செய்திகள் :

நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்க இடைக்கால ஜாமீன் கோரி எம்பி ரஷீத் மனு!

post image

ஜம்மு-காஷ்மீரில் நடைபெற உள்ள நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்காக இடைக்கால ஜாமீன் கோரி ஜம்மு-காஷ்மீரின் பாராமுல்லா தொகுதி எம்.பி. ஷேக் அப்துல் ரஷீத் தில்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

பொறியாளரும், அவாமி இதிஹாத் கட்சித்தலைவருமான அப்துல் ரஷீத் கடந்த

ல் பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி திரட்டியதாக சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

இதையடுத்து, கடந்த 2019-ஆம் ஆண்டு திகாா் சிறையில் அடைக்கப்பட்ட அவா், சிறையில் இருந்துகொண்டே நிகழாண்டு மக்களவைத் தோ்தலில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றாா். ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தின் தற்போதைய முதல்வா் ஒமா் அப்துல்லாவை அத்தேர்தலில் அவா் தோற்கடித்தார்.

இந்த நிலையில், வரவிருக்கும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் கலந்து கொள்வதற்காக, பயங்கரவாத நிதியுதவி வழக்கில் இடைக்கால ஜாமீன் கோரி தில்லி நீதிமன்றத்தில் ரஷீத் மனு தாக்கல் செய்துள்ளார்.

கூடுதல் அமர்வு நீதிபதி சந்தர் ஜித் சிங் தேசிய புலனாய்வு முகமை (NIA) மார்ச் 5 ஆம் தேதிக்குள் தனது பதிலை தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.

பிப்ரவரி 27 ஆம் தேதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பம், ரஷீத் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்றும், அவர் தனது பொதுக் கடமையை நிறைவேற்ற வரவிருக்கும் கூட்டத்தொடரில் கலந்துகொள்ள வேண்டும் என்றும் கூறி நிவாரணம் கோரியது.

ரஷீத்தின் வழக்கமான ஜாமீன் மனு தற்போது நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் தற்போது இடைக்கால ஜாமீன் கோரி ரஷீத் தில்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் பகுதி மார்ச் 10 தொடங்கி ஏப்ரல் 4 ஆம் தேதி நிறைவடைகின்றது.

ஆஸ்கர் மேடையில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக எழுந்த குரல்!

இஸ்ரேல் - பாலஸ்தீன போரை நிறுத்தக் கோரி ஆஸ்கர் மேடையில் பிரபங்கள் பேசிய விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது. 2025-ம் ஆண்டுக்கான 97-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் ... மேலும் பார்க்க

அமைச்சர் ஜெய்சங்கருடன் பெல்ஜியம் இளவரசி சந்திப்பு!

இந்தியாவுக்கு வருகை தந்துள்ள பெல்ஜியம் இளவரசியை அமைச்சர் ஜெய்சங்கர் இன்று(மார்ச் 3) சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்.ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினரான பெல்ஜியம் நாட்டின் இளவரசி ஐரோப்பிய ஒன்றிய உயரதிகாரிகள் குழ... மேலும் பார்க்க

பார்வைத் திறன் குறைபாடுடையோரும் நீதிபதிகளாக நியமிக்கப்படத் தகுதியுடையவர்கள்! -உச்சநீதிமன்றம்

பார்வைத் திறனற்ற மாற்றுத்திறனாளிகளும் நீதிபதிகளாகத் தகுதியுடையோரே என்பதை மீண்டும் ஒருமுறை உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. உடல் குறைபாட்டை காரணம்காட்டி நீதியியல் துறையில் எந்த்வொரு நபருக்கும் பணி... மேலும் பார்க்க

ஐக்கிய அரபு அமீரகத்தில் உ.பி. பெண்ணுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்!

ஐக்கிய அரபு அமீரகத்தில், உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணுக்கு பிப்.15ஆம் தேதி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக, தில்லி உயர் நீதிமன்றத்தில் மத்திய வெளியுறவு விவகாரத் துறை தெரிவித்துள்ளது. மேலும் பார்க்க

காங்கிரஸ் பெண் தொண்டர் கொலை: அடுத்தடுத்து வெளியான அதிர்ச்சித் தகவல்!

ஹரியாணா மாநிலத்தில் காங்கிரஸ் பெண் தொண்டர் ஹிமானி நர்வால் கொலை வழக்கில் பல அதிர்ச்சித் தகவல்களை காவல்துறை வெளியிட்டுள்ளது.காங்கிரஸ் பெண் தொண்டர் கொலை வழக்கில் கைதான சச்சின், ஏற்கனவே திருமணமானவர் என்று... மேலும் பார்க்க

கேரளத்தில் 10ம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த துயரம்! ஒரு வாரத்தில் 2-வது பலி!!

கேரள மாநிலத்தில், கில்லன் பாரே சின்ட்ரோம் (ஜிபிஎஸ்) நோய்க்கு ஒரே வாரத்தில் இரண்டாவது நபர் பலியான சம்பவத்தால், அங்கு மக்கள் கவலை அடைந்துள்ளனர்.பத்தாம் வகுப்பு மாணவிக்கு கில்லன் பாரே சின்ட்ரோம் (ஜிபிஎஸ்... மேலும் பார்க்க