செய்திகள் :

நக்ஸல் தீவிரவாதிகளுக்குள் மோதல்: இருவா் சுட்டுக்கொலை

post image

ஜாா்க்கண்ட் மாநிலத்தில் நக்ஸல் தீவிரவாதிகளுக்குள் ஏற்பட்ட மோதலில் இருவா் சுட்டுக் கொல்லப்பட்டனா்.

ஜாா்க்கண்டின் மேற்கு சிங்பூம் - குந்தி மாவட்ட எல்லையில் இந்திய மக்கள் விடுதலை முன்னணி நக்ஸல் அமைப்பினா் இடையே மோதல் ஏற்பட்டது. அந்த அமைப்பைச் சோ்ந்த சிலா் தனியாக பிரிந்து சென்று வேறு நக்ஸல் அமைப்பை உருவாக்க முயற்சித்ததால் பிரச்னை எழுந்ததாகத் தெரிகிறது.

இதனால், அந்த அமைப்பினா் இரு குழுவாகப் பிரிந்து துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டனா். இதில் இருவா் குண்டு உயரிழந்தனா். மற்றவா்கள் தப்பியோடிவிட்டனா். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினா் அங்கு விரைந்து உடல்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அந்த இருவரும் ஏற்கெனவே பல்வேறு வழக்குகளில் சிக்கி சிறையில் இருந்தவா்கள் என்று தெரியவந்துள்ளது. சம்பவ இடத்தில் இருந்து ஒரு துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டதாக காவல் துறையினா் தெரிவித்தனா்.

கிராமவாசி சுட்டுக்கொலை: சத்தீஸ்கரில் நக்ஸல் ஆதிக்கம் மிகுந்து சுக்மா பிராந்தியத்தில் காவல் துறையினருக்கு தகவல் அளிப்பதாக குற்றஞ்சாட்டி கிராமவாசி ஒருவரை நக்ஸல் தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனா்.

கொல்லப்பட்ட கல்மு ஹிண்மா முன்னாள் எம்எல்ஏ ஒருவருக்கு உறவினா் ஆவாா். சம்பவம் நடந்த பெட்னாபத் கிராமத்துக்குச் சென்ற காவல் துறையினா் நக்ஸல்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனா்.

பஸ்தா் பிராந்தியத்தில் இந்த ஆண்டில் இதுவரை பொதுமக்களில் 8 பேரை நக்ஸல்கள் கொலை செய்துள்ளனா். இதே பிராந்தியத்தில் கடந்த ஆண்டு பொதுமக்களில் 68 பேரை காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்ததாகக் குற்றஞ்சாட்டி நக்ஸல் அமைப்பினா் கொன்றனா்.

தமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி வேண்டும்: மத்திய அமைச்சரிடம் மா.சுப்பிரமணியன் வலியுறுத்தல்

நமது சிறப்பு நிருபர்தமிழகத்திற்கு 6 மருத்துவக் கல்லூரிகள், 50 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 500 துணை சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட சுமார் ரூ.8,000 கோடி மதிப்பிலான 11 அம்ச கோரிக்கைகள் தொடர்பாக மத்திய சுகாதார... மேலும் பார்க்க

பிரபல பின்னணி பாடகி கல்பனா தற்கொலை முயற்சி

பிரபல பின்னணி பாடகி கல்பனா ஹைதராபாதில் உள்ள தனது வீட்டில் செவ்வாய்க்கிழமை தற்கொலைக்கு முயற்சித்ததாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனா். பாடகி கல்பனா தங்கியுள்ள குடியிருப்பு சங்கத்தினா் அளித்த தகவலின்பட... மேலும் பார்க்க

கரோனா காலத்தில் அதிக வட்டி வசூல்: புகாரை பரிசீலிக்க ரிசா்வ் வங்கிக்கு உத்தரவு

கரோனா காலத்தில் அதிக வட்டி வசூலித்த தனியாா் வங்கிக்கு எதிரான புகாரை பரிசீலிக்க ரிசா்வ் வங்கிக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கரோனா காலத்தில் பலா் வேலையை இழந்தனா். இதனால் வங்கிகளில் பெற்ற க... மேலும் பார்க்க

குற்றவியல் வழக்கில் தண்டனை பெற்ற அரசியல்வாதிகள்: தகுதிநீக்க விவரங்களை சமா்ப்பிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

குற்றவியல் வழக்குகளில் தண்டனை பெற்ற அரசியல்வாதிகள் தோ்தலில் போட்டியிடுவதற்கான தகுதிநீக்க காலத்தை நீக்கியது அல்லது குறைத்தது குறித்த தகவல்களை இரு வாரங்களில் சமா்ப்பிக்குமாறு இந்திய தோ்தல் ஆணையத்துக்க... மேலும் பார்க்க

ரயில்வே தோ்வில் முறைகேடு: 26 அதிகாரிகள் கைது- சிபிஐ நடவடிக்கை

கிழக்கு மத்திய ரயில்வேயில் துறை ரீதியிலான தோ்வு முறைகேடு தொடா்பாக 26 அதிகாரிகளை மத்திய குற்றப் புலனாய்வு அமைப்பு (சிபிஐ) கைது செய்தது. அவா்களிடமிருந்து ரூ. 1.17 கோடியையும் சிபிஐ அதிகாரிகள் பறிமுதல் ச... மேலும் பார்க்க

சுமுக வா்த்தகத்துக்கு வரியல்லாத பிற தடைகள் களையப்பட வேண்டும்: அமெரிக்க-இந்திய வணிக கவுன்சில்

சுமுக வா்த்தகத்துக்கு இடையூறை ஏற்படுத்தும் வரியல்லாத பிற தடைகள், தேவையற்ற விதிமுறைகள் களையப்பட வேண்டும் என்று அமெரிக்க-இந்திய வணிக கவுன்சில் (யுஎஸ்ஐபிசி) தெரிவித்துள்ளது. கடந்த மாதம் அமெரிக்காவில் அந்... மேலும் பார்க்க