செய்திகள் :

நிகழ்ச்சியில் டிக்டாக் நிறுவனத்தின் ஈடுபாட்டிற்கு உய்குர் சமூகம் கண்டனம்!

post image

பிரிட்டன் ராஜ்ஜியதில் இஸ்லாமிய பாரம்பரிய மாதத்தின் கொண்டாட்டத்தை முன்னிட்டு நடத்தப்படும் நிகழ்ச்சிக்கு டிக்டாக் நிறுவனம் நிதியுதவி வழங்கியதற்கு உய்குர் உரிமை ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

அந்நாட்டில் முஸ்லிம் வுமன்ஸ் நெட்வொர்க் எனும் அமைப்பினால் பிரிட்டனில் இஸ்லாமியர்களின் கலாச்சார பங்களிப்பை கொண்டாடும் விதமாக பலதரப்பட்ட சமூகத்தினர், படைப்பாளர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபெறும் நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிகழ்ச்சிக்கு டிக்டாக் செயலி நிறுவனம் நிதியுதவி வழங்கியுள்ளதாகக் கூறப்படும் நிலையில் அதற்கு பிரிட்டனில் வாழும் சீனாவைச் சேர்ந்த உய்குர் இஸ்லாமிய சமூகத்தினர் தங்களது கண்டனங்களையும் விமர்சனங்களையும் தெரிவித்து வருகின்றனர்.

சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் வாழும் உய்குர் இஸ்லாமிய சமூகத்தினருக்கு எதிரான அந்நாட்டு அரசின் மனித உரிமை மீறல்கள் மற்றும் அவர்கள் மீதான வன்முறைகள் தொடர்பான காட்சிகளையும் விடியோக்களையும் டிக்டாக் செயலியில் பகிர்வதற்கு அந்நிறுவனம் தணிக்கை செய்து தடைவிதிப்பதாகக் கூறப்படுகிறது.

இதனால், தற்போது பிரிட்டனில் ஏற்பாடு செய்யப்படும் நிகழ்ச்சியில் டிக்டாக் செயலியின் ஈடுபாட்டை பல்வேறு அமைப்பினரும் விமர்சித்து வருகின்றனர்.

இதையும் படிக்க: பேச்சுவார்த்தையில் மோதல்! தவிர்த்துக் கடந்த ஸெலென்ஸ்கி; விடாமல் தொடரும் வெள்ளை மாளிகை!

இதனை முற்றிலுமாக மறுத்துள்ள டிக்டாக் தகவல் தொடர்பு குழுவின் உறுப்பினரான நிகோலஸ் சிமித் கூறுகையில் உய்குர் தொடர்பான விவகாரத்தில் டிக்டாக் நிறுவனத்தின் மீதான குற்றச்சாட்டானது முற்றிலும் தவறானது என்று கூறியுள்ளார்.

முன்னதாக, ஜின்ஜியாங்கில் உய்குர் சமூகத்தினருக்கு எதிரான சீனாவின் நடவடிக்கைகளை அமெரிக்காவும் ஐக்கிய நாடுகள் சபையும் கண்டித்துள்ளன.

கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரியில், உய்குர் மக்களுக்கு விதிக்கப்படும் தடுப்புக்காவல், கட்டாய உழைப்பு, கட்டாய கருத்தடை, கலாச்சார மற்றும் மத நடைமுறைகளை அடக்குதல் போன்ற சீனாவின் நடவடிக்கைகளை இனப்படுகொலை மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் என்று அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.

ஆனால், சீன அரசாங்கம் இந்த நடவடிக்கைகள் அனைத்து அந்நாட்டு தீவிரவாதத்தை எதிர்த்துப் போராடுவதாகத் தொடர்ந்து கூறி வருவது குறிப்பிடத்தக்கது.

அசாம்: ரூ.15.4 கோடி போதைப் பொருள் பறிமுதல்! ஒருவர் கைது!

வடகிழக்கு மாநிலமான அசாமில் பாதுகாப்புப் படையினாரால் ரூ.15.4 கோடி அளவிலான போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டதுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சூராசந்திரப்பூர் மாவட்டத்தில் அசாம் ரைப்பிள்ஸ் பாதுகாப்... மேலும் பார்க்க

2024-ல் ரூ.4,250 கோடி போதைப் பொருள் பறிமுதல்! 14,230 பேர் கைது!

மகாராஷ்டிரத்தில் கடந்த 2024 ஆம் ஆண்டில் மட்டும் ரூ.4,250 கோடி அளவிலான போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிர சட்டமன்றத்தில் இன்று ... மேலும் பார்க்க

தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் பிரதிநிதிகளுக்கு பதிலாக பதவியேற்ற கணவர்கள்!

சத்தீஸ்கரில் புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 6 பெண் பஞ்சாயத்து பிரதிநிதிகளுக்கு பதிலாக அவர்களது கணவர்கள் பதவியேற்றுக் கொண்டுள்ளனர்.கபிர்தாம் மாவட்டத்தின் பரஸ்வரா கிராமத்தில் சமீபத்தில் நடத்தப்பட்ட தேர்தல... மேலும் பார்க்க

மகாராஷ்டிர அமைச்சரின் ராஜிநாமா ஏற்பு!

மகாராஷ்டிர மாநில அமைச்சரின் ராஜிநாமாவை அம்மாநில ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணன் இன்று (மார்ச்.4) ஏற்றுக்கொண்டுள்ளார்.மகாராஷ்டிர மாநில பாஜக அரசின் கூட்டணிக் கட்சியான தேசியவாத காங்கிரஸைச் (அஜித் பவார்) சேர்ந்... மேலும் பார்க்க

செர்பியா மக்களவையில் அமளி! புகைக்குண்டு வீச்சில் 3 உறுப்பினர்கள் காயம்!

செர்பியா நாட்டு மக்களவையில் எதிர் கட்சியினர் வீசிய கண்ணீர் மற்றும் புகைக்குண்டுகளினால் சுமார் 3 மக்களவை உறுப்பினர்கள் காயமடைந்துள்ளனர். செர்பியா நாட்டு மக்களவியில் அந்நாட்டு பல்கலைக்கழகக் கல்விக்கான ந... மேலும் பார்க்க

காவல் உயர் அதிகாரி வீட்டு வாசலில் 80 வயது முதியவர் கொலை!

ஒடிசாவில் காவல் உயர் அதிகாரி வீட்டின் வாசலின் முன்பு 80 வயது முதியவர் குத்திக்கொலை செய்யப்பட்டுள்ளார். நுவாபாடா மாவட்டத்தின் சிர்டோல் கிராமத்தைச் சேர்ந்த சுக்லால் சாஹு (வயது 80) எனும் முதியவர், நேற்று... மேலும் பார்க்க