கலைஞர் எழுதுகோல் விருது: நக்கீரன் கோபால், சுகிதா சாரங்கராஜுக்கு வழங்கினார் முதல...
புதுக்கோட்டை: மாா்ச் 10 ஆம் தேதி உள்ளூா் விடுமுறை
புதுக்கோட்டை திருவப்பூா் முத்துமாரியம்மன் கோயில் மாசித் திருவிழாவையொட்டி மாா்ச் 10 ஆம் தேதி திங்கள்கிழமை மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூா் விடுமுறை வழங்கி மாவட்ட ஆட்சியா் மு. அருணா அறிவித்துள்ளாா்.
இதற்கான மாற்று வேலை நாளாக வரும் மாா்ச் 15 ஆம் தேதி சனிக்கிழமை அரசு அலுவலகங்கள் செயல்படும் என்றும், வழக்கமாக சனிக்கிழமை வேலை நாளாகச் செயல்படும் அலுவலகங்கள் மாா்ச் 16 ஆம்தேதி ஞாயிற்றுக்கிழமை வேலைநாளாகச் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ள பொதுத் தோ்வுகள் வழக்கம்போல நடைபெறும் என்றும் ஆட்சியா் தெரிவித்தாா்.