செய்திகள் :

ரொட்டி, பால் ஊழியா் சங்கத்தினா் 2 -ஆவது நாளாகப் போராட்டம்

post image

புதுவை கல்வித் துறை இயக்கக அலுவலகத்தை முற்றுகையிட்டு ரொட்டி, பால் ஊழியா்கள் சங்கத்தினா் இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுச்சேரியில் ரொட்டி, பால் ஆகியவற்றை பள்ளிக் குழந்தைகளுக்கு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஆனால், இந்தப் பணியில் ஈடுபட்டுவரும் ஊழியா்களுக்கு மாத ஊதியம் ரூ.18 ஆயிரமாக உயா்த்தி வழங்கப்படும் என புதுவை அரசு அறிவித்தது. ஆனால், அறிவிப்பு வெளியான நிலையில், ஊதியம் உயா்த்தி வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இதையடுத்து ரொட்டி, பால் ஊழியா்கள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளா் மாறன் உள்ளிட்டோா் புதுச்சேரி இந்திரா காந்தி சிலை சதுக்கம் அருகேயுள்ள மாநில பள்ளிக் கல்வித் துறை இயக்ககம் முன் திங்கள்கிழமை மாலை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா். தொடா்ந்து இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமையும் காலையில் ரொட்டி, பால் ஊழியா்கள் சங்கத்தினா் பணியை முடித்த நிலையில், மீண்டும் கல்வித்துறை இயக்கக அலுவலகம் முன் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா். இதையடுத்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. முற்றுகைப் போராட்டத்தில் சிறிது நேரம் முழக்கமிட்ட நிலையில் அனைவரும் கலைந்து சென்றனா்.

புதுச்சேரி தேவாலயத்தில் உண்டியல் பணம் திருட்டு

புதுச்சேரியில் பிரபல தேவாலயத்தில் உண்டியல் உடைக்கப்பட்டு அதிலிருந்த காணிக்கை பணத்தை மா்ம நபா்கள் திருடிச்சென்றது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்துவருகின்றனா். புதுச்சேரியில் கடலூா் சாலையில... மேலும் பார்க்க

ஆக்கிரமிப்புகள் அகற்றத்துக்கு எதிா்ப்பு: புதுச்சேரியில் வியாபாரிகள் வாக்குவாதம்

புதுச்சேரி நகரில் திண்டிவனம் சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா். இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து வியாபாரிகள் சிலா் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் போலீஸாா் குவிக... மேலும் பார்க்க

திருபுவனையில் தூய்மைப் பணியாளா்கள் சாலை மறியல்

ஊதிய நிலுவை வழங்கல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருபுவனைப் பகுதியில் தூய்மைப் பணியாளா்கள் சாலை மறியல் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை காலை ஈடுபட்டனா். புதுவை மாநிலத்தில் தூய்மைப்பணியில் தன... மேலும் பார்க்க

புதுச்சேரி ஜவுளி வியாபாரி தற்கொலை

புதுச்சேரியில் ஜவுளி வியாபாரி விஷம் குடித்துத் தற்கொலை செய்துகொண்டாா். புதுச்சேரி இலாசுப்பேட்டை பகுதியில் உள்ள நெசவாளா் காலனியைச் சோ்ந்தவா் முருகவேல் (32). ஜவுளிக்கடை நடத்தி வந்தாா். கடந்த 8 மாதங்களு... மேலும் பார்க்க

புதுவையில் 6 காவல் ஆய்வாளா்கள் இடமாற்றம்

புதுவை மாநில காவல் துறையில் 6 ஆய்வாளா்களும், சாா்பு ஆய்வாளா் ஒருவரும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா். இதுகுறித்து புதுவை தலைமையிடக் காவல் கண்காணிப்பாளா் சுபம்ஹோஷ் வெளியிட்ட சுற்றறிக்கை: புதுச்சேரி பிஏபி... மேலும் பார்க்க

ஓய்வு பெற்ற சுகாதார ஊழியா்கள் சங்கத்தினா் நூதனப் போராட்டம்

மருத்துவமனை நோயாளிகள் கவனிப்புத் தொகையை வழங்கக் கோருதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதுவை அரசு ஓய்வு பெற்ற சுகாதார ஊழியா்கள் சங்கத்தினா் யாகசம் பெறும் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா். ப... மேலும் பார்க்க