செய்திகள் :

திருப்பதி தேவஸ்தான அறைகள் பெற புதிய விதி: தரிசன டிக்கெட் இருந்தால்தான்!

post image

திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களின் வசதிக்காக பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்படுகின்றன. அந்த வகையில் தங்கும் அறைகள் ஒதுக்கீட்டில் புதிய விதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள். இந்த நிலையில், முறைகேடுகளைத் தடுக்க விஐபிகளுக்கான தங்கும் அறைகள் ஒதுக்கீட்டில் புதிய விதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அதாவது, இதுவரை விஐபிகளுக்கான தங்குமிடங்களில், ஆதார் அட்டையைக் காட்டினாலே அறை வாடகைக்கு ஒதுக்கப்பட்டு வந்தது. ஆனால் இனி, அறை வாடகைக்கு வேண்டும் என்றால், ஆதார் அட்டை மட்டுமல்லாமல், அவர்கள் சுவாமி தரிசனம் மேற்கொள்ளவதற்கான டிக்கெட்டையும் சமர்ப்பித்தால் மட்டுமே அறை வாடகைக்கு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பக்தர்களுக்காக திருமலை திருப்பதி கோயில் நிர்வாகத்தின் வசம் 7500 அறைகள் உள்ளன. இதில் 3,500 அறைகள் பக்தர்களுக்காக வழங்கப்படும். 1580 அறைகள் முன்கூட்டியே முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கு வழங்கப்படும். இதில்லாமல், கோயிலுக்கு நன்கொடை வழங்கும் பக்தர்களுக்கு 400 அறைகள் ஒதுக்கீடு செய்யப்படும். 450 அறைகள், கவுண்டர்களில் வந்து அறை கேட்கும் பக்தர்களுக்கு வழங்கப்படும். மீதமிருக்கும் அறைகள் முக்கிய பிரமுகர்களுக்கு வழங்கப்படும்.

ஆனால், சில முக்கிய பிரமுகர்களின் ஆதார் அட்டைகளை வைத்துக்கொண்டு ஏஜெண்டுகள் விஐபிகளுக்கான அறைகளை வாடகைக்கு எடுத்து அதனை வெளியாட்களுக்கு வாடகைக்கு விட்டு முறைகேடு நடைபெறுவதாகப் புகார்கள் வந்தன.

இதனைத் தவிர்க்க புதிய விதி அமலுக்கு வந்துள்ளது. அந்த விதியின்படி, விஐபிக்கள், தங்களது ஆதார் அட்டை மட்டுமல்லாமல், அந்த நாளில் சுவாமி தரிசனம் செய்ய எடுத்திருக்கும் டிக்கெட் இருந்தால்தான் திருப்பதி தேவஸ்தான அறைகளில் தங்குவதற்கு அனுமதி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இரு ஆண்டுகளில் 286 சிங்கங்கள், 456 சிறுத்தைகள் பலி!

குஜராத்தில் கடந்த இரு ஆண்டுகளில் 286 சிங்கங்கள், 456 சிறுத்தைகள் பலியானதாக அரசு தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் சட்டப்பேரவையில் வனத்துறை அமைச்சரிடம் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஷைலேஷ் ... மேலும் பார்க்க

நாட்டின் உற்பத்தி கொள்முதல் 14 மாதங்களில் இல்லாத அளவு சரிவு!

நாட்டின் உற்பத்திக்கான கொள்முதல் கடந்த மாதத்தில் 56.3 சதவீதமாக குறைந்துள்ளது. இது ஜனவரி மாதத்தில் 57.7 சதவீதமாக இருந்தது. 2023 டிசம்பர் முதல் நாட்டின் உற்பத்திக்கான கொள்முதல் குறைந்துவரும் நிலையில், த... மேலும் பார்க்க

தந்தையின் தலையை வெட்டி காவல் நிலையத்திற்குக் கொண்டு சென்ற மகன்!

ஒடிசாவில் தந்தையின் தலையை வெட்டி காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்ற மகனை காவல்துறையினர் கைது செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலத்தில் உள்ள மயூர்பஞ்ச் மாவட்டத்தின் சந்துவா கிராமத... மேலும் பார்க்க

மூடநம்பிக்கை: பச்சிளம் குழந்தைக்கு 40 முறை சூடு வைத்த கொடூரம்!

ஒடிசா மாநிலத்தின் நபரங்பூரில் பச்சிளம் குழந்தைக்கு இரும்பு கம்பியால் 40 முறை சூடு வைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலம் நபரங்பூர் மாவட்டத்தின் ஹண்டல்படா கிராமத்தைச் சேர்ந்த ... மேலும் பார்க்க

ஆறு ஆண்டுகளாக நிரப்பப்படாத மக்களவைத் துணைத் தலைவர் பதவி!

18-ஆவது மக்களவை தொடங்கி 9 மாதங்கள் ஆகியும், இதுவரை அவையின் துணைத் தலைவரை தேர்ந்தெடுக்க மத்திய அரசு எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் இருக்கிறது.17-ஆவது மக்களவை முழுவதும் துணைத் தலைவர் பதவி நிரப்பப்... மேலும் பார்க்க

ஜார்க்கண்டில் ஓர் ஆசிரியர் பள்ளிகள் இத்தனையா?

ஜார்க்கண்டில் 8 ஆயிரம் அரசுப் பள்ளிகள் தலா ஒரு ஆசிரியருடன் செயல்படுவதாக கல்வி அமைச்சர் ராம்தாஸ் சோரன் தெரிவித்தார்.ஜார்க்கண்ட் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகின்றது. இந்தநிலையில், ஆசிரியர்கள... மேலும் பார்க்க