செய்திகள் :

ஜம்மு-காஷ்மீரில் குளுகுளு காலநிலை: சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி!

post image

ஜம்மு-காஷ்மீரின் வடக்கு மற்றும் மத்திய பகுதியில் கனமழையைத் தொடர்ந்து கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகின்றது. இதனால் வெப்பநிலை சுமார் ஐந்து டிகிரி செல்சியஸாக பதிவாகியுள்ளது.

இதற்கிடையில், ஜம்மு பகுதி, இமாச்சலப் பிரதேசத்தில் இடி, மின்னலுடன் கூடிய மழை மற்றும் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், பஞ்சாபில் ஆலங்கட்டி மழை பெய்யும் என்று அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

ஐம்மு-காஷ்மீரில் நிலவும் பனிப்பொழிவு காரணமாக மலைகள் வெண் போர்வை போர்த்தியதுபோல காட்சியளிக்கின்றன. இதனால் பள்ளத்தாக்கிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் மாறிவரும் வானிலையை மகிழ்ச்சியாக அனுபவித்து வருகின்றனர், பலர் குல்மார்க் போன்ற பிரபல இடங்களுக்குச் சென்று பனிப்பொழிவைக் கண்டு மகிழ்ந்தனர்.

இந்தாண்டு யூனியன் பிரதேசத்தில் கடந்த ஏழு நாள்களில் பெய்த மழை மற்றும் பனிப்பொழிவால் மக்களிடையே வறட்சி ஏற்படும் அச்சத்தைத் தணித்துள்ளது. ஆறுகள், ஓடைகள், ஏரிகள், நீரூற்றுகள் மற்றும் பிற நீர்நிலைகளில் நீர் மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது. ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் 50 நாள்கள் நீடித்த வறட்சி காரணமாக வறண்டு கிடந்த சில வற்றாத நீரூற்றுகளில் மீண்டும் தண்ணீர் வரத்து தொடங்கியுள்ளது.

'சில்லாய் கலன்' என்று அழைக்கப்படும் 40 நாள் நீண்ட கடுமையான குளிர்காலக் காலத்தில் ஏற்படும் இந்த பனிப்பொழிவுதான் மலைகளில் உள்ள வற்றாத நீர் தேக்கங்களை நிரப்புகிறது. பள்ளத்தாக்கில் உள்ள மக்களுக்குக் குடிப்பதற்கு உள்பட ஏராளமான தண்ணீரை வழங்குகிறது.

மும்பையைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி ஒருவர் தனது அனுபவத்தைச் செய்தியாளர்களிடம் பகிர்ந்து கொண்டார். நாங்கள் காஷ்மீரின் குளிரை அனுபவிக்க வந்துள்ளோம். இங்கு மிகவும் குளிராக இருக்கிறது. அவ்வப்போது மழையும் பெய்து வருகிறது. குல்மார்க்கில் பனிப்பொழிவைப் பார்க்கும் அதிர்ஷ்டம் எங்களுக்குக் கிடைத்தது, இது ஒரு நம்பமுடியாத அனுபவமாக இருந்தது. நாங்கள் இரண்டு நாள்கள் அங்கேயே தங்கியிருந்ததாக அவர் கூறினார். அனைவரும் நிச்சயமாக வர வேண்டிய ஓர் இடம் என்று அவர் கூறினார்.

காஷ்மீரில் குளிர்ந்த காலநிலையை மக்கள் அதிகம் விரும்புவதால், சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. படகு சவாரிகள், உள்ளூர் உணவு வகைகள் மற்றும் சுற்றிப் பார்ப்பதில் அதிக ஈடுபாடு செலுத்தி வருகின்றனர்.

இன்று காலை நிலவரப்படி, ஸ்ரீநகரில் 4.9 டிகிரி செல்சியஸ், குல்மார்க் -4.3 டிகிரி, பஹல்காம் -0.8 என குறைந்தபட்ச வெப்பநிலை பதிவாகியுள்ளது. ஜம்மு நகரில் 12.4 டிகிரி செல்சியஸ், கத்ரா நகரில் 7.8 டிகிரி, படோட் 4.7, பனிஹால் 3.6 மற்றும் பதேர்வா 3.4 டிகிரி குறைந்தபட்ச வெப்பநிலையாகவும் பதிவானது.

ஆஸ்கர் மேடையில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக எழுந்த குரல்!

இஸ்ரேல் - பாலஸ்தீன போரை நிறுத்தக் கோரி ஆஸ்கர் மேடையில் பிரபங்கள் பேசிய விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது. 2025-ம் ஆண்டுக்கான 97-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் ... மேலும் பார்க்க

அமைச்சர் ஜெய்சங்கருடன் பெல்ஜியம் இளவரசி சந்திப்பு!

இந்தியாவுக்கு வருகை தந்துள்ள பெல்ஜியம் இளவரசியை அமைச்சர் ஜெய்சங்கர் இன்று(மார்ச் 3) சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்.ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினரான பெல்ஜியம் நாட்டின் இளவரசி ஐரோப்பிய ஒன்றிய உயரதிகாரிகள் குழ... மேலும் பார்க்க

பார்வைத் திறன் குறைபாடுடையோரும் நீதிபதிகளாக நியமிக்கப்படத் தகுதியுடையவர்கள்! -உச்சநீதிமன்றம்

பார்வைத் திறனற்ற மாற்றுத்திறனாளிகளும் நீதிபதிகளாகத் தகுதியுடையோரே என்பதை மீண்டும் ஒருமுறை உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. உடல் குறைபாட்டை காரணம்காட்டி நீதியியல் துறையில் எந்த்வொரு நபருக்கும் பணி... மேலும் பார்க்க

ஐக்கிய அரபு அமீரகத்தில் உ.பி. பெண்ணுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்!

ஐக்கிய அரபு அமீரகத்தில், உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணுக்கு பிப்.15ஆம் தேதி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக, தில்லி உயர் நீதிமன்றத்தில் மத்திய வெளியுறவு விவகாரத் துறை தெரிவித்துள்ளது. மேலும் பார்க்க

காங்கிரஸ் பெண் தொண்டர் கொலை: அடுத்தடுத்து வெளியான அதிர்ச்சித் தகவல்!

ஹரியாணா மாநிலத்தில் காங்கிரஸ் பெண் தொண்டர் ஹிமானி நர்வால் கொலை வழக்கில் பல அதிர்ச்சித் தகவல்களை காவல்துறை வெளியிட்டுள்ளது.காங்கிரஸ் பெண் தொண்டர் கொலை வழக்கில் கைதான சச்சின், ஏற்கனவே திருமணமானவர் என்று... மேலும் பார்க்க

கேரளத்தில் 10ம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த துயரம்! ஒரு வாரத்தில் 2-வது பலி!!

கேரள மாநிலத்தில், கில்லன் பாரே சின்ட்ரோம் (ஜிபிஎஸ்) நோய்க்கு ஒரே வாரத்தில் இரண்டாவது நபர் பலியான சம்பவத்தால், அங்கு மக்கள் கவலை அடைந்துள்ளனர்.பத்தாம் வகுப்பு மாணவிக்கு கில்லன் பாரே சின்ட்ரோம் (ஜிபிஎஸ்... மேலும் பார்க்க