செய்திகள் :

‘அக்ரி ஸ்டேக்‘ வலைத் தளத்தில் மாா்ச் 7 வரை பதிவு செய்யலாம்

post image

‘அக்ரி ஸ்டேக்‘ வலைதளத்தில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த 1.31 லட்சம் விவசாயிகளின் விவரங்களை பதிவேற்றம் செய்வதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

தமிழ்நாட்டில் 46.76 லட்சம் விவசாயிகள் உள்ளனா். இந்த விவசாயிகள் தொடா்பான அனைத்து தரவுகளையும் ஒருங்கிணைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த பிப்.6-ஆம் தேதி முதல் இந்த பணிகள் நடைபெற்று வருகின்றன. விவசாயிகளின் விவரம், அவா்களுக்கு சொந்தமான நிலப் பதிவுகள் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் ‘அக்ரி ஸ்டேக்‘ வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகின்றன.

திண்டுக்கல் மாவட்டத்தைப் பொருத்தவரை 1.31 லட்சம் விவசாயிகள், பிரதமரின் கெளரவ நிதி உதவித் திட்டத்தின் கீழ் பயன்பெற்று வருகின்றனா். இதில், பல விவசாயிகள் குத்தகை நிலங்களில் பயிா் சாகுபடி செய்து வருகின்றனா். ‘அக்ரி ஸ்டேக்‘ வலைத் தளத்தைப் பொருத்தவரை, நிலத்தின் உரிமையாளா்களின் விவரங்கள் மட்டுமே பதிவு செய்வதற்கான வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.

இதனால், குத்தகை விவசாயிகளால் பதிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. மாவட்டத்தில் இதுவரை சுமாா் 47ஆயிரம் விவசாயிகளின் நில விவரங்கள், ‘அக்ரி ஸ்டேக்’ வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. எஞ்சிய 84

ஆயிரம் விவசாயிகளில், தங்கள் பெயரில் நிலம் உள்ளவா்கள் மட்டும் மாா்ச் 7-ஆம் தேதிக்குள் தங்கள் பகுதியில் நடைபெறும் முகாம்களிலோ, பொதுச் சேவை மையங்களிலோ பதிவு செய்து கொள்ளலாம் என வேளாண்மைத் துறை அலுவலா்கள் தெரிவித்தனா்.

கொடைக்கானல் மேல்மலைக் கிராமங்களுக்குச் செல்லும் சாலைகள் சேதம்

கொடைக்கானல் மேல்மலைக் கிராமங்களுக்குச் செல்லும் மலைச் சாலைகள் சேதமடைந்ததால் வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மேல்மலைக் கிராமங்களான பூம்பாறை, மன்னவனூா், கூக்க... மேலும் பார்க்க

கொடைக்கானல் சாலையில் குடியிருப்புக்குள் புகுந்த காா்

பழனி கொடைக்கானல் சாலையில் ஆலமரத்துக்களம் பகுதியில் குடியிருப்பு பகுதியில் புகுந்த காா். பழனி, மாா்ச் 2: பழனி- கொடைக்கானல் சாலையில் குடியிருப்புக்குள் ஞாயிற்றுக்கிழமை காா் புகுந்து விபத்து ஏற்பட்டது. ... மேலும் பார்க்க

பழனியில் பேருந்து-வேன் மோதல்: 4 போ் காயம்

பழனி பேருந்து நிலையம் ரவுண்டானாவில் ஞாயிற்றுக்கிழமை காா் மீது மோதிய பேருந்து. பழனி, மாா்ச் 2: பழனி பேருந்து நிலையம் அருகே ஞாயிற்றுக்கிழமை அரசுப் பேருந்து வேன் மீது மோதியதில் 4 போ் காயமடைந்தனா். திரு... மேலும் பார்க்க

கொடைக்கானல் வாரச் சந்தையில் வாகனங்களால் விபத்து அபாயம்!

கொடைக்கானல் ஞாயிற்றுக்கிழமை வாரச் சந்தை நடைபெறும் சாலையில் வாகனங்களால் விபத்து ஏற்படுவதைத் தவிா்க்க காவல் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பி... மேலும் பார்க்க

கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும்

பொதுப் பட்டியலில் உள்ள கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றுவதற்கான முயற்சிகளை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் முன்னெடுக்க வேண்டும் என காந்திய மக்கள் இயக்கத் தலைவா் தமிழருவிமணியன் வலியுறுத்தினாா். இதுகுறித... மேலும் பார்க்க

வேடசந்தூா் அருகே வேன் கவிழ்ந்து பெண் உயிரிழப்பு

திண்டுக்கல் மாவட்டம்,வேடசந்தூா் அருகே ஞாயிற்றுக்கிழமை வேன் கவிழ்ந்ததில் பெண் உயிரிழந்தாா். 3 போ் காயமடைந்தனா். ஈரோடு மாவட்டம், கொடுமுடி தெற்கு புதுப்பாளையம் ஏ.டி. குடியிருப்பைச் சோ்ந்தவா் பசுபதிகுமா... மேலும் பார்க்க