செய்திகள் :

ராமஜெயம் கொலை வழக்கு: புலன் விசாரணை அதிகாரிகள் மாற்றம்!

post image

அமைச்சா் கே என். நேருவின் சகோதரர் கே என். ராமஜெயம் கொலை வழக்கின் புலன் விசாரணை அதிகாரிகளை மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2012ஆம் ஆண்டு கே.என். ராமஜெயம், நடைப்பயிற்சி சென்றபோது அடையாளம் தெரியாத நபர்களால் கடத்திக் கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை நடந்து 13 ஆண்டுகள் ஆகியும், ஒருவரைக் கூட காவல்துறையினரால் கைது செய்ய முடியவில்லை. இது சிபிசிஐடி, சிபிஐ விசாரணைக்கும் மாற்றப்பட்டிருந்தது.

மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்ததும், இந்த கொலை வழக்கில் சந்தேகிக்கப்படும் 13 பேருக்கு உண்மை கண்டறியும் சோதனை நடைபெற்றது.

அமைச்சா் கே என். நேருவின் சகோதரா் கே என். ராமஜெயம் கொலை செய்யப்பட்ட வழக்கை சிறப்பு புலனாய்வு குழு (எஸ்ஐடி) தற்போது விசாரித்து வருகிறது.

இந்த நிலையில், இவ்வழக்கு இன்று(மார்ச். 3) சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, சிறப்பு புலனாய்வுக் குழுவில் இருந்த ஜெயக்குமார் கடலூர் எஸ்.பி. ஆக மாற்றப்பட்டதால் விசாரணையில் தொய்வு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, சிறப்பு புலனாய்வுக் குழுவில் இருந்த ஜெயக்குமாருக்கு பதிலாக திருச்சி சரக டி.ஐ.ஜி., தஞ்சை எஸ்.பி. ஆகியோரை, சிறப்பு புலனாய்வுக் குழுவில் கூடுதலாக நியமித்து விசாரணை மேற்கொள்ள சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தயாளு அம்மாள் மருத்துவமனையில் அனுமதி!

முதல்வர் மு. க. ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு திங்கள்கிழமை(மார்ச் 3) இரவு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து, சென்னையிலுள்ள ஒரு தனியார் மர... மேலும் பார்க்க

தமிழகத்தை நம்பர் ஒன் கடன்கார மாநிலமாக மாற்றியுள்ளது திமுக: அண்ணாமலை

தமிழகத்தை நம்பர் ஒன் கடன்கார மாநிலமாக திமுக மாற்றி வைத்திருக்கிறது என்று அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.கமிஷன் தொடர்பாக பாஜக தலைவர் அண்ணாமலை, அமைச்சர் தங்கம் தென்னரசு இடையே சமூக வலைதளத்தில் பரபரப்பான... மேலும் பார்க்க

தவெக சார்பில் இஃப்தார் நோன்பு: விஜய் பங்கேற்பு!

தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் மார்ச் 7 ஆம் தேதி நடைபெறவுள்ள இஃப்தார் நோன்பு நிகழ்ச்சியில் அக்கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்கவுள்ளார்.இது குறித்து தவெக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவ... மேலும் பார்க்க

உங்க கமிஷன் எவ்வளவு? மாறி மாறி குற்றம் சாட்டும் திமுக - பாஜக!

கமிஷன் தொடர்பாக பாஜக தலைவர் அண்ணாமலை, அமைச்சர் தங்கம் தென்னரசு இடையே சமூக வலைதளத்தில் பரபரப்பான காரசார விவாதம் இணையத்தில் வைரலாகி வருகிறது.தமிழக அரசு, மக்கள் மீது சுமத்தியுள்ள மொத்த கடன் 9.5 லட்சம் கோ... மேலும் பார்க்க

கோவை: மனைவியை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற கணவர் தற்கொலை!

சூலூர்: சூலூர் அருகே மனைவியை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு, அதே துப்பாக்கியால் கணவரும் சுட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.கோவை மாவட்டம் சூலூர் அருகே பட்டினம்புதூரில் வசிப்பவர் கிருஷ்ணகுமார் (வயது ... மேலும் பார்க்க

மார்ச் 8 முதல் பயன்பாட்டுக்கு வரும் பிங்க் ஆட்டோ!

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு வரும் மார்ச் 8 ஆம் தேதி முதல் பிங்க் ஆட்டோ திட்டம் பயன்பாட்டுக்கு வருகிறது.சென்னை மாநகரத்தில் பெண்களின் பாதுகாப்பினை உறுதி செய்திடும் விதமாகவும், பெண்களுக்கான சுயதொழில் வ... மேலும் பார்க்க