செய்திகள் :

கர்நாடகம்: அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் 3 பேர் பலி

post image

கர்நாடகத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் 3 பேர் பலியான நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம், கடக் மாவட்டத்தின் நரகுண்டா வட்டத்தில் உள்ள ஹுனாசிகட்டி கிராமத்தில் உள்ள பசவேஸ்வரா கோயில் அருகே அடையாளம் தெரியாத வாகனம் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.

இந்த சம்பவத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

அவர்கள் யமனப்பா மதரா(36), நிங்கப்பா கரியப்பா(45) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட மூன்றாவது நபர், மஞ்சுநாதகௌடா(40) ஹூப்ளியில் உள்ள கேஎம்சி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது, ​​சிகிச்சை பலனின்றி இறந்தார்.

நரகுண்டா காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து, விபத்துக்குள்ளான வாகனத்தை அடையாளம் காண விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் தகவல் தெரிந்தவர்கள் தாங்களாகவே முன் வந்து விசாரணைக்கு உதவுமாறு போலீஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

ஆஸ்கர் மேடையில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக எழுந்த குரல்!

இஸ்ரேல் - பாலஸ்தீன போரை நிறுத்தக் கோரி ஆஸ்கர் மேடையில் பிரபங்கள் பேசிய விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது. 2025-ம் ஆண்டுக்கான 97-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் ... மேலும் பார்க்க

அமைச்சர் ஜெய்சங்கருடன் பெல்ஜியம் இளவரசி சந்திப்பு!

இந்தியாவுக்கு வருகை தந்துள்ள பெல்ஜியம் இளவரசியை அமைச்சர் ஜெய்சங்கர் இன்று(மார்ச் 3) சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்.ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினரான பெல்ஜியம் நாட்டின் இளவரசி ஐரோப்பிய ஒன்றிய உயரதிகாரிகள் குழ... மேலும் பார்க்க

பார்வைத் திறன் குறைபாடுடையோரும் நீதிபதிகளாக நியமிக்கப்படத் தகுதியுடையவர்கள்! -உச்சநீதிமன்றம்

பார்வைத் திறனற்ற மாற்றுத்திறனாளிகளும் நீதிபதிகளாகத் தகுதியுடையோரே என்பதை மீண்டும் ஒருமுறை உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. உடல் குறைபாட்டை காரணம்காட்டி நீதியியல் துறையில் எந்த்வொரு நபருக்கும் பணி... மேலும் பார்க்க

ஐக்கிய அரபு அமீரகத்தில் உ.பி. பெண்ணுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்!

ஐக்கிய அரபு அமீரகத்தில், உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணுக்கு பிப்.15ஆம் தேதி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக, தில்லி உயர் நீதிமன்றத்தில் மத்திய வெளியுறவு விவகாரத் துறை தெரிவித்துள்ளது. மேலும் பார்க்க

காங்கிரஸ் பெண் தொண்டர் கொலை: அடுத்தடுத்து வெளியான அதிர்ச்சித் தகவல்!

ஹரியாணா மாநிலத்தில் காங்கிரஸ் பெண் தொண்டர் ஹிமானி நர்வால் கொலை வழக்கில் பல அதிர்ச்சித் தகவல்களை காவல்துறை வெளியிட்டுள்ளது.காங்கிரஸ் பெண் தொண்டர் கொலை வழக்கில் கைதான சச்சின், ஏற்கனவே திருமணமானவர் என்று... மேலும் பார்க்க

கேரளத்தில் 10ம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த துயரம்! ஒரு வாரத்தில் 2-வது பலி!!

கேரள மாநிலத்தில், கில்லன் பாரே சின்ட்ரோம் (ஜிபிஎஸ்) நோய்க்கு ஒரே வாரத்தில் இரண்டாவது நபர் பலியான சம்பவத்தால், அங்கு மக்கள் கவலை அடைந்துள்ளனர்.பத்தாம் வகுப்பு மாணவிக்கு கில்லன் பாரே சின்ட்ரோம் (ஜிபிஎஸ்... மேலும் பார்க்க