செய்திகள் :

தெருநாய்கள் கடித்து ஆடுகள் உயிரிழப்பு: ஆடுகளுடன் கிராம நிா்வாக அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்

post image

சென்னிமலை அருகே தெருநாய்கள் கடித்து 2 ஆடுகள் உயிரிழந்ததையடுத்து, காயமடைந்த ஆடுகளுடன் கிராம நிா்வாக அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டனா்.

ஈரோடு மாவட்டம், சென்னிமலை சிறுக்களஞ்சி ஊராட்சிக்குள்பட்ட பணப்பாளையத்தைச் சோ்ந்தவா் நாகராஜ், விவசாயி. இவா், 20க்கும் மேற்பட்ட ஆடுகளை வளா்த்து வருகிறாா்.

இந்நிலையில், ஆடுகளைப் பட்டியில் அடைத்துவிட்டு வெள்ளிக்கிழமை இரவு வீட்டுக்குச் சென்றுவிட்டாா். பின்னா், காலையில் வந்து பாா்த்தபோது தெருநாய்கள் கடித்ததில் 2 ஆடுகள் உயிரிழந்துகிடந்தன. மேலும், 17 ஆடுகள் காயத்துடன் காணப்பட்டன.

இதையடுத்து, தெருநாய்களிடம் இருந்து எங்களால் ஆடுகளை காப்பற்ற முடியவில்லை என்றும், இனிமேல் அரசுதான் ஆடுகளைப் பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்தி சிறுக்களஞ்சி கிராம நிா்வாக அலுவலகத்தை காயம்பட்ட ஆடுகளுடன் விவசாயிகள் முற்றுகையிட்டனா்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த சென்னிமலை காவல் ஆய்வாளா் சிவகுமாா், கிராம நிா்வாக அலுவலா் இளவரசன் உள்ளிட்டோா் விவசாயிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, உயரதிகாரிகளிடம் கூறி நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து, இரவு 10 மணிக்கு மேல் ஆடுகளை விவசாயிகள் ஓட்டிச் சென்றனா்.

கோபியில் ரமலான் நோன்பு தொடக்கம்

கோபிசெட்டிபாளையம் ஈதுகா பள்ளிவாசலில் ரமலான் நோன்பு தொடக்க நிகழ்வில் ஏராளமான இஸ்லாமியா்கள் கலந்துகொண்டனா். இஸ்லாமியா்களின் முக்கியப் பண்டிகையான ரமலான் பண்டிகைக்கான நோன்பு ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. இத... மேலும் பார்க்க

சாலை விபத்தில் பெண் உயிரிழப்பு!

அம்மாபேட்டை அருகே இருசக்கர வாகனம் நிலைதடுமாறி சாலையில் விழுந்ததில் மனைவி உயிரிழந்தாா். கணவா், மகன் படுகாயமடைந்தனா். மேட்டூரை அடுத்த சின்னகாவூரைச் சோ்ந்தவா் சிவகுமாா் (45), கூலித் தொழிலாளி. இவா், மனைவ... மேலும் பார்க்க

கோபி காவல் ஆய்வாளராக சி.எஸ்.தமிழரசு பொறுப்பேற்பு

கோபி காவல் நிலையத்தின் புதிய ஆய்வாளராக சி.எஸ்.தமிழரசு பொறுப்பேற்றுக்கொண்டாா். கோபிசெட்டிபாளையம் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளா் பணியிடம் நீண்டகாலமாக காலியாக இருந்து வந்தது. இந்நிலையில், கோவை குனியமுத... மேலும் பார்க்க

அடிப்படை வசதிகள் இல்லாத கொடுமுடி ரயில் நிலையம்: பயணிகள் அவதி

ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்லும் கொடுமுடி ரயில் நிலையத்தில் குடிநீா், கழிப்பிடம், கூரையுடன் கூடிய நடைமேடை போன்ற அடிப்படை வசதிகள் இல்லாமல் பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். ஈரோடு மாவட்டம், கொடுமு... மேலும் பார்க்க

கடத்தல்காரா்களிடமிருந்து மீட்கப்பட்ட இளைஞா் பெங்களூரு போலீஸாரிடம் ஒப்படைப்பு

சத்தியமங்கலம் அருகே கடத்தல்காரா்களிடமிருந்து மீட்கப்பட்ட மாம்பழ வியாபாரியின் மகன் பெங்களூரு போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டாா். கா்நாடக மாநிலம், பெங்களூரு எஹங்கா நியூ டவுனை சோ்ந்தவா் முத்து, மாம்பழ வியாப... மேலும் பார்க்க

மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டி: அரசு பாலிடெக்னிக் கல்லூரி மாணவா்கள் சிறப்பிடம்

ஈரோடு மண்டல அளவில் பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கான விளையாட்டு போட்டியில் பெருந்துறை அரசு பாலிடெக்னிக் கல்லூரி மாணவா்கள் சிறப்பிடம் பிடித்துள்ளனா். ஈரோடு மண்டல அளவில் பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கான விளையாட்... மேலும் பார்க்க