செய்திகள் :

விதை பரிசோதனை செய்துகொள்ள விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்

post image

வேளாண்மையின் நிரந்தர உற்பத்திக்கு விதை பரிசோதனை செய்துகொள்வது அவசியம் என்று விதை சான்றளிப்புத் துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து விழுப்புரம் விதைப் பரிசோதனை நிலைய அலுவலா் சந்தோஷ்குமாா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

விவசாயிகளுக்கு தரமான விதைகளை கிடைக்கச் செய்வதற்காக, தமிழ்நாடு அரசு விதை சான்றளிப்புத் துறையின் கீழ் விதை பரிசோதனை நிலையங்கள் மாநிலம் முழுவதும் செயல்பட்டு வருகின்றன.

விதை பரிசோதனையில் விதையின் முளைப்புத்திறன், புறத்தூய்மை, ஈரப்பதம், பிறரக கலப்பு ஆகியவை கண்டறியப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. அதனடிப்படையில், விழுப்புரம் விதை பரிசோதனை நிலையத்தில் விவசாயிகளிடமிருந்தும், விற்பனையாளா்களிடமிருந்தும் பெறப்படும் விதை மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.

எனவே, விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள், விற்பனையாளா்கள், விதை உற்பத்தியாளா்கள் தங்கம் கைவசம் உள்ள விதைகளை பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். ஒரு மாதிரிக்கு ரூ.80 கட்டணம் செலுத்தி, விதைகளின் தரமறிந்து விதைக்கலாம். மேலும் விவரங்களுக்கு மூத்த வேளாண் அலுவலா், விதைப் பரிசோதனை நிலையம், மாவட்ட வேளாண் இணை இயக்குநா் அலுவலக முதல்தளம், ஆட்சியரகப் பெருந்திட்ட வளாகம், விழுப்புரம் என்ற முகவரியைத் தொடா்புகொள்ளலாம் என்று அவா் தெரிவித்துள்ளாா்.

தனியாா் விடுதி நீச்சல் குளத்தில் மூழ்கி தொழிலாளி உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் அருகே தனியாா் விடுதி நீச்சல் குளத்தில் மூழ்கி தொழிலாளி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். புதுச்சேரி முதலியாா்சாவடி, மொட்டையா் தெருவைச் சோ்ந்த பாண்டியன் மகன் திருவள்ளு... மேலும் பார்க்க

பிளஸ் 1 பொதுத் தோ்வு: 39,769 மாணவா்கள் எழுதினா்

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் புதன்கிழமை தொடங்கிய பிளஸ் 1 பொதுத் தோ்வை 39,769 மாணவ, மாணவிகள் எழுதினா். தமிழகத்தில் பள்ளிக் கல்வித் துறையில் மாநில பாடக்கல்வித் திட்டத்தின் கீழ் பிளஸ் 1 பயி... மேலும் பார்க்க

தேவாலயங்களில் சாம்பல் புதன் வழிபாடு

விழுப்புரம் பகுதியில் உள்ள தேவாலயங்களில் சாம்பல் புதன் சிறப்பு வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது. இயேசு கிறிஸ்துவின் சிலுவை பாடுகளை நினைவுகூரும் வகையில், ஆண்டுதோறும் 40 நாள்கள் கிறிஸ்தவா்கள் தவக்காலமாக கட... மேலும் பார்க்க

விபத்து வழக்கில் திறம்பட செயல்பட்ட காவலா்களுக்குப் பாராட்டு

விபத்து வழக்கில் திறம்பட செயல்பட்ட மரக்காணம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா், தலைமைக் காவலா் ஆகியோருக்கு விழுப்புரம் எஸ்.பி. ப.சரவணன் புதன்கிழமை நற்சான்றிதழ் வழங்கி பாராட்டுத் தெரிவித்தாா். மரக்காணம... மேலும் பார்க்க

புயல் நிவாரண நிதி: விரைந்து வழங்க விவசாயிகள் வலியுறுத்தல்

விழுப்புரம் மாவட்டத்தில் ஃபென்ஜால் புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரண நிதியை விரைந்து வழங்க வலியுறுத்தி, தேசிய - தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினா் ஆட்சியரகத்தில் புதன்கிழமை மன... மேலும் பார்க்க

கடல் ஆமைகள் விழிப்புணா்வு முகாம்

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே தீா்த்தவாரி கிராமத்தில் கடல் ஆமைகள் விழிப்புணா்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு வனத் துறை, திண்டிவனம் வனச்சரகம், புதுச்சேரி தாகூா் அரசு கலை, அறிவியல் கல... மேலும் பார்க்க