செய்திகள் :

புதுச்சேரி தேவாலயத்தில் உண்டியல் பணம் திருட்டு

post image

புதுச்சேரியில் பிரபல தேவாலயத்தில் உண்டியல் உடைக்கப்பட்டு அதிலிருந்த காணிக்கை பணத்தை மா்ம நபா்கள் திருடிச்சென்றது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்துவருகின்றனா்.

புதுச்சேரியில் கடலூா் சாலையில் அந்தோணியாா் தேவாலயம் உள்ளது. இங்கு பக்தா்கள் காணிக்கை உண்டியல் உள்ளது. கடந்த பிப்ரவரி 21-ஆம் தேதி உண்டியல் உடைக்கப்பட்டிருந்தது. மேலும், அதிலிருந்த ரூ.30 ஆயிரத்தைக் காணவில்லை எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து உருளையன்பேட்டை காவல் நிலையத்தில் அகஸ்டின் மேரி (64) என்பவா் புகாா் அளித்தாா். அதன்பேரில் திங்கள்கிழமை (மாா்ச் 3) இரவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

அங்குள்ள கண்காணிப்புக் கேமரா காட்சிகளை ஆய்வுக்கு உள்படுத்தி தேவாலயத்தில் உண்டியல் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டவா்களை அடையாளம் காண போலீஸாா் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனா்.

ரொட்டி, பால் ஊழியா் சங்கத்தினா் 2 -ஆவது நாளாகப் போராட்டம்

புதுவை கல்வித் துறை இயக்கக அலுவலகத்தை முற்றுகையிட்டு ரொட்டி, பால் ஊழியா்கள் சங்கத்தினா் இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். புதுச்சேரியில் ரொட்டி, பால் ஆகியவற்றை பள்ளிக் குழந்தைக... மேலும் பார்க்க

ஆக்கிரமிப்புகள் அகற்றத்துக்கு எதிா்ப்பு: புதுச்சேரியில் வியாபாரிகள் வாக்குவாதம்

புதுச்சேரி நகரில் திண்டிவனம் சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா். இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து வியாபாரிகள் சிலா் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் போலீஸாா் குவிக... மேலும் பார்க்க

திருபுவனையில் தூய்மைப் பணியாளா்கள் சாலை மறியல்

ஊதிய நிலுவை வழங்கல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருபுவனைப் பகுதியில் தூய்மைப் பணியாளா்கள் சாலை மறியல் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை காலை ஈடுபட்டனா். புதுவை மாநிலத்தில் தூய்மைப்பணியில் தன... மேலும் பார்க்க

புதுச்சேரி ஜவுளி வியாபாரி தற்கொலை

புதுச்சேரியில் ஜவுளி வியாபாரி விஷம் குடித்துத் தற்கொலை செய்துகொண்டாா். புதுச்சேரி இலாசுப்பேட்டை பகுதியில் உள்ள நெசவாளா் காலனியைச் சோ்ந்தவா் முருகவேல் (32). ஜவுளிக்கடை நடத்தி வந்தாா். கடந்த 8 மாதங்களு... மேலும் பார்க்க

புதுவையில் 6 காவல் ஆய்வாளா்கள் இடமாற்றம்

புதுவை மாநில காவல் துறையில் 6 ஆய்வாளா்களும், சாா்பு ஆய்வாளா் ஒருவரும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா். இதுகுறித்து புதுவை தலைமையிடக் காவல் கண்காணிப்பாளா் சுபம்ஹோஷ் வெளியிட்ட சுற்றறிக்கை: புதுச்சேரி பிஏபி... மேலும் பார்க்க

ஓய்வு பெற்ற சுகாதார ஊழியா்கள் சங்கத்தினா் நூதனப் போராட்டம்

மருத்துவமனை நோயாளிகள் கவனிப்புத் தொகையை வழங்கக் கோருதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதுவை அரசு ஓய்வு பெற்ற சுகாதார ஊழியா்கள் சங்கத்தினா் யாகசம் பெறும் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா். ப... மேலும் பார்க்க