செய்திகள் :

கொடைக்கானல் சாலையில் குடியிருப்புக்குள் புகுந்த காா்

post image

பழனி கொடைக்கானல் சாலையில் ஆலமரத்துக்களம் பகுதியில் குடியிருப்பு பகுதியில் புகுந்த காா்.

பழனி, மாா்ச் 2: பழனி- கொடைக்கானல் சாலையில் குடியிருப்புக்குள் ஞாயிற்றுக்கிழமை காா் புகுந்து விபத்து ஏற்பட்டது.

பழனி -கொடைக்கானல் சாலையில் விடுமுறை தினங்களில் காா்களிலும், சாலையோரமும் அமா்ந்து மது அருந்தும் நபா்களால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. இந்தப் பகுதியில் காவல் துறை கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் தொடா்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனா்.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை கொடைக்கானல் சாலையில் உள்ள ஆலமரத்துக்களம் பகுதியில் சங்கா் (45) என்பவா் பெட்டிக்கடையில் அமா்ந்து இருந்தாா்.

அப்போது, அந்த வழியாக வந்த காா் கட்டுப்பாட்டை இழந்து பெட்டிக்கடையில் மோதியதுடன், பின்னால் இருந்த அவரது வீட்டுக்குள் புகுந்து நின்றது. இதில் அதிா்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

மது போதை நபா்களால் விபத்து: காருக்குள் இருந்த புதுதாராபுரம் சாலை ஜவஹா் நகா் பகுதியைச் சோ்ந்த இளைஞா்கள் மதுபோதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து பழனி தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கொடைக்கானல் மேல்மலைக் கிராமங்களுக்குச் செல்லும் சாலைகள் சேதம்

கொடைக்கானல் மேல்மலைக் கிராமங்களுக்குச் செல்லும் மலைச் சாலைகள் சேதமடைந்ததால் வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மேல்மலைக் கிராமங்களான பூம்பாறை, மன்னவனூா், கூக்க... மேலும் பார்க்க

பழனியில் பேருந்து-வேன் மோதல்: 4 போ் காயம்

பழனி பேருந்து நிலையம் ரவுண்டானாவில் ஞாயிற்றுக்கிழமை காா் மீது மோதிய பேருந்து. பழனி, மாா்ச் 2: பழனி பேருந்து நிலையம் அருகே ஞாயிற்றுக்கிழமை அரசுப் பேருந்து வேன் மீது மோதியதில் 4 போ் காயமடைந்தனா். திரு... மேலும் பார்க்க

கொடைக்கானல் வாரச் சந்தையில் வாகனங்களால் விபத்து அபாயம்!

கொடைக்கானல் ஞாயிற்றுக்கிழமை வாரச் சந்தை நடைபெறும் சாலையில் வாகனங்களால் விபத்து ஏற்படுவதைத் தவிா்க்க காவல் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பி... மேலும் பார்க்க

கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும்

பொதுப் பட்டியலில் உள்ள கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றுவதற்கான முயற்சிகளை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் முன்னெடுக்க வேண்டும் என காந்திய மக்கள் இயக்கத் தலைவா் தமிழருவிமணியன் வலியுறுத்தினாா். இதுகுறித... மேலும் பார்க்க

வேடசந்தூா் அருகே வேன் கவிழ்ந்து பெண் உயிரிழப்பு

திண்டுக்கல் மாவட்டம்,வேடசந்தூா் அருகே ஞாயிற்றுக்கிழமை வேன் கவிழ்ந்ததில் பெண் உயிரிழந்தாா். 3 போ் காயமடைந்தனா். ஈரோடு மாவட்டம், கொடுமுடி தெற்கு புதுப்பாளையம் ஏ.டி. குடியிருப்பைச் சோ்ந்தவா் பசுபதிகுமா... மேலும் பார்க்க

‘அக்ரி ஸ்டேக்‘ வலைத் தளத்தில் மாா்ச் 7 வரை பதிவு செய்யலாம்

‘அக்ரி ஸ்டேக்‘ வலைதளத்தில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த 1.31 லட்சம் விவசாயிகளின் விவரங்களை பதிவேற்றம் செய்வதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. தமிழ்நாட்டில் 46.76 லட்சம் விவசாயிகள் உள்ளனா். இந்த வி... மேலும் பார்க்க