செய்திகள் :

Tamannaah: கிரிப்டோகரன்சி மோசடி வழக்கு; தமன்னாவிற்குத் தொடர்பா? விசாரிக்க புதுச்சேரி போலீஸ் திட்டம்

post image

நடிகை தமன்னா பாடியா கிரிப்டோகரன்சி மோசடியில் ஈடுபட்டு இருப்பதாகச் செய்தி வெளியாகி இருக்கிறது.

ரூ.2.4 கோடி கிரிப்டோகரன்சி மோசடியில் ஈடுபட்டு இருப்பதாகவும், இது தொடர்பாக அவரிடம் பாண்டிச்சேரி போலீஸார் விசாரிக்க இருப்பதாகவும் செய்தி வெளியானது. ஆனால் அதனை தமன்னா திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தியில், "கிரிப்டோகரன்சி வர்த்தகத்தில் நான் ஈடுபடுவதாகவும், அதில் மோசடி செய்துவிட்டதாகவும் வதந்தி பரவிக்கொண்டிருக்கிறது. இது போன்ற தவறான செய்தியை வெளியிடவேண்டாம் என்று மீடியா நண்பர்களிடம் கேட்டுக்கொள்கிறேன். இது தொடர்பாக வெளியாகி இருக்கும் செய்தி முற்றிலும் பொய்யானது. அச்செய்திக்கு எதிராக நான் சட்டப்பூர்வமா நடவடிக்கை எடுக்க இருக்கிறேன்'' என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.

தமன்னா

பாண்டிச்சேரியைச் சேர்ந்த அசோகன் என்ற ஓய்வுபெற்ற ராணுவ வீரர் கோயம்புத்தூரைச் சேர்ந்த ஒரு நிறுவனத்தில் கிரிப்டோகரன்சியில் ஒரு கோடி ரூபாய் முதலீடு செய்ததாகவும் அதனை ஏமாற்றிவிட்டதாக போலீஸில் புகார் செய்துள்ளார். அசோகன் தனது நண்பர்கள் சிலரிடம் பேசி அவர்களையும் 1.4 கோடி அளவுக்கு கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்யும்படி கேட்டுக்கொண்டுள்ளார்.

கோயம்புத்தூர் கம்பெனியின் தொடக்க விழாவில் நடிகை தமன்னா கலந்து கொண்டார். அதோடு அக்கம்பெனியின் மகாபலிபுரம் நிகழ்ச்சியிலும் தமன்னாவும், நடிகை காஜோலும் கலந்து கொண்டனர். மகாபலிபுரம் நிகழ்ச்சியில் 100 முதலீட்டாளர்களுக்கு ரூ.10 லட்சம் முதல் 1 கோடி வரையிலான கார்கள் கிப்டாக கொடுக்கப்பட்டது.

எனவே நிகழ்ச்சியின் தமன்னாவும், காஜோலும் விளம்பரத் தூதர்களாகக் கலந்து கொண்டார்களா அல்லது அவர்களும் கோயம்புத்தூர் கம்பெனியோடு சேர்ந்து கிரிப்டோகரன்சி வர்த்தகத்தில் ஈடுபட்டனரா என்பது குறித்து விளக்கம் கேட்க போலீஸார் முடிவு செய்துள்ளனர். காஜோல் இப்புகார் குறித்து இன்னும் விளக்கம் கொடுக்கவில்லை.

வணக்கம் வாசகர்களே விகடனின் லேட்டஸ்ட் செய்தி அப்டேட்கள், எக்ஸ்க்ளூசிவ் வீடியோக்கள், சுட சுட சுவாரஸ்யமான கட்டுரைகள் என உங்களை எப்போதும் ட்ரெண்டியாக வைத்திருக்க விகடன் வாட்ஸ்அப் சேனலில் இணைந்திருங்கள்.

Click here: https://bit.ly/VikatanWAChannel

சிறுமலை: புதருக்குள் ஆண் சடலம்; அருகே கிடந்த பொருள் வெடித்ததில் போலீஸார் காயம்; நடந்தது என்ன?

திண்டுக்கல் மாவட்டத்தின் குட்டிக்கொடைக்கானல் என்றழைக்கப்படும் சிறுமலையில் 18 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. இதில் 17 ஆவது கொண்டை ஊசி வளைவில் உள்ள வாட்ச்சிங் டவர் அருகே காட்டுப்பகுதியில் துர்நாற்றம் வீசியத... மேலும் பார்க்க

புனே பாலியல் கொடூரம்: கரும்பு தோட்டத்தில் மறைந்திருந்த குற்றவாளி; மோப்ப நாய், ட்ரோன் உதவியுடன் கைது!

புனே ஸ்வர்கேட் பகுதியில் இருக்கும் அரசு பேருந்து நிலையத்தில், பேருந்துக்காகக் காத்திருந்த பெண் தனியாக நிறுத்தப்பட்டிருந்த பேருந்தில் வைத்துப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். அதிகாலையில் நடந்த இந்தச்... மேலும் பார்க்க

சீமான் மீதான வழக்கு: சம்மன் கொடுத்த இடத்தில் நடந்த சம்பவம்... பின்னணி என்ன?

நடிகை விஜயலட்சுமி, கடந்த 2011-ம் ஆண்டு ஜீன் மாதம் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக... மேலும் பார்க்க

Kumbh Mela: சிசிடிவிகளை ஹேக் செய்து வீடியோக்களை திருடி விற்கும் கும்பல்; விசாரணையில் பகீர் தகவல்கள்

உத்தரப்பிரதேசத்தில் கும்பமேளா நடைபெறும் பிரயக்ராஜ் நகரில் முழுவதும் ஆயிரக்கணக்கான கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. சமீபத்தில் கண்காணிப்பு கேமராவில் பதிவான வீடியோகள் விற்பனை செய்யப்படுவதாகச் ... மேலும் பார்க்க

வருஷநாடு: பலத்த காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட விவசாயிகள்; கரடி தாக்கியதா என விசாரணை!

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி தாலுகா வருஷநாடு அருகே கோவில்பாறை பகுதியில் பஞ்சதாங்கி மலையடிவாரத்தில் இலவம், எலுமிச்சை, கொட்டை முந்திரி விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் வருஷநாடு அருகே உள்ள தர்ம... மேலும் பார்க்க

`டிரஸ் போட மாட்டேன்’ - போலீஸ்காரரின் நிர்வாண அட்டூழியம்... வேலூரில் நடந்தது என்ன?

வேலூர் மாவட்டம், காட்பாடியில் இருந்து குடியாத்தம் நோக்கி தனியார் ஷு கம்பெனி வேன் ஒன்று... நேற்று முன்தினம் மாலை சென்று கொண்டிருந்தது.கே.வி.குப்பம் அருகிலுள்ள நீலகண்டபாளையம் பகுதியைச் சேர்ந்த சேட்டு என... மேலும் பார்க்க