செய்திகள் :

பாஜகவுடன் சிவசேனையை இணைக்குமாறு கூறினாரா அமித் ஷா?

post image

மகாராஷ்டிர மாநிலத்தில் முதல்வர் பதவி வேண்டும் என்றால், பாஜகவுடன் சிவசேனையை இணைத்துவிடுமாறு துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவிடம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியதாக, சிவசேனை (உத்தவ்) தலைவா் சஞ்சய் ரௌத் கூறியிருக்கிறார்.

மகாராஷ்டிர மாநிலத்தில் முதல்வராக பதவியேற்றிருக்கும் தேவேந்திர பட்னவீஸ், தன்னை ஓரம்கட்டிவருவதாக, கடந்த பிப்.22ஆம் தேதி அமித் ஷாவை நேரில் சந்தித்த துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே புகார் கொடுத்திருப்பார்.

அதற்கு, அமித் ஷாவோ, பாஜகவுடன் சிவசேனையை இணைத்துவிடுங்கள். பிறகு முதல்வர் பதவியைக் கேளுங்கள் என்று கூறியிருப்பதாக சஞ்சய் ரௌத், சாம்னாவில் எழுதிய கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

ஷிண்டேவின் அரசியல் எதிர்காலம் மற்றும் பாஜகவின் உள் மாநில தலைவர்கள் மற்றும் தேசிய தலைவர்களுக்கு இடையேயான சமநிலை போன்றவை குறித்தும் சாம்னா கேள்வி எழுப்பியிருக்கிறது.

இந்த கூற்றுக்கு, ஷிண்டேவும், மற்றொரு துணை முதல்வருமான அஜித் பவார், இது நகைச்சுவைக்குரியது என்று கருத்துத் தெரிவித்தள்ளனர்.

முன்னாள் முதல்வரும், இன்னாள் துணை முதல்வருமான ஷிண்டேவை ஓரம்கட்டும் பணியை பட்னவீஸ் வெளிப்படையாகவே செய்து வருகிறார். இருவருக்குள்ளும் பனிப்போர் மூண்டிருக்கும் நிலையில், அமித் ஷாவை ஷிண்டே சந்தித்தது, புகார் பட்டியல் வாசிக்கத்தான் என்று கூறப்பட்டது.

இந்த சந்திப்பின்போது, தன்னை முதல்வராக்குவதாக வாக்குறுதி அளித்துத்தானே கூட்டணி அமைத்தீர்கள் என்று ஷிண்டே கேட்டிருக்கலாம், அதற்கு, 132 தொகுதிகளை பாஜக வென்றுவிட்டு, வேறு கட்சித்தலைவரை எப்படி முதல்வராக்க முடியும் என்றும், பாஜகவுடன் சிவசேனையை இணைத்துவிட்டு வந்து முதல்வர் பதவியைக் கேளுங்கள் என்றும் அமித் ஷா கூறியிருப்பார் என்றும் அந்த சாம்னா கட்டுரை விவரிக்கிறது.

மகாராஷ்டிரத்தில் ஆளும் பாஜக கூட்டணியில் உள்ள சிவசேனை மற்றும் தேசியவாத காங்கிரஸ் முறையே கடந்த 2022 மற்றும் 2023, ஜூலையில் இரு அணிகளாகப் பிரிந்தன. ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனையையும் அஜீத் பவாா் தலைமையிலான தேசியவாத காங்கிரஸையும் தோ்தல் ஆணையம் அங்கீகரித்தது.

கடந்த ஆண்டு நவம்பரில் நடைபெற்ற தோ்தலில், இவ்விரு கட்சிகளுடன் இணைந்து பாஜக தோ்தலைச் சந்தித்தது. தோ்தல் முடிவில், பாஜக கூட்டணி அசுர பலத்துடன் ஆட்சியைக் கைப்பற்றியது. ஏக்நாத் ஷிண்டே, அஜீத் பவாா் துணை முதல்வராகினா்.

முந்தைய ஆட்சியில் முதல்வராக இருந்த ஏக்நாத் ஷிண்டேவுக்கும் தற்போதைய முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸுக்கும் கருத்து மோதல் நிலவுவதாக தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வருகின்றன.

தொடர் நஷ்டத்தில் ஓலா: 1,000 பணியாளர்களை வேலையிலிருந்து நீக்க நடவடிக்கை!

ஓலா நிறுவனம் சுமார் 1,000 பணியாளர்களை வேலையிலிருந்து நீக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.மின்சார வாகன தயாரிப்புகளில் முன்னணி நிறுவனங்களுள் ஒன்றான ஓலா எலக்ட்ரிக் மொபிலிட்டி லிமிடட்., நிறுவனத்தின் தலை... மேலும் பார்க்க

ஆஸ்கர் மேடையில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக எழுந்த குரல்!

இஸ்ரேல் - பாலஸ்தீன போரை நிறுத்தக் கோரி ஆஸ்கர் மேடையில் பிரபங்கள் பேசிய விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது. 2025-ம் ஆண்டுக்கான 97-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் ... மேலும் பார்க்க

அமைச்சர் ஜெய்சங்கருடன் பெல்ஜியம் இளவரசி சந்திப்பு!

இந்தியாவுக்கு வருகை தந்துள்ள பெல்ஜியம் இளவரசியை அமைச்சர் ஜெய்சங்கர் இன்று(மார்ச் 3) சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்.ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினரான பெல்ஜியம் நாட்டின் இளவரசி ஐரோப்பிய ஒன்றிய உயரதிகாரிகள் குழ... மேலும் பார்க்க

பார்வைத் திறன் குறைபாடுடையோரும் நீதிபதிகளாக நியமிக்கப்படத் தகுதியுடையவர்கள்! -உச்சநீதிமன்றம்

பார்வைத் திறனற்ற மாற்றுத்திறனாளிகளும் நீதிபதிகளாகத் தகுதியுடையோரே என்பதை மீண்டும் ஒருமுறை உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. உடல் குறைபாட்டை காரணம்காட்டி நீதியியல் துறையில் எந்த்வொரு நபருக்கும் பணி... மேலும் பார்க்க

ஐக்கிய அரபு அமீரகத்தில் உ.பி. பெண்ணுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்!

ஐக்கிய அரபு அமீரகத்தில், உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணுக்கு பிப்.15ஆம் தேதி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக, தில்லி உயர் நீதிமன்றத்தில் மத்திய வெளியுறவு விவகாரத் துறை தெரிவித்துள்ளது. மேலும் பார்க்க

காங்கிரஸ் பெண் தொண்டர் கொலை: அடுத்தடுத்து வெளியான அதிர்ச்சித் தகவல்!

ஹரியாணா மாநிலத்தில் காங்கிரஸ் பெண் தொண்டர் ஹிமானி நர்வால் கொலை வழக்கில் பல அதிர்ச்சித் தகவல்களை காவல்துறை வெளியிட்டுள்ளது.காங்கிரஸ் பெண் தொண்டர் கொலை வழக்கில் கைதான சச்சின், ஏற்கனவே திருமணமானவர் என்று... மேலும் பார்க்க