செய்திகள் :

சிறுமலை: வெடிமருந்துடன் ஆண் சடலம் மீட்கப்பட்ட விவகாரம்; துப்பு துலக்கிய போலீஸ்!

post image

திண்டுக்கல் மாவட்டம், சிறுமலை 17 ஆவது கொண்டை ஊசி வளைவு பகுதி அருகே புதருக்குள் ஒரு ஆண் சடலம் கிடந்தது. போலீஸார், வனத்துறையினர் விசாரிக்க சென்றபோது அருகே கிடந்த பேட்டரி, ஒயர்கள், வெடி மருந்து கிடந்துள்ளது. சடலத்தை தூக்க முயன்றபோது, அருகே கிடந்த பொருள் திடீரென வெடித்ததது. இதில் போலீஸார் கார்த்தி, மணி, வனத்துறையினர் செல்வ ஆரோக்கியராஜ் ஆகியோர் காயமடைந்தனர்.

பலியான கேரள நபர்

சிறுமலை பகுதியில் மாவோயிஸ்ட்கள் நடமாட்டம் இருப்பதாக தகவல் பரவி வந்தது. இந்நிலையில் ஒருவர் உயிரிழந்த கிடக்க அவர் அருகே பேட்டரி, வெடிமருந்து கிடந்ததால் மாவோயிஸ்ட்கள் நடமாட்டம் இருக்குமோ என்ற சந்தேகத்தை எழுப்பியது. இதனைக் கருத்தில் கொண்டு போலீஸார் விசாரணையை தொடங்கினர். ஆனால் உயிரிழந்தவர் பற்றிய தகவலால் போலீஸார் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.

இதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி. பிரதீப், ``இவ்வழக்கு விசாரணைக்காக 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. விசாரணையில் உயிரிழந்த நபர் கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்த ஜான்சாபு 60 என்பது தெரியவந்தது. இவருக்கு மனைவி மற்றும் 3 பெண் குழந்தைகள் உள்ளனர். பெண் பிள்ளைகள் 3 பேரும் வெளிநாட்டில் வேலை செய்து வருகின்றனர். ஜான்சாபு கோட்டயத்தில் லாரி டிரைவராக வேலை செய்து வந்துள்ளார். குடிபழக்கம் இருந்ததால் குடும்பத்தில் அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வந்துள்ளது.

சிறுமலை

இதனால் ஒரு தோப்பை குத்தகைக்கு எடுத்து நடத்த திண்டுக்கல் சிறுமலைக்கு வந்துள்ளார். கேரளாவில் இருந்து வரும்போது பாறைகளை தகர்ப்பதற்காக வெடிமருந்து வாங்கி வந்துள்ளார். அந்த வெடிமருந்தை பயன்படுத்த முயற்சித்தபோது அவர் காயமடைந்து இறந்திருக்கலாம் எனத் தெரியவருகிறது. அவரின் சொந்த ஊரிலும் அவர் தொடர்புடைய நபர்களிடமும் விசாரித்தபோதும் அவர் மீது வேறுவிதமான தொடர்புகளோ, புகார்களோ இல்லை என்பது தெரியவந்துள்ளது" என்றார்.

`549 கிராம் தங்கம்; 1 கிலோ கஞ்சா!’ - திருச்சி விமான நிலையத்தில் தொடர் கதையாகும் கடத்தல் சம்பவம்!

பேங்காக்கிலிருந்து ஏர் ஏசியா விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வந்த பயணிகளை வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்பொழுது, சந்தேகத்திற்கிடமான வகையில் இருந்த ஒரு பெண் பயணியை... மேலும் பார்க்க

Haryana: 'நஷ்டமான தொழில்... காப்பீட்டுத் தொகையைப் பெறக் கொலை' - சினிமா பாணி சம்பவம்; என்ன நடந்தது?

ஹரியானா மாநிலம் ஹிசாரைச் சேர்ந்தவர் ராம்மெஹர். கொரோனா பேரிடர் காலத்திற்கு முன்பு, தொழிற்சாலை நடத்தி வந்த இவர், லாக் டவுனின் போது இவரது தொழிற்சாலை பெரும் நஷ்டத்தைச் சந்தித்துள்ளது. அதனால், அவரது கடன் அ... மேலும் பார்க்க

அம்பத்தூர்: பேட்மிட்டன் பயிற்சியாளர் கொலை வழக்கில் மூவர் சரண்; விசாரணையில் வெளியான பகீர் பின்னணி

அம்பத்தூர் டீச்சர் காலனியைச் சேர்ந்தவர் தினேஷ்பாபு. பேட்மிட்டன் பயிற்சியாளரான இவர், தந்தையின் கட்டிட ஒப்பந்த வேலைகளையும் கவனித்து வந்தார். மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தினேஷ்பாபு தனியாக... மேலும் பார்க்க

Seeman : சீமானிடம் கேட்கப்பட்ட கேள்விகள்; வீடியோ பதிவு - சமரசம் பேசியவர்களை விசாரிக்க முடிவு?

ஆஜரான சீமான்நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும் நடிகருமான சீமான் மீது நடிகை பாலியல் புகாரை கடந்த 2011-ம் ஆண்டு கொடுத்தார். அதன்பேரில் சீமான் மீது பாலியல் வன்கொடுமை, மோசடி உள்பட 6 பிரிவுகளின... மேலும் பார்க்க

Tamannaah: கிரிப்டோகரன்சி மோசடி வழக்கு; தமன்னாவிற்குத் தொடர்பா? விசாரிக்க புதுச்சேரி போலீஸ் திட்டம்

நடிகை தமன்னா பாடியா கிரிப்டோகரன்சி மோசடியில் ஈடுபட்டு இருப்பதாகச் செய்தி வெளியாகி இருக்கிறது.ரூ.2.4 கோடி கிரிப்டோகரன்சி மோசடியில் ஈடுபட்டு இருப்பதாகவும், இது தொடர்பாக அவரிடம் பாண்டிச்சேரி போலீஸார் விச... மேலும் பார்க்க

சிறுமலை: புதருக்குள் ஆண் சடலம்; அருகே கிடந்த பொருள் வெடித்ததில் போலீஸார் காயம்; நடந்தது என்ன?

திண்டுக்கல் மாவட்டத்தின் குட்டிக்கொடைக்கானல் என்றழைக்கப்படும் சிறுமலையில் 18 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. இதில் 17 ஆவது கொண்டை ஊசி வளைவில் உள்ள வாட்ச்சிங் டவர் அருகே காட்டுப்பகுதியில் துர்நாற்றம் வீசியத... மேலும் பார்க்க