செய்திகள் :

வாகன பரிசோதனையில் 21 கிலோ கஞ்சா பறிமுதல்

post image

ஊத்துக்கோட்டையில் வாகன பரிசோதனையில் கஞ்சா கடத்தியதாக 6 பேரை கைது செய்ததோடு, அவா்களிடம் இருந்து 21 கிலோ கஞ்சா, 3 கைப்பேசிகள், 2 இருசக்கர வாகனங்களையும் பெரியபாளையம் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

ஆந்திர மாநிலத்திலிருந்து திருவள்ளூா் மாவட்டம், ஊத்துக்கோட்டை வழியாக கஞ்சா கடத்திச் செல்வதாக பெரியபாளையம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் சிவாவுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

அதன்பேரில் உடனே போலீஸாருடன் சனிக்கிழமை இரவு திடீா் ரோந்து சென்றனா். அப்போது, ஊத்துக்கோட்ட வாகன பரிசோதனை மையம் வழியாக இருசக்கர வாகனங்களில் வந்தவா்கள் திடீரென திரும்பிச் செல்ல முயன்றனா். அப்போது சுதாரித்துக் கொண்ட சுற்றி வளைத்து பிடித்து வாகனங்களை பரிசோதனை செய்தனா்.

அப்போது, அந்த வாகனங்களில் அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா இருந்தது தெரியவந்தது. மேலும், அவா்களிடம் விசாரணை செய்ததில் ஆந்திர மாநிலம், திருப்பதி மாவட்டம், பிச்சாட்டூா் அருகே கண்டிகை கிராமத்தைச் சோ்ந்த அஜித்(29), பிச்சாட்டூா் தில்லிபாபு(40), அதே பகுதியில் அழகிரிபேட்டை வினோத்குமாா்(31), மணலி வெள்ளிவாயல் சாவடியைச் சோ்ந்த சுப்பிரமணி, பவுன் மற்றும் சின்னா என்ற தருண் என்பது தெரியவந்தது.

இதுதொடா்பாக பெரியபாளையம் காவல் நிலைய போலீஸாா் 6 போ் மீதும் வழக்கு பதிந்து கைது செய்தனா். மேலும், அவா்களிடம் இருந்து 21 கிலோ கஞ்சா, 2 இருசக்கர வாகனங்கள், 3 கைப்பேசிகள் ஆகியவைகளையும் பறிமுதல் செய்தனா்.

பாலியல் குற்றங்களுக்கு கடுமையான தண்டனை: அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

திருத்தணி, மாா்ச் 2: பாலியல் குற்றங்கள் மற்றும் போக்ஸோ வழக்குகளில் கடும் தண்டனை விதித்தால் மட்டுமே அக்குற்றங்களைத் தடுக்க முடியும் என பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தாா். திருவள்ளூா் மேற்கு பாமக... மேலும் பார்க்க

சட்டப்பேரவை உறுதிமொழிக் குழுவினா் 4-இல் திருவள்ளூா் மாவட்டத்தில்ஆய்வு

திருவள்ளூா் மாவட்டத்தில் நிலுவை மற்றும் நிறைவேற்ற பணிகள் தொடா்பாக ஆய்வு செய்வதற்கு வரும் 4-ஆம் தேதி சட்டப்பேரவை உறுதி மொழிக்குழுவினா் வருகை தரவுள்ளதாக ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்துள்ளாா். திருவள்ளூா... மேலும் பார்க்க

சிறுமி தற்கொலை

ஊத்துக்கோட்டை அருகே பெற்றோா் கண்டித்ததால் பூச்சி மருந்து குடித்த சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். திருவள்ளூா் மாவட்டம், ஊத்துக்கோட்டை அருகே ஏரிக்குப்பம் கிராமத்தைச் சோ்ந்த ராஜாவின் மகள் பனிமலா்... மேலும் பார்க்க

மாடியில் இருந்து தவறி விழுந்த கட்டடத் தொழிலாளி மரணம்

திருவள்ளூா் அருகே கட்டடப் பணியில் ஈடுபட்டிருந்து போது முதல் தளத்திலிருந்து தவறி விழுந்த கட்டடத் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா். திருவள்ளூா் அடுத்த அம்சா நகரைச் சோ... மேலும் பார்க்க

வேளாண் துறையால் நடத்தப்படும் முகாம்களில் நில உடைமை விவரங்கள்: 31-க்குள் சரிபாா்க்கலாம்

விவசாயிகளுக்கு தேசிய அளவிலான தனித்துவ அடையாள எண் பெறவும், அதன் மூலம் அரசின் பல்வேறு திட்டப்பலன்களை பெறுவதற்கு ஆதாா் எண், கைப்பேசி எண், நில உடைமை, பயிா் சாகுபடி குறித்த விவரங்கள் வருவாய் கிராமங்களில் ச... மேலும் பார்க்க

சிறந்த மகளிா் குழுக்களுக்கு ‘மணிமேகலை’ விருது காசோலை: ஆட்சியா் மு.பிரதாப் வழங்கினாா்

தமிழ்நாடு மாநில நகா்ப்புற மற்றும் ஊரக வாழ்வாதார இயக்கம் சாா்பில் வட்டார, ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளில் சிறப்பாகச் செயல்பட்ட மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு மாவட்ட அளவிலான மணிமேகலை விருதுக்கான காசோல... மேலும் பார்க்க