செய்திகள் :

புல்லட் திருட்டில் ஸ்பெஷலிஸ்ட்; 9 புல்லட்கள் பறிமுதல்; 2 திருடர்கள் சிக்கியது எப்படி?

post image

திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் டூவிலர் திருட்டு அதிகமாக நடப்பதாகத் தொடர்ச்சியான புகார்கள் வரத் தொடங்கின. இதனால் மாவட்ட எஸ்.பி பிரதீப் உத்தரவின் பேரில் தனிப்படை போலீஸார் டூவிலர் திருட்டு வழக்குகளைத் தீவிரமாக விசாரித்து வந்தனர்.

கைதான ஹரிஹரன், பிரசாந்த்

ஏற்கெனவே டூவிலர் திருட்டு வழக்குகளில் தொடர்புடையவர்களைக் கண்காணித்தனர். திருட்டு நடந்த பகுதிகளில் சிசிடிவி காட்சிகளைச் சேகரித்து ஆய்வு செய்தனர். இதில் 2 இளைஞர்களின் முகம் பல இடங்களில் பதிவாகியதைக் கண்டறிந்தனர். அதனடிப்படையில், கரூரைச் சேர்ந்த ஹரிஹரன்(23), பிரசாந்த்(19) ஆகியோரை பிடித்து விசாரித்தனர்.

அப்போது அவர்கள் தொடர்ச்சியாக டூவிலர் திருட்டுகளில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. மேலும், அவர்களிடமிருந்து 9 புல்லட்கள் உள்பட 11 டூவிலர்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். இவர்கள் திண்டுக்கல், கரூர் உள்ளிட்ட பகுதிகளில் நோட்டமிட்டு டூவிலர்களை திருடி வந்துள்ளனர். ஏற்கெனவே இவர்கள் மீது டூவிலர் திருட்டு வழக்குகள் பதிவாகி இருப்பதும் தெரியவந்தது. குறிப்பாக, இவர்கள் புல்லட் டூவிலர்களை மட்டுமே குறிபார்த்துத் திருடி வந்ததுள்ளனர்.

கைது

இதுகுறித்து போலீஸாரிடம் விசாரித்தபோது, "இருவரும் தொடக்கத்தில் சிறிய டூவிலர்களை திருடி விற்றுள்ளனர். பிறகு புல்லட் டூவிலர் விலை உயர்ந்து டிமாண்ட் அதிகமானதைத் தொடர்ந்து புல்லட்களை குறிபார்த்துத் திருட தொடங்கியுள்ளனர். முதலில் வாகனங்கள் சென்று, இடங்களை நோட்டமிட்டு கொள்கின்றனர். எங்கு, எப்போது எடுக்கலாம் என்பது முடிவு செய்துவிட்டு, மிகவும் சாதாரணமாக டூவிலர்கள் திருடிச் சென்றிருக்கிறார்கள். தற்போது பறிமுதல் செய்த டூவிலர்கள் உரியவர்களிடம் ஒப்படைக்க ஏற்பாடு செய்திருக்கிறோம். இந்த இளைஞர்களுக்கு வேறு நபர்களுடன் தொடர்பு இருக்கிறதா, வேறெங்கும் டூவிலர்களை பதுக்கி வைத்துள்ளனரா என விசாரித்து வருகிறோம்" என்றனர்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

உ.பி இளம்பெண் கொலை: மொட்டைபோட்டு கங்கையில் நீராடல்; கேரளாவுக்கு தப்ப முயன்றபோது சிக்கிய காதலன்!

உத்தரப்பிரதேச மாநிலம், ஜான்பூரில் மருத்துவமனை ஒன்றிற்கு அருகில் இருந்த புதரில் டிராலி பேக் ஒன்று கிடந்தது. இது குறித்து போலீஸாருக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தனர். போலீஸார் அந்த பேக்கை பறிமுதல் செய்து த... மேலும் பார்க்க

கோவை: மனைவியை சுட்டுக் கொன்று, தற்கொலை செய்த கணவர் - பின்னணி என்ன?

கோவை அருகே மனைவியை துப்பாக்கியால் சுட்டுக்கொன்று, கணவரும் சுட்டு தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம், சூலூர் அருகே உள்ள பட்டணம்புதூர் என்கிற பகுதியில் கிருஷ்ணகுமார் - சங... மேலும் பார்க்க

`549 கிராம் தங்கம்; 1 கிலோ கஞ்சா!’ - திருச்சி விமான நிலையத்தில் தொடர் கதையாகும் கடத்தல் சம்பவம்!

பேங்காக்கிலிருந்து ஏர் ஏசியா விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வந்த பயணிகளை வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்பொழுது, சந்தேகத்திற்கிடமான வகையில் இருந்த ஒரு பெண் பயணியை... மேலும் பார்க்க

சிறுமலை: வெடிமருந்துடன் ஆண் சடலம் மீட்கப்பட்ட விவகாரம்; துப்பு துலக்கிய போலீஸ்!

திண்டுக்கல் மாவட்டம், சிறுமலை 17 ஆவது கொண்டை ஊசி வளைவு பகுதி அருகே புதருக்குள் ஒரு ஆண் சடலம் கிடந்தது. போலீஸார், வனத்துறையினர் விசாரிக்க சென்றபோது அருகே கிடந்த பேட்டரி, ஒயர்கள், வெடி மருந்து கிடந்துள்... மேலும் பார்க்க

Haryana: 'நஷ்டமான தொழில்... காப்பீட்டுத் தொகையைப் பெறக் கொலை' - சினிமா பாணி சம்பவம்; என்ன நடந்தது?

ஹரியானா மாநிலம் ஹிசாரைச் சேர்ந்தவர் ராம்மெஹர். கொரோனா பேரிடர் காலத்திற்கு முன்பு, தொழிற்சாலை நடத்தி வந்த இவர், லாக் டவுனின் போது இவரது தொழிற்சாலை பெரும் நஷ்டத்தைச் சந்தித்துள்ளது. அதனால், அவரது கடன் அ... மேலும் பார்க்க

அம்பத்தூர்: பேட்மிட்டன் பயிற்சியாளர் கொலை வழக்கில் மூவர் சரண்; விசாரணையில் வெளியான பகீர் பின்னணி

அம்பத்தூர் டீச்சர் காலனியைச் சேர்ந்தவர் தினேஷ்பாபு. பேட்மிட்டன் பயிற்சியாளரான இவர், தந்தையின் கட்டிட ஒப்பந்த வேலைகளையும் கவனித்து வந்தார். மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தினேஷ்பாபு தனியாக... மேலும் பார்க்க