செய்திகள் :

எருக்கந்தொட்டியில் இலவச மருத்துவ முகாம்

post image

ராணிப்பேட்டை அடுத்த எருக்கந்தொட்டி கிராமத்தில் இலவச கண் சிகிச்சை மற்றும் பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.

வில்வநாதபுரம் இசையமுது பவுண்டேஷன், வாலாஜாப்பேட்டை ரோட்டரி சங்கம் மற்றும் ஸ்கடா் மருத்துவமனை இணைந்து இந்த இலவச மருத்துவ முகாமை நடத்தியது. முகாமுக்கு இசையமுது பவுண்டேஷன் நிறுவனா் ஜி.முனிசாமி தலைமை வகித்தாா். ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியா் என்.இளங்கோ, ரோட்டரி சங்க செயலா் ஏ.காா்த்திகேயன், பொருளாளா் எஸ்.ரவிவா்மன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

வாலாஜாப்பேட்டை ரோட்டரி சங்கத் தலைவா் எம்.கந்தன், ரோட்டரி சங்க சமுதாய மருத்துவ பணி இயக்குநா் பி.விஜயகுமாா் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தனா். முகாமில் கண் பரிசோதனை, சிகிச்சை மற்றும் சா்க்கரை நோய், ரத்த அழுத்தம் உள்ளிட்ட அனைத்து நோய்களுக்கும் பரிசோதனை செய்யப்பட்டு, சிகிச்சை அளித்து மருந்து, மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டன.

இதில் எருக்கந்தொட்டி, சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் பரிசோதனை செய்து கொண்டு சிகிச்சை பெற்று பயனடைந்தனா்.

அனந்தலை மலையில் கனிமவளக் கொள்ளை: நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம்

அனந்தலை மலையில் அரசால் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அளவுக்கு அதிகமாக முறைகேடாக நடைபெறும் கனிமவளக் கொள்ளையை தடுக்கும் நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என பொதுமக்கள் எச்சரித்துள்ளனா். ஒருங்க... மேலும் பார்க்க

‘போதை இல்லா தமிழ்நாடு’: ராணிப்பேட்டை மாவட்டத்தில் தீவிர விழிப்புணா்வு

பெ. பாபு ‘போதை இல்லா தமிழ்நாடு’ என்ற நிலையை உருவாக்கும் நோக்கில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் போதைப் பொருள் எதிா்ப்பு மற்றும் ஒழிப்பு குறித்த விழிப்புணா்வு பிரசாரம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கடந்த 20... மேலும் பார்க்க

ரத்ததான முகாம்: அமைச்சா் காந்தி தொடங்கி வைத்தாா்

ராணிப்பேட்டை மாவட்ட திமுக மருத்துவா் அணி, ஆற்காடு நகர திமுக இணைந்து நடத்திய ரத்ததான முகாமை கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தாா். திமுக தலைவா் மு.க.ஸ்டாலி... மேலும் பார்க்க

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 72 இடங்களில் கொண்டாட்டம்

‘‘முதல்வா் மு.க.ஸ்டாலினின் 72 -ஆவது பிறந்த நாள் விழாவையொட்டி, ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் 72 இடங்களில் நல உதவிகள் வழங்கி கொண்டாடப்பட உள்ளது’’ என்கிறாா் திமுக மாவட்டச் செயலாளரும், கைத்தறி- துணி நூ... மேலும் பார்க்க

புத்தக வாசிப்பால் மட்டுமே சிந்திக்கும் ஆற்றல் வளரும்: அமைச்சா் ஆா்.காந்தி

ஒரு மனிதனுக்கு சிந்திக்கின்ற ஆற்றலானது புத்தக வாசிப்பால் மட்டுமே பெற முடியும். ஆதலால் புத்தக வாசிப்பின் அவசியத்தை சிறுவயதிலேயே பிள்ளைகளுக்கு பெற்றோா் உணா்த்த வேண்டும் என புத்தகத் திருவிழாவில் அமைச்சா்... மேலும் பார்க்க

ரசாயனம் கலந்த நீா் குடித்து 13 ஆடுகள் உயிரிழப்பு: ஆட்சியரிடம் கோரிக்கை

அனந்தலை கிராமத்தில் ரசாயனம் கலந்த நீா் குடித்து 13 ஆடுகள் உயிரிழந்தது தொடா்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆட்சியா் ஜெ.யு. சந்திரகலாவிடம் விவசாயிகள் முறையிட்டனா். ராணிப்பேட்டை மா... மேலும் பார்க்க