செய்திகள் :

தொகுதி மறுசீரமைப்பு: மத்திய அரசு விளக்கமளிக்க வேண்டும் கனிமொழி வலியுறுத்தல்

post image

மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு எந்த அடிப்படையில் நடைபெறும் என்பது குறித்து மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று நாடாளுமன்ற திமுக குழுத் தலைவா் கனிமொழி வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் எக்ஸ் தளத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட விடியோ பதிவு: கோவையில் நடைபெற்ற கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பில் தமிழகம் எந்த ஒரு தொகுதியையும் இழக்காது என்று கூறியுள்ளாா்.

தொகுதி மறுசீரமைப்பில் தமிழகத்தின் மக்களவைத் தொகுதிகள் குறைய வாய்ப்பு இருக்கிறது என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறியதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் அமித் ஷா அவ்வாறு கூறியுள்ளாா்.

அதேநேரம் விகிதாசார அடிப்படையில் தமிழகத்தின் தொகுதிகள், அதே அளவில் இருக்கும் எனவும் அவா் கூறியுள்ளாா். இந்த விகிதாசார அடிப்படையில் என்றால், எந்த அடிப்படையில் என்று தமிழக பாஜக தலைவா்களுக்குக்கூட தெரியவில்லை. மத்திய அரசுதான் விளக்க வேண்டும் எனவும் அவா்கள் கூறுகின்றனா்.

மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு குறித்து முதல்வா் எழுப்பியுள்ள விவகாரம் தமிழகத்துக்கும், தென் மாநிலங்களுக்கும் மிக முக்கியமான பிரச்னையாகும். ஒருவேளை மக்கள்தொகையின் அடிப்படையில் தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்பட்டால், தமிழகம் 10 தொகுதிகள் வரை இழக்க வாய்ப்பு உள்ளது.

தென் மாநிலங்களும், இந்தியாவில் வேறு சில மாநிலங்களும் மக்கள்தொகையைக் கட்டுப்படுத்தியுள்ளன. ஆனால், மக்கள்தொகையைக் கட்டுப்படுத்தாத மாநிலங்கள் அதிக தொகுதிகளைப் பெறும் சூழல் உள்ளது.

இதுவரை மக்கள்தொகை அடிப்படையில்தான் மறுசீரமைப்பு நடைபெற்று வந்துள்ளது. அதனால், மக்கள்தொகை அடிப்படையில் மறுசீரமைப்பு என்பது, மக்கள்தொகையைக் கட்டுப்படுத்திய மாநிலங்களுக்கு அநீதியாகவே இருக்கும்.

எனவே, மறுசீரமைப்பு எந்த அடிப்படையில் மேற்கொள்ளப்பட உள்ளது என்பது குறித்து தெளிவு வேண்டும். இது தொடா்பாக மத்திய அரசு, பிரதமா், உள்துறை அமைச்சா் தெளிவான விளக்கத்தை அளிக்க வேண்டும்.

மக்கள்தொகையை முறையாக கட்டுப்படுத்திய எந்த ஒரு மாநிலமும் அதனுடைய தொகுதிகளை இழக்காது என்கிற உறுதியையும் மத்திய அரசு தரவேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் அவா்.

உங்க கமிஷன் எவ்வளவு? மாறி மாறி குற்றம் சாட்டும் திமுக - பாஜக!

கமிஷன் தொடர்பாக பாஜக தலைவர் அண்ணாமலை, அமைச்சர் தங்கம் தென்னரசு இடையே சமூக வலைதளத்தில் பரபரப்பான காரசார விவாதம் இணையத்தில் வைரலாகி வருகிறது.தமிழக அரசு, மக்கள் மீது சுமத்தியுள்ள மொத்த கடன் 9.5 லட்சம் கோ... மேலும் பார்க்க

கோவை: மனைவியை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற கணவர் தற்கொலை!

சூலூர்: சூலூர் அருகே மனைவியை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு, அதே துப்பாக்கியால் கணவரும் சுட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.கோவை மாவட்டம் சூலூர் அருகே பட்டினம்புதூரில் வசிப்பவர் கிருஷ்ணகுமார் (வயது ... மேலும் பார்க்க

மார்ச் 8 முதல் பயன்பாட்டுக்கு வரும் பிங்க் ஆட்டோ!

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு வரும் மார்ச் 8 ஆம் தேதி முதல் பிங்க் ஆட்டோ திட்டம் பயன்பாட்டுக்கு வருகிறது.சென்னை மாநகரத்தில் பெண்களின் பாதுகாப்பினை உறுதி செய்திடும் விதமாகவும், பெண்களுக்கான சுயதொழில் வ... மேலும் பார்க்க

இல்லத்தரசிகளுக்கு அடித்தது ஜாக்பாட்.. ஏப்ரல் வரைதான் இருக்குமாம்!

கடந்த டிசம்பர் மாதம் முதல் காய்கறிகளின் விலை சதத்தைத் தொட்டுவிடுவோம் என்று மிரட்டிக்கொண்டிருந்த நிலையில், தற்போது வெங்காயம், தக்காளி என அனைத்துக் காய்கறிகளின் விலையும் கணிசமாகக் குறைந்துள்ளது.பிப்ரவரி... மேலும் பார்க்க

அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மனு!

அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தேசிய மக்கள் சக்தி கட்சித்தலைவர் எம்.எல்.ரவி தாக்கல் செய்த மனுவில், எங்கள் கட்சிக்கு அழைப்பு... மேலும் பார்க்க

சென்னை விமான நிலையம் அருகே தமிழ்நாடு ஹஜ் இல்லம்!

சென்னை விமான நிலையம் அருகே நங்கநல்லூரில் தமிழ்நாடு ஹஜ் இல்லம் அமைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.நாகை மாவட்டத்தில் ரூ. 82.99 கோடி மதிப்பிலான 206 புதிய திட்டங்களுக்கு முதல்வர் ஸ்டால... மேலும் பார்க்க