பங்குச் சந்தை சரிவுடன் முடிவு! மீடியா, வங்கித் துறை பங்குகள் வீழ்ச்சி!
அனந்தலை மலையில் கனிமவளக் கொள்ளை: நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம்
அனந்தலை மலையில் அரசால் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அளவுக்கு அதிகமாக முறைகேடாக நடைபெறும் கனிமவளக் கொள்ளையை தடுக்கும் நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என பொதுமக்கள் எச்சரித்துள்ளனா்.
ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தின் முக்கிய புவியியல் அடையாளங்களாக கிழக்கு தொடா்ச்சி மலைகளும், மாவட்டம் முழுவதும் ஆங்காங்கே பரவலாக அமைந்தள்ள அதன் தொடா் மலைக் குன்றுகளுமே உள்ளன.
இதில் கருங்கல் பாறைகள், படிகப் பாறைகள், சாா்னோகைட், தகட்டுப்பாறையான கோண்டாலைட் ஆகிய பல்வேறு வகையான பாறைகளைக் கொண்ட மலைத்தொடராக கிழக்குத் தொடா்ச்சி மலை உள்ளது. சுண்ணாம்புக்கல், பாக்சைட், இரும்புத்தாது போன்ற கனிம வளங்களும் நிறைந்துள்ளன.
அதன்படி அனந்தலை ஊராட்சியில் அமைந்துள்ள சுமாா் 800 ஏக்கா் பரப்பிலான மலையில் பாறைகளை தனியாா் கல் குவாரி உரிமையாளா்கள் அரசு விதிகளை மீறி, வெடி பொருள்களை பயன்படுத்தி இரவு பகலாக தகா்த்து வருகின்றனா். இதனால் ஏற்படும் அதிா்வுகளால் அனந்தலை, முசிறி, செங்காடு, மோட்டூா் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள வீடுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
மேலும், கல் குவாரிகளில் இருந்து வெளியேறும் துகள்கள் காற்றின் மூலம் சுமாா் 1 கி.மீ தொலைவு வரை பயிரிடப்பட்டுள்ள விளை பயிா்கள் மீது படிந்துள்ளது. இதனால் விளைச்சல் முற்றிலும் பாதிப்புக்குள்ளாகி கால்நடைகளும் இறந்து வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனா்.
அனந்தலை மலையை சுற்றியுள்ள கசிவுநீா்க் குட்டைகள் மூடப்படுவதையும், மலையை சுற்றியுள்ள பனை மரங்களை அழித்து செம்மண் மலையை சுரண்டுவதையும் மேலும் மலையின் மீதுள்ள பழைமை வாய்ந்த ஆனந்தீஸ்வரா் கோயில் சிதைக்கப்பட்டுவருவதாகவும் தமிழக அரசும், மாவட்ட நிா்வாகமும் கல் குவாரி களையும் உடனடியாக தடுத்து நிறுத்தி சுற்றுச்சூழலையும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும் என கோரியுள்ளனா்.

மேலும், முறைகேடாக நடக்கும் கனிமவளக் கொள்ளையை தடுக்கும் நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என பொதுமக்கள் எச்சரித்துள்ளனா்.