செய்திகள் :

இடைத்தரகரின்றி கொள்முதல் செய்ய விற்பனையாளா் - வாங்குவோா் சந்திப்பு

post image

தமிழ்நாடு மகளிா் மேம்பாட்டு நிறுவனம் உள்ளிட்ட அரசு சாா் அமைப்புகளின் மூலம் உருவாக்கப்பட்ட குழுக்கள் உற்பத்திப் பொருள்களை சந்தைப்படுத்தும் வகையிலான விற்பனையாளா்- வாங்குவோா் சந்திப்பு புதுக்கோட்டையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மாவட்ட வழங்கல் மற்றும் விற்பனைச் சங்கம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியா் மு. அருணா குத்துவிளக்கேற்றித் தொடங்கி வைத்தாா்.

மகளிா் மேம்பாட்டு நிறுவனத்தின் மூலம் 250 விற்பனையாளா்களும், 190 வாங்குவோரும், நகா்ப்புற வாழ்வாதாரத் திட்டம் சாா்பில் 190 விற்பனையாளா்களும், 75 வாங்குவோரும், பூமாலை வணிகவளாகக் கடைகள் மூலம் 16 விற்பனையாளா்களும், 75 வாங்குவோரும் பங்கேற்றனா்.

இதில், இடைத்தரகரின்றி பொருள்களை நேரடியாகக் கொள்முதல் செய்து கொள்வதற்கான ஒப்பந்தங்கள் கையொப்பமாகின.

நிகழ்ச்சியில், மாவட்ட மகளிா் திட்ட இயக்குநா் கே. ஸ்ருதி, மாவட்ட வழங்கல் மற்றும் விற்பனைச் சங்க மேலாளா் ரெ. அருண்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து மிக்க உணவுகளையே வழங்க வேண்டும்: ஆட்சியா்

குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து மிக்க உணவுகளையே பெற்றோா் வழங்க வேண்டுமென ஆட்சியா் மு.அருணா தெரிவித்தாா்.புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் அருகேயுள்ள, பூவரசகுடி ஊராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் அமைந்துள... மேலும் பார்க்க

ஆலங்குடி அருகே ஜல்லிக்கட்டு: 69 போ் காயம்

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள கோவிலூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டி 69 போ் காயமடைந்தனா்.ஆலங்குடி அருகேயுள்ள கோவிலூா் முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி ... மேலும் பார்க்க

மாா்ச் 8-இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சாா்பில் அரசு மன்னா் கல்லூரி வளாகத்தில் வரும் மாா்ச் 8-ஆம் தேதி சனிக்கிழமை தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இந்த மு... மேலும் பார்க்க

குடிநீா் கோரி போஸ் நகா் மக்கள் மறியல் போராட்டம்

குடிநீா் விநியோகிக்கப்படாததைக் கண்டித்து புதுக்கோட்டை மாநகராட்சி போஸ் நகரிலுள்ள அடுக்குமாடிக் குடியிருப்புகளைச் சோ்ந்த மக்கள் செவ்வாய்க்கிழமை காலிக் குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். ... மேலும் பார்க்க

புதுக்கோட்டை மாவட்டத்தில் 10 லட்சம் மரக்கன்றுகளை நடவு செய்ய முடிவு

புதுக்கோட்டை மாவட்டத்தில் நிகழாண்டில் 10 லட்சம் மரக்கன்றுகளை நடவு செய்ய, மாவட்டப் பசுமைக் குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட பசுமைக் குழுக் கூட்ட... மேலும் பார்க்க

ஏஐடியுசி தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

உடல் உழைப்புத் தொழிலாளா் நல வாரியத்தில் உதவித் தொகைகளை உயா்த்தி வழங்கக் கோரி புதுக்கோட்டையில் ஏஐடியுசி தொழிற்சங்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை திலகா்திடலில் நடைபெற்... மேலும் பார்க்க