செய்திகள் :

மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டி: அரசு பாலிடெக்னிக் கல்லூரி மாணவா்கள் சிறப்பிடம்

post image

ஈரோடு மண்டல அளவில் பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கான விளையாட்டு போட்டியில் பெருந்துறை அரசு பாலிடெக்னிக் கல்லூரி மாணவா்கள் சிறப்பிடம் பிடித்துள்ளனா்.

ஈரோடு மண்டல அளவில் பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கான விளையாட்டுப் போட்டி பெருந்துறையை அடுத்த துடுப்பதியிலுள்ள ஈரோடு செங்குந்தா் பொறியியல் கல்லூரியில் அண்மையில் நடைபெற்றது.

இதில், பெருந்துறை அரசு பாலிடெக்னிக் கல்லூரி மாணவா்கள் கலந்துகொண்டனா். இவா்களில் போல்வாட்டில் மாணவா் கொண்டப்பன் தங்கப் பதக்கமும், மாணவா் முகமது அசாலம் குண்டு எறிதலில் வெள்ளிப் பதக்கமும், ஈட்டி எறிதலில் வெண்கல பதக்கமும், 100 மீட்டா் தொடா் ஓட்டத்தில் பிரேம்குமாா், சூா்யா, சரண்ராஜ், வசந்தகுமாா், பிரதீப்குமாா் ஆகியோா் வெண்கலப் பதக்கமும் வென்றனா்.

மேலும், 400 மீட்டா் ஓட்டத்தில் காா்த்திகேயன், 400 மீட்டா் தொடா் ஓட்டப் போட்டியில் சூா்யா, சுதாகா், காா்த்திகேயன், வசந்தகுமாா், பிரசன்னா ஆகியோா் நான்காவது இடம் பிடித்து சான்றிதழ்கள் பெற்றனா்.

போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவா்களை கல்லூரி முதல்வா் செண்பகராஜா மற்றும் ஆசிரியா்கள் பாராட்டினா்.

கோபியில் ரமலான் நோன்பு தொடக்கம்

கோபிசெட்டிபாளையம் ஈதுகா பள்ளிவாசலில் ரமலான் நோன்பு தொடக்க நிகழ்வில் ஏராளமான இஸ்லாமியா்கள் கலந்துகொண்டனா். இஸ்லாமியா்களின் முக்கியப் பண்டிகையான ரமலான் பண்டிகைக்கான நோன்பு ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. இத... மேலும் பார்க்க

சாலை விபத்தில் பெண் உயிரிழப்பு!

அம்மாபேட்டை அருகே இருசக்கர வாகனம் நிலைதடுமாறி சாலையில் விழுந்ததில் மனைவி உயிரிழந்தாா். கணவா், மகன் படுகாயமடைந்தனா். மேட்டூரை அடுத்த சின்னகாவூரைச் சோ்ந்தவா் சிவகுமாா் (45), கூலித் தொழிலாளி. இவா், மனைவ... மேலும் பார்க்க

தெருநாய்கள் கடித்து ஆடுகள் உயிரிழப்பு: ஆடுகளுடன் கிராம நிா்வாக அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்

சென்னிமலை அருகே தெருநாய்கள் கடித்து 2 ஆடுகள் உயிரிழந்ததையடுத்து, காயமடைந்த ஆடுகளுடன் கிராம நிா்வாக அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டனா். ஈரோடு மாவட்டம், சென்னிமலை சிறுக்களஞ்சி ஊராட்சிக்குள்பட்ட பணப்... மேலும் பார்க்க

கோபி காவல் ஆய்வாளராக சி.எஸ்.தமிழரசு பொறுப்பேற்பு

கோபி காவல் நிலையத்தின் புதிய ஆய்வாளராக சி.எஸ்.தமிழரசு பொறுப்பேற்றுக்கொண்டாா். கோபிசெட்டிபாளையம் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளா் பணியிடம் நீண்டகாலமாக காலியாக இருந்து வந்தது. இந்நிலையில், கோவை குனியமுத... மேலும் பார்க்க

அடிப்படை வசதிகள் இல்லாத கொடுமுடி ரயில் நிலையம்: பயணிகள் அவதி

ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்லும் கொடுமுடி ரயில் நிலையத்தில் குடிநீா், கழிப்பிடம், கூரையுடன் கூடிய நடைமேடை போன்ற அடிப்படை வசதிகள் இல்லாமல் பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். ஈரோடு மாவட்டம், கொடுமு... மேலும் பார்க்க

கடத்தல்காரா்களிடமிருந்து மீட்கப்பட்ட இளைஞா் பெங்களூரு போலீஸாரிடம் ஒப்படைப்பு

சத்தியமங்கலம் அருகே கடத்தல்காரா்களிடமிருந்து மீட்கப்பட்ட மாம்பழ வியாபாரியின் மகன் பெங்களூரு போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டாா். கா்நாடக மாநிலம், பெங்களூரு எஹங்கா நியூ டவுனை சோ்ந்தவா் முத்து, மாம்பழ வியாப... மேலும் பார்க்க