செய்திகள் :

அயோத்தி.. கூட்டம் குறைந்தாலும் குறையாத சிக்கல்! உதவிக்கு வந்த ஜேசிபிக்கள்!!

post image

அயோத்தி ராமர் கோயிலில் பக்தர்கள் கூட்டம் குறைந்தாலும், மாநகராட்சி புதிய பிரச்னையை சந்தித்து வருகின்றது.

உத்தரப் பிரதேசத்தின் அயோத்தியில் கடந்த 2024 ஜனவரி 22ல் ராமர் கோயிலில் ஸ்ரீ ராமரின் சிலை பிராணப் பிரதிஷ்டை செய்யப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இந்த விழா நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ராமர் கோயிலில் தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் ஸ்ரீ ராமரை தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த ஒரு மாதக் காலமாக அயோத்தி ராமர் கோயிலுக்கு வரும் பக்தர்களால் மாநகராட்சி நிர்வாகம் புதிய பிரச்னையை சந்தித்து வருகின்றது. கோயிலுக்கு வரும் பக்தர்களில் பெரும்பாலானவர்கள் தங்களின் காலணிகளை கோயிலின் நுழைவுவாயிலிலேயே விட்டுச் செல்கின்றனர்.

கோயிலில் எங்குப் பார்த்தாலும் காலணிகளாகவே உள்ளதாகவும், கடந்த ஒரு மாதத்தில் மட்டும் லட்சத்துக்கும் மேற்பட்ட காலணிகளை மாநகராட்சி நிர்வாகம் அகற்றியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. அதற்கான காரணம் தான் என்ன என்று அதிகாரிகள் விசாரித்ததில் கோயில் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கோயில் அதிகாரிகள் கூறுவதாவது,

மகா கும்பமேளாவைத் தொடர்ந்து அயோத்தி ராமர் கோயிலில் திரளானா பக்தர்கள் குவிந்து வருகின்றனர். இந்தநிலையில் ராமர் கோயிலின் முதல் நுழைவுவாயிலில் உள்ளே வரும் பக்தர்கள் தங்களின் காலணிகளை அங்கேயே விட்டுவிட்டுச் செல்கின்றனர். அதன்பின்னர் கோயிலைச் சுற்றிப்பார்த்து தரிசனம் முடித்த பிறகு சுமார் அரை கி.மீ நடந்து சுற்றுப்பாதையை முடிக்கின்றனர். மீண்டும் தங்கள் காலணிகளைச் சேகரிக்க அதே முதல் நுழைவுவாயிலுக்கு வரவேண்டிய சூழல் நிலவுகிறது.

பக்தர்கள் கூட்டம் கடந்த சில நாள்களாக அதிகரித்து வருவதால், ராமரை தரிசித்துவிட்டு பக்தர்கள் மூன்றாவது நுழைவுவாயிலில் வெளியேறுமாறு கோயில் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. பக்தர்கள் தங்கள் காலணியைச் சேகரிக்க மீண்டும் ராமர் வழித்தடத்தில் அதாவது சுமார் 5 - 6 கிலோ மீட்டர் தூரம் நடந்துசெல்ல வேண்டியுள்ளது. இதன் காரணமாக பக்தர்கள் தங்கள் காலணிகளை அங்கேயே விட்டுவிட்டுச் செல்கின்றனர். இதுவே லட்சக்கணக்கான காலணிகள் குவிந்ததற்கு காரணம் என்கின்றனர் அதிகாரிகள்.

பக்தர்களின் கூட்டம் அதிகரிப்பால் நுழைவுவாயில் மாற்றி அனுப்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக ராமர் கோயில் அறக்கட்டளையின் அறங்காவலர் அனில் மிஸ்ரா கூறினார். தினமும் பக்தர்கள் விட்டுச்சென்ற காலணிகளை ஜேசிபி இயந்திரங்களைப் பயன்படுத்தி காலணி குவியலை அகற்றி டிராலிகளில் ஏற்றி வருவதாகவும் அவர் கூறினார்.

தொடர் நஷ்டத்தில் ஓலா: 1,000 பணியாளர்களை வேலையிலிருந்து நீக்க நடவடிக்கை!

ஓலா நிறுவனம் சுமார் 1,000 பணியாளர்களை வேலையிலிருந்து நீக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.மின்சார வாகன தயாரிப்புகளில் முன்னணி நிறுவனங்களுள் ஒன்றான ஓலா எலக்ட்ரிக் மொபிலிட்டி லிமிடட்., நிறுவனத்தின் தலை... மேலும் பார்க்க

ஆஸ்கர் மேடையில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக எழுந்த குரல்!

இஸ்ரேல் - பாலஸ்தீன போரை நிறுத்தக் கோரி ஆஸ்கர் மேடையில் பிரபங்கள் பேசிய விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது. 2025-ம் ஆண்டுக்கான 97-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் ... மேலும் பார்க்க

அமைச்சர் ஜெய்சங்கருடன் பெல்ஜியம் இளவரசி சந்திப்பு!

இந்தியாவுக்கு வருகை தந்துள்ள பெல்ஜியம் இளவரசியை அமைச்சர் ஜெய்சங்கர் இன்று(மார்ச் 3) சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்.ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினரான பெல்ஜியம் நாட்டின் இளவரசி ஐரோப்பிய ஒன்றிய உயரதிகாரிகள் குழ... மேலும் பார்க்க

பார்வைத் திறன் குறைபாடுடையோரும் நீதிபதிகளாக நியமிக்கப்படத் தகுதியுடையவர்கள்! -உச்சநீதிமன்றம்

பார்வைத் திறனற்ற மாற்றுத்திறனாளிகளும் நீதிபதிகளாகத் தகுதியுடையோரே என்பதை மீண்டும் ஒருமுறை உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. உடல் குறைபாட்டை காரணம்காட்டி நீதியியல் துறையில் எந்த்வொரு நபருக்கும் பணி... மேலும் பார்க்க

ஐக்கிய அரபு அமீரகத்தில் உ.பி. பெண்ணுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்!

ஐக்கிய அரபு அமீரகத்தில், உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணுக்கு பிப்.15ஆம் தேதி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக, தில்லி உயர் நீதிமன்றத்தில் மத்திய வெளியுறவு விவகாரத் துறை தெரிவித்துள்ளது. மேலும் பார்க்க

காங்கிரஸ் பெண் தொண்டர் கொலை: அடுத்தடுத்து வெளியான அதிர்ச்சித் தகவல்!

ஹரியாணா மாநிலத்தில் காங்கிரஸ் பெண் தொண்டர் ஹிமானி நர்வால் கொலை வழக்கில் பல அதிர்ச்சித் தகவல்களை காவல்துறை வெளியிட்டுள்ளது.காங்கிரஸ் பெண் தொண்டர் கொலை வழக்கில் கைதான சச்சின், ஏற்கனவே திருமணமானவர் என்று... மேலும் பார்க்க