மேலும் பார்க்க