செய்திகள் :

ஆன்லைன் விளையாட்டில் ரூ.50 லட்சம் இழப்பு: குழந்தைகளுடன் தாய் தற்கொலை? கணவர் மாயம்!

post image

நாமக்கல்லில் ஆன்லைன் விளையாட்டில் ரூ.50 லட்சத்தை கணவர் இழந்த விரக்தியில் தனது இரு குழந்தைகளுடன் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அவரது கணவர் மாயமானதால் சந்தேக அடிப்படையில் காவல்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாமக்கல்லில் தனியார் வங்கியில் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி வருபவர் பிரேம்ராஜ் (38). இவர் நாமக்கல்-சேலம் சாலையில் பதிநகர் பகுதியில் வாடகை வீட்டில் மனைவி மோகனப்பிரியா (33), மற்றும் மகள் பிரனதி (6), மகன் பிரனீஷ்(11 மாதம்) ஆகியோருடன் வசித்து வந்தார்.

இந்த நிலையில் இன்று(மார்ச் 4) மதியம் வரை பிரேம் ராஜின் வீட்டிலிருந்து யாரும் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் அவரது வீட்டில் உள்ள ஜன்னல் வழியாக எட்டி பார்த்தனர்.

அப்போது மோகனப்பிரியா, மகன் பிரனிஷ் மற்றும் மகள் பிரனிதி ஆகியோர் உயிரிழந்த நிலையில் கிடப்பது தெரியவந்தது. இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் நாமக்கல் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

பிரேம் ராஜ் எழுதிய கடிதம்..

அங்கு வந்த காவல் துறையினர் மூன்று பேரின் உடல்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் காவல் துறையினர் நடத்திய விசாரணையில் ஆன்லைன் செயலி ஒன்றில் ரூ.50 லட்சம் வரை இழந்ததாகவும் இதை வெளியே சொன்னால் அவமானம் என அவரது கணவர் பிரேம்ராஜ் கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு வீட்டில் இருந்து மாயமயமாகி உள்ளார்.

இந்தச் சூழலில் குழந்தைகள், தாய் உள்பட மூவர் உயிரிழந்த நிலையில் கணவர் பிரேம்ராஜை காவல்துறை தொடர்பு கொண்டனர். அப்போது அவரது கைப்பேசி சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. அவர் எங்கிருக்கிறார் என்பது குறித்தும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மூவரும் உயிரிழந்தது கொலையா? அல்லது தற்கொலையா? என்ற கோணத்திலும் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

சத்தியம் வெல்லும்: விஜயகாந்த் எக்ஸ் பக்கத்தில் வெளியான பதிவு!

சத்தியம் வெல்லும்; நாளை நமதே என மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிடப்பட்டது. எனினும் சிலநிமிடங்களில் அந்தப் பதிவு நீக்கப்பட்டுவிட்டது.தேமுதிகவுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவ... மேலும் பார்க்க

மன்னார்குடி: கோயில் குளத்தில் செத்து மிதந்த மீன்கள்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் அண்ணாமலை நாதர் சன்னதி தெருவில் உள்ள அண்ணாமலை நாதர் கோயிலுக்கு சொந்தமான குளம் உள்ளது. செவ்வாய்க்கிழமை இந்தக் குளத்தில் மீன்கள் செத்து மிதந்ததால் குடிநீர் விநியோக தண்... மேலும் பார்க்க

நாமக்கல்: வீட்டிலிருந்து தாய், மகன், மகள் சடலமாக மீட்பு

நாமக்கல் மாவட்டத்தில் ஒரு வீட்டிலிருந்து தாய், மகன், மகள் என மூன்று பேரின் சடலங்களை காவல்துறையினர் மீட்டுள்ளனர்.முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்தவர்கள் வங்கி ஊழியர் பிரேம் ராஜின் மனைவி, மகன், மகள் என்ப... மேலும் பார்க்க

நந்தலாலா மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்

கவிஞர் நந்தலாலா மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.கவிஞரும் பட்டிமன்றப் பேச்சாளருமான நந்தலா, இதய அறுவை சிகிச்சைக்காக பெங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையி... மேலும் பார்க்க

தேமுதிகவுக்கு மாநிலங்களவை சீட் தருவதாக எப்போது கூறினோம்? இபிஎஸ்

தேமுதிகவுக்கு மாநிலங்களவை சீட் தருவதாக எப்போது கூறினோம் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளார்.கடந்த மக்களவைத் தேர்தல் கூட்டணியின்போது தேமுதிகவுக்கு மாநிலங்களவை சீட் தருவத... மேலும் பார்க்க

ரூ. 1500 கடனுக்காக தகராறு... கீழே தள்ளிவிட்டதில் இலங்கை அகதி பலி!

சூலூர்: கொடுத்த பணத்தைக் கேட்டபோது ஏற்பட்ட தகராறில், கீழே தள்ளிவிடப்பட்ட இலங்கை அகதி பலியான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சூலூர் அருகே குளத்தூர் பிரிவு பகுதியில் தனியார் கேட்டரிங் நி... மேலும் பார்க்க