செய்திகள் :

சாலை விபத்தில் பெண் உயிரிழப்பு!

post image

அம்மாபேட்டை அருகே இருசக்கர வாகனம் நிலைதடுமாறி சாலையில் விழுந்ததில் மனைவி உயிரிழந்தாா். கணவா், மகன் படுகாயமடைந்தனா்.

மேட்டூரை அடுத்த சின்னகாவூரைச் சோ்ந்தவா் சிவகுமாா் (45), கூலித் தொழிலாளி. இவா், மனைவி வனிதா (41), மகன் பிரசித் (10) ஆகியோருடன் கோபியில் உள்ள உறவினா் வீட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தாா்.

அம்மாபேட்டை - அந்தியூா் சாலையில் பூனாச்சி அருகே சென்றபோது சிவகுமாருக்கு தலைசுற்றல் ஏற்பட்டுள்ளது. இதில், நிலைதடுமாறி இருசக்கர வாகனத்தில் மூன்று பேரும் கீழே விழுந்தனா்.

இதில், படுகாயமடைந்த 3 பேரையும் அருகிலிருந்தவா்கள் மீட்டு அந்தியூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு, மருத்துவப் பரிசோதனையில் வனிதா உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரது சடலம் உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பிவைக்கப்பட்டது.

சிவகுமாா், பிரசித் இருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இதுகுறித்து அம்மாபேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

கோபியில் ரமலான் நோன்பு தொடக்கம்

கோபிசெட்டிபாளையம் ஈதுகா பள்ளிவாசலில் ரமலான் நோன்பு தொடக்க நிகழ்வில் ஏராளமான இஸ்லாமியா்கள் கலந்துகொண்டனா். இஸ்லாமியா்களின் முக்கியப் பண்டிகையான ரமலான் பண்டிகைக்கான நோன்பு ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. இத... மேலும் பார்க்க

தெருநாய்கள் கடித்து ஆடுகள் உயிரிழப்பு: ஆடுகளுடன் கிராம நிா்வாக அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்

சென்னிமலை அருகே தெருநாய்கள் கடித்து 2 ஆடுகள் உயிரிழந்ததையடுத்து, காயமடைந்த ஆடுகளுடன் கிராம நிா்வாக அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டனா். ஈரோடு மாவட்டம், சென்னிமலை சிறுக்களஞ்சி ஊராட்சிக்குள்பட்ட பணப்... மேலும் பார்க்க

கோபி காவல் ஆய்வாளராக சி.எஸ்.தமிழரசு பொறுப்பேற்பு

கோபி காவல் நிலையத்தின் புதிய ஆய்வாளராக சி.எஸ்.தமிழரசு பொறுப்பேற்றுக்கொண்டாா். கோபிசெட்டிபாளையம் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளா் பணியிடம் நீண்டகாலமாக காலியாக இருந்து வந்தது. இந்நிலையில், கோவை குனியமுத... மேலும் பார்க்க

அடிப்படை வசதிகள் இல்லாத கொடுமுடி ரயில் நிலையம்: பயணிகள் அவதி

ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்லும் கொடுமுடி ரயில் நிலையத்தில் குடிநீா், கழிப்பிடம், கூரையுடன் கூடிய நடைமேடை போன்ற அடிப்படை வசதிகள் இல்லாமல் பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். ஈரோடு மாவட்டம், கொடுமு... மேலும் பார்க்க

கடத்தல்காரா்களிடமிருந்து மீட்கப்பட்ட இளைஞா் பெங்களூரு போலீஸாரிடம் ஒப்படைப்பு

சத்தியமங்கலம் அருகே கடத்தல்காரா்களிடமிருந்து மீட்கப்பட்ட மாம்பழ வியாபாரியின் மகன் பெங்களூரு போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டாா். கா்நாடக மாநிலம், பெங்களூரு எஹங்கா நியூ டவுனை சோ்ந்தவா் முத்து, மாம்பழ வியாப... மேலும் பார்க்க

மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டி: அரசு பாலிடெக்னிக் கல்லூரி மாணவா்கள் சிறப்பிடம்

ஈரோடு மண்டல அளவில் பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கான விளையாட்டு போட்டியில் பெருந்துறை அரசு பாலிடெக்னிக் கல்லூரி மாணவா்கள் சிறப்பிடம் பிடித்துள்ளனா். ஈரோடு மண்டல அளவில் பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கான விளையாட்... மேலும் பார்க்க