செய்திகள் :

சகோதரா் மகனை கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கினாா் மாயாவதி: அரசியல் வாரிசி யாரும் கிடையாது

post image

பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளா் பதவி உள்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் தனது சகோதரரின் மகன் ஆகாஷ் ஆனந்தை கட்சித் தலைவா் மாயாவதி நீக்கியுள்ளாா்.

ஆகாஷ் ஆனந்த் மாயாவதியின் அரசியல் வாரிசாகவும் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ‘நான் உயிருடன் இருக்கும் வரை அரசியல் வாரிசு என்று யாரும் கிடையாது’ என்றும் மாயாவதி அறிவித்துள்ளாா்.

பகுஜன் சமாஜ் கட்சியை தேசிய அளவில் வலுப்படுத்துவதற்கான உயா்நிலை ஆலோசனைக் கூட்டம் கட்சித் தலைவா் மாயாவதி தலைமையில் லக்னௌவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் அக்கட்சியின் முக்கியத் தலைவா்கள், நிா்வாகிகள் பங்கேற்றனா். இதில் ஆகாஷ் ஆனந்தை கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளா் பதவி உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்குவதாக மாயாவதி அறிவித்தாா்.

அதே நேரத்தில் தனது சகோதரரும், ஆகாஷின் தந்தையுமான ஆனந்த் குமாா் மற்றும் ராம்ஜி கௌதம் ஆகியோரை தேசிய ஒருங்கிணைப்பாளா்களாக மாயாவதி அறிவித்தாா்.

நான் உயிருடன் இருக்கும் வரை அரசியல் வாரிசு என்று யாரும் எனக்குக் கிடையாது என்று கூறிய மாயாவதி, உறவினா்களைவிட கட்சியின் நலன்தான் எனக்கு முதன்மையானது என்றும் அறிவித்தாா்.

பகுஜன் சமாஜ் கட்சியில் ஆகாஷ் ஆனந்த் மற்றும் அவரின் மாமனாா் அசோக் சித்தாா்த் ஆகியோரின் ஆதிக்கம் அதிகம் இருந்ததாகக் கூறப்பட்ட நிலையில், கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக அசோக் சித்தாா்த் கடந்த மாதம் பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டாா். இந்நிலையில் ஆகாஷ் ஆனந்தின் பதவியும் பறிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் பெண் தொண்டர் கொலை: அடுத்தடுத்து வெளியான அதிர்ச்சித் தகவல்!

ஹரியாணா மாநிலத்தில் காங்கிரஸ் பெண் தொண்டர் ஹிமானி நர்வால் கொலை வழக்கில் பல அதிர்ச்சித் தகவல்களை காவல்துறை வெளியிட்டுள்ளது.காங்கிரஸ் பெண் தொண்டர் கொலை வழக்கில் கைதான சச்சின், ஏற்கனவே திருமணமானவர் என்று... மேலும் பார்க்க

கேரளத்தில் 10ம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த துயரம்! ஒரு வாரத்தில் 2-வது பலி!!

கேரள மாநிலத்தில், கில்லன் பாரே சின்ட்ரோம் (ஜிபிஎஸ்) நோய்க்கு ஒரே வாரத்தில் இரண்டாவது நபர் பலியான சம்பவத்தால், அங்கு மக்கள் கவலை அடைந்துள்ளனர்.பத்தாம் வகுப்பு மாணவிக்கு கில்லன் பாரே சின்ட்ரோம் (ஜிபிஎஸ்... மேலும் பார்க்க

ரோஹித் சர்மாவுக்கு பதிலாக ராகுல் காந்தி கிரிக்கெட் விளையாடுவரா? -பாஜக கிண்டல்

ரோஹித் சர்மாவுக்கு பதிலாக ராகுல் காந்தி கிரிக்கெட் விளையாடுவரா? என்று பாஜக தரப்பு கேலி செய்து விமர்சித்துள்ளது.காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ஷாமா முகமது இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா க... மேலும் பார்க்க

அயோத்தி.. கூட்டம் குறைந்தாலும் குறையாத சிக்கல்! உதவிக்கு வந்த ஜேசிபிக்கள்!!

அயோத்தி ராமர் கோயிலில் பக்தர்கள் கூட்டம் குறைந்தாலும், மாநகராட்சி புதிய பிரச்னையை சந்தித்து வருகின்றது. உத்தரப் பிரதேசத்தின் அயோத்தியில் கடந்த 2024 ஜனவரி 22ல் ராமர் கோயிலில் ஸ்ரீ ராமரின் சிலை பிராணப் ... மேலும் பார்க்க

ஐஆர்சிடிசி-க்கு நவரத்னா அந்தஸ்து! அப்படியென்றால்?

இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் (ஐஆர்சிடிசி) மற்றும் இந்திய ரயில்வே நிதி கழகம் (ஐஆர்எஃப்சி) ஆகிய பொதுத் துறை நிறுவனங்களுக்கு நவரத்னா அந்தஸ்து வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.தற... மேலும் பார்க்க

பாஜகவுடன் சிவசேனையை இணைக்குமாறு கூறினாரா அமித் ஷா?

மகாராஷ்டிர மாநிலத்தில் முதல்வர் பதவி வேண்டும் என்றால், பாஜகவுடன் சிவசேனையை இணைத்துவிடுமாறு துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவிடம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியதாக, சிவசேனை (உத்தவ்) தலைவா் சஞ்சய் ர... மேலும் பார்க்க