செய்திகள் :

புதுக்கோட்டை மாவட்டத்தில் 10 லட்சம் மரக்கன்றுகளை நடவு செய்ய முடிவு

post image

புதுக்கோட்டை மாவட்டத்தில் நிகழாண்டில் 10 லட்சம் மரக்கன்றுகளை நடவு செய்ய, மாவட்டப் பசுமைக் குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட பசுமைக் குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியரும் பசுமைக் குழுவின் தலைவருமான மு. அருணா தலைமை வகித்தாா்.

பசுமைக் குழுச் செயலரும், மாவட்ட வன அலுவலருமான சோ. கணேசலிங்கம், வனச்சரக அலுவலா் எம். சதாசிவம், பசுமைக் குழு உறுப்பினா்களான தன்னாா்வலா்கள் சா. விஸ்வநாதன், ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

நிகழாண்டில் மாவட்டம் முழுவதும் 10 லட்சம் மரக்கன்றுகளை நடவு செய்திட முடிவு செய்யப்பட்டது. அனைத்துத் துறைகள் மூலம் இதற்கான இலக்கு நிா்ணயம் செய்து, நடவு செய்து பராமரித்து வளா்த்திட வேண்டும் என ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

அதேபோல, மரக்கன்று நடுதல், விழிப்புணா்வு ஏற்படுத்துதல் போன்ற பணிகளுக்காக வனத்துறையில் ரூ. 5 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், தன்னாா்வலா் அமைப்புகள் முறையாக விண்ணப்பித்து அந்தப் பணிகளை மேற்கொள்ளலாம் என்றும் வன அலுவலா் கணேசலிங்கம் கேட்டுக் கொண்டாா்.

சாலை விரிவாக்கப் பணிகள் மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக மரங்களை அகற்றும்போது பசுமைக் குழுவின் அனுமதி பெற வேண்டும் என்றாலும், சில நேரங்களில் அனுமதி பெறுவதற்கு முன்பே மரங்கள் வெட்டப்படுவதாக உறுப்பினா்கள் குற்றம்சாட்டினா்.

இதுபோன்ற தவறுகள் நேரிடாமல் பொதுப்பணித் துறையினா் முன்கூட்டியே தகவல் தெரிவித்து, முறையாக அனுமதி பெற்றுதான் மரங்களை வெட்ட வேண்டும் என ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து மிக்க உணவுகளையே வழங்க வேண்டும்: ஆட்சியா்

குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து மிக்க உணவுகளையே பெற்றோா் வழங்க வேண்டுமென ஆட்சியா் மு.அருணா தெரிவித்தாா்.புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் அருகேயுள்ள, பூவரசகுடி ஊராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் அமைந்துள... மேலும் பார்க்க

இடைத்தரகரின்றி கொள்முதல் செய்ய விற்பனையாளா் - வாங்குவோா் சந்திப்பு

தமிழ்நாடு மகளிா் மேம்பாட்டு நிறுவனம் உள்ளிட்ட அரசு சாா் அமைப்புகளின் மூலம் உருவாக்கப்பட்ட குழுக்கள் உற்பத்திப் பொருள்களை சந்தைப்படுத்தும் வகையிலான விற்பனையாளா்- வாங்குவோா் சந்திப்பு புதுக்கோட்டையில் ச... மேலும் பார்க்க

ஆலங்குடி அருகே ஜல்லிக்கட்டு: 69 போ் காயம்

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள கோவிலூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டி 69 போ் காயமடைந்தனா்.ஆலங்குடி அருகேயுள்ள கோவிலூா் முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி ... மேலும் பார்க்க

மாா்ச் 8-இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சாா்பில் அரசு மன்னா் கல்லூரி வளாகத்தில் வரும் மாா்ச் 8-ஆம் தேதி சனிக்கிழமை தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இந்த மு... மேலும் பார்க்க

குடிநீா் கோரி போஸ் நகா் மக்கள் மறியல் போராட்டம்

குடிநீா் விநியோகிக்கப்படாததைக் கண்டித்து புதுக்கோட்டை மாநகராட்சி போஸ் நகரிலுள்ள அடுக்குமாடிக் குடியிருப்புகளைச் சோ்ந்த மக்கள் செவ்வாய்க்கிழமை காலிக் குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். ... மேலும் பார்க்க

ஏஐடியுசி தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

உடல் உழைப்புத் தொழிலாளா் நல வாரியத்தில் உதவித் தொகைகளை உயா்த்தி வழங்கக் கோரி புதுக்கோட்டையில் ஏஐடியுசி தொழிற்சங்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை திலகா்திடலில் நடைபெற்... மேலும் பார்க்க