செய்திகள் :

குழந்தை பிரசவித்த ஆதரவற்ற சிறுமி; உறவினர் உட்பட 2 பேர் போக்சோவில் கைது - குடியாத்தம் அதிர்ச்சி!

post image

வேலூர் மாவட்டம், குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த ஆதரவற்ற 16 வயது சிறுமி அவர். சில ஆண்டுகளுக்கு முன்பு சிறுமியின் தந்தை இறந்துவிட்டார். மனவளர்ச்சிக் குன்றிய அவரின் தாயும் நாளடைவில் மாயமாகிவிட்டார்.

இதனால், அதே பகுதியிலுள்ள தனது உறவினர் வீட்டில் சிறுமி வசித்து வந்தார். ஒன்பதாம் வகுப்பு வரை மட்டுமே பள்ளிக்குச் சென்ற சிறுமியை மேற்கொண்டு பள்ளிக்கு அனுப்ப உறவினர்களும் தயாராக இல்லை. இதனால் அவர்கள் சொல்லும் வேலையைச் செய்துகொண்டு வீட்டிலேயே இருந்து வந்திருக்கிறார். இந்த நிலையில், கடந்த டிசம்பர் மாதம் சிறுமிக்கு உடல்நிலையில் மாற்றமும், பாதிப்பும் ஏற்பட்டிருக்கிறது.

பிரேம்குமார்

சந்தேகமடைந்த உறவினர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்ததில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்குள்ளாகி, கருவுற்று ஆறு மாதங்கள் ஆனதும் தெரியவந்தது. அதிர்ச்சிக்குள்ளான உறவினர்கள், இது குறித்து குடியாத்தம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். `போக்சோ’ உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்த போலீஸார், சிறுமியின் கர்ப்பத்துக்கு காரணமான பாலியல் குற்றவாளிகளை கைது செய்யாமல் அலட்சியம் காட்டி வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில்தான், நேற்று முன்தினம் சிறுமிக்கு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. இது குறித்து, மாவட்ட எஸ்.பி மதிவாணனுக்கு தகவல் சென்றது. இதையடுத்து, சிறுமியிடம் அத்துமீறிய கொடூரர்களை உடனடியாக கைது செய்ய உத்தரவிட்டார் எஸ்.பி மதிவாணன்.

சதீஷ் என்ற சக்திவேல்

அதன் பிறகே குடியாத்தம் போலீஸார் விசாரணையில் இறங்கினர். குடியாத்தம் அருகிலுள்ள மேல்ஆலத்தூர் கிராமத்தைச் சேர்ந்த சிறுமியின் உறவினரான சமையல் மாஸ்டர் பிரேம்குமார் (32) மற்றும் அதே கிராமத்தைச் சேர்ந்த கட்டடத் தொழிலாளியான சதீஷ் என்ற சக்திவேல் (29) ஆகிய இரண்டு பேரும்தான் சிறுமியிடம் அத்துமீறியவர்கள் எனத் தெரியவந்தது. இதையடுத்து, இரண்டு பேரையும் கைதுசெய்த போலீஸார் நீதிமன்றக் காவலில் வேலூர் மத்தியச் சிறையில் அடைத்தனர்.

உ.பி இளம்பெண் கொலை: மொட்டைபோட்டு கங்கையில் நீராடல்; கேரளாவுக்கு தப்ப முயன்றபோது சிக்கிய காதலன்!

உத்தரப்பிரதேச மாநிலம், ஜான்பூரில் மருத்துவமனை ஒன்றிற்கு அருகில் இருந்த புதரில் டிராலி பேக் ஒன்று கிடந்தது. இது குறித்து போலீஸாருக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தனர். போலீஸார் அந்த பேக்கை பறிமுதல் செய்து த... மேலும் பார்க்க

கோவை: மனைவியை சுட்டுக் கொன்று, தற்கொலை செய்த கணவர் - பின்னணி என்ன?

கோவை அருகே மனைவியை துப்பாக்கியால் சுட்டுக்கொன்று, கணவரும் சுட்டு தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம், சூலூர் அருகே உள்ள பட்டணம்புதூர் என்கிற பகுதியில் கிருஷ்ணகுமார் - சங... மேலும் பார்க்க

புல்லட் திருட்டில் ஸ்பெஷலிஸ்ட்; 9 புல்லட்கள் பறிமுதல்; 2 திருடர்கள் சிக்கியது எப்படி?

திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் டூவிலர் திருட்டு அதிகமாக நடப்பதாகத் தொடர்ச்சியான புகார்கள் வரத் தொடங்கின. இதனால் மாவட்ட எஸ்.பி பிரதீப் உத்தரவின் பேரில் தனிப்படை போலீஸார் டூவிலர் திருட்டு வ... மேலும் பார்க்க

`549 கிராம் தங்கம்; 1 கிலோ கஞ்சா!’ - திருச்சி விமான நிலையத்தில் தொடர் கதையாகும் கடத்தல் சம்பவம்!

பேங்காக்கிலிருந்து ஏர் ஏசியா விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வந்த பயணிகளை வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்பொழுது, சந்தேகத்திற்கிடமான வகையில் இருந்த ஒரு பெண் பயணியை... மேலும் பார்க்க

சிறுமலை: வெடிமருந்துடன் ஆண் சடலம் மீட்கப்பட்ட விவகாரம்; துப்பு துலக்கிய போலீஸ்!

திண்டுக்கல் மாவட்டம், சிறுமலை 17 ஆவது கொண்டை ஊசி வளைவு பகுதி அருகே புதருக்குள் ஒரு ஆண் சடலம் கிடந்தது. போலீஸார், வனத்துறையினர் விசாரிக்க சென்றபோது அருகே கிடந்த பேட்டரி, ஒயர்கள், வெடி மருந்து கிடந்துள்... மேலும் பார்க்க

Haryana: 'நஷ்டமான தொழில்... காப்பீட்டுத் தொகையைப் பெறக் கொலை' - சினிமா பாணி சம்பவம்; என்ன நடந்தது?

ஹரியானா மாநிலம் ஹிசாரைச் சேர்ந்தவர் ராம்மெஹர். கொரோனா பேரிடர் காலத்திற்கு முன்பு, தொழிற்சாலை நடத்தி வந்த இவர், லாக் டவுனின் போது இவரது தொழிற்சாலை பெரும் நஷ்டத்தைச் சந்தித்துள்ளது. அதனால், அவரது கடன் அ... மேலும் பார்க்க