செய்திகள் :

ஸ்ரீவைகுண்டத்தில் 110 மி.மீ. மழை பதிவு

post image

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை வரை 110 மி.மீ. மழை பதிவானது. தென் மாவட்டங்களில் திங்கள்கிழமை (மாா்ச் 3) மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

மழை அளவு: தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை வரை தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டத்தில் 110 மி.மீ. மழை பதிவானது. ராமேசுவரம் - 100 மி.மீ, தங்கச்சிமடம் (ராமநாதபுரம்) - 90 மி.மீ., ஊத்து- 80 மி.மீ., நாலுமுக்கு, காக்காச்சி- தலா 70 மி.மீ., மாஞ்சோலை (திருநெல்வேலி), பாம்பன் (ராமநாதபுரம்) - தலா 60 மி.மீ., சோ்வலாறு அணை, பாபநாசம், ராதாபுரம் (திருநெல்வேலி), ராமநதி அணைப் பகுதி (தென்காசி), நீடாமங்கலம் (திருவாரூா்)- தலா 50 மி.மீ. மழை பதிவானது.

மிதமான மழை: பூமத்திய ரேகையையொட்டிய மேற்கு இந்திய பெருங்கடல் மற்றும் அதையொட்டிய குமரிக் கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், மாா்ச் 3-ஆம் தேதி தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. எனினும் வடதமிழகத்தில் வட வானிலையே நிலவும்.

அதேபோல், மாா்ச் 4 முதல் 8-ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வட வானிலையே நிலவும்.

சென்னை மற்றும் புகா் பகுதிகளில் மாா்ச் 3-இல் அதிகபட்ச வெப்பநிலை 92 டிகிரி ஃபாரன்ஹீட் வரை இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராமஜெயம் கொலை வழக்கு: புலன் விசாரணை அதிகாரிகள் மாற்றம்!

அமைச்சா் கே என். நேருவின் சகோதரர் கே என். ராமஜெயம் கொலை வழக்கின் புலன் விசாரணை அதிகாரிகளை மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கடந்த 2012ஆம் ஆண்டு கே.என். ராமஜெயம், நடைப்பயிற்சி சென்றபோது அட... மேலும் பார்க்க

உங்க கமிஷன் எவ்வளவு? மாறி மாறி குற்றம் சாட்டும் திமுக - பாஜக!

கமிஷன் தொடர்பாக பாஜக தலைவர் அண்ணாமலை, அமைச்சர் தங்கம் தென்னரசு இடையே சமூக வலைதளத்தில் பரபரப்பான காரசார விவாதம் இணையத்தில் வைரலாகி வருகிறது.தமிழக அரசு, மக்கள் மீது சுமத்தியுள்ள மொத்த கடன் 9.5 லட்சம் கோ... மேலும் பார்க்க

கோவை: மனைவியை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற கணவர் தற்கொலை!

சூலூர்: சூலூர் அருகே மனைவியை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு, அதே துப்பாக்கியால் கணவரும் சுட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.கோவை மாவட்டம் சூலூர் அருகே பட்டினம்புதூரில் வசிப்பவர் கிருஷ்ணகுமார் (வயது ... மேலும் பார்க்க

மார்ச் 8 முதல் பயன்பாட்டுக்கு வரும் பிங்க் ஆட்டோ!

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு வரும் மார்ச் 8 ஆம் தேதி முதல் பிங்க் ஆட்டோ திட்டம் பயன்பாட்டுக்கு வருகிறது.சென்னை மாநகரத்தில் பெண்களின் பாதுகாப்பினை உறுதி செய்திடும் விதமாகவும், பெண்களுக்கான சுயதொழில் வ... மேலும் பார்க்க

இல்லத்தரசிகளுக்கு அடித்தது ஜாக்பாட்.. ஏப்ரல் வரைதான் இருக்குமாம்!

கடந்த டிசம்பர் மாதம் முதல் காய்கறிகளின் விலை சதத்தைத் தொட்டுவிடுவோம் என்று மிரட்டிக்கொண்டிருந்த நிலையில், தற்போது வெங்காயம், தக்காளி என அனைத்துக் காய்கறிகளின் விலையும் கணிசமாகக் குறைந்துள்ளது.பிப்ரவரி... மேலும் பார்க்க

அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மனு!

அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தேசிய மக்கள் சக்தி கட்சித்தலைவர் எம்.எல்.ரவி தாக்கல் செய்த மனுவில், எங்கள் கட்சிக்கு அழைப்பு... மேலும் பார்க்க