செய்திகள் :

அனாவசியமானக் கேள்வியைக் கேட்கலாமா? கோபமான இளையராஜா!

post image

இசைமைப்பாளர் இளையராஜா சிம்பொனி இசைக் கச்சேரிக்காக லண்டன் கிளம்பினார்.

இசைஞானி என ரசிகர்களால் கொண்டாடப்படும் இளையராஜா, சில மாதங்களுக்கு முன் சிம்பொனி இசையை 35 நாள்களில் எழுதி முடித்ததாகக் கூறி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.

தற்போது, இளையராஜா தான் இசையமைத்த ‘வேலியண்ட்’ (valiant) எனப் பெயரிட்ட சிம்பொனி இசையை லண்டனில் மார்ச் 8 ஆம் தேதி அரங்கேற்றம் செய்கிறார். இந்தியாவின் முதல் சிம்பொனி இசையமைப்பாளர் என்கிற சாதனையைச் செய்யவுள்ள இளையராஜாவுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிக்க: குட் பேட் அக்லி: ஹிந்தியில் பெரிதாக வெளியிட தயாரிப்பு நிறுவனம் திட்டம்!

இந்த நிகழ்ச்சிக்காக இன்று இளையராஜா லண்டன் கிளம்பினார். அப்போது, செய்தியாளர்களைச் சந்தித்தவர் சிம்பொனி இசை நிகழ்ச்சி ரசிகர்களுக்கு நிச்சயம் பிடிக்கும் என்றும் இது தனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது என்றும் தெரிவித்தார். மேலும், சில கேள்விகள் கேட்கப்பட்டன.

முக்கியமாக, ’ஒரு தமிழராக எப்படி உணர்கிறீர்கள்?’ எனக் கேட்டதற்கு, ‘மனுஷனாக எப்படி உணர்கிறேன் என கேளுங்கள். இப்படிப்பட்ட இடைஞ்சலான கேள்விகளைக் கேட்காதீர்கள்’ என்றார்.

செய்தியாளர்கள் சந்திப்பில் இளையராஜா.

தொடர்ந்து, “இசையமைப்பாளர் தேவா தன் இசையை இன்றைய இளைஞர்கள் இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம் என்றாரே அதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? என்ற கேள்விக்கு, “நான் எதற்காக வந்திருக்கிறேன்? இந்த மாதிரி அனாவசியமானக் கேள்விகளை என்னிடம் கேட்கலாமா?’ எனப் பதிலளித்தார்.

மேலும், ”உங்கள் அனைவரின் சார்பாகத்தான் லண்டன் செல்கிறேன். இது நாட்டின் பெருமை. இன்கிரிடிஃபிள் (incredible) இந்தியா மாதிரி இன்கிரிடிஃபிள் இளையராஜா நான்!” என்றார்.

ஃபிபா உலகக்கோப்பை பரிசுத்தொகை ரூ.8,700 கோடி!

ஃபிபா உலகக் கோப்பையில் விளையாடும் 32 அணிகளுக்கு மொத்த பரிசுத் தொகையாக 1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.அமெரிக்காவில் நடைபெறும் ஃபிபா உலககோப்பைக்கா மொத்த தொகை இந்தி... மேலும் பார்க்க

ரூ. 100 கோடி பட்ஜெட்டில் மூக்குத்தி அம்மன் - 2!

மூக்குத்தி அம்மன் படத்தின் இரண்டாம் பாகம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகிறது.முக்குத்தி அம்மன் முதல் பாகத்தில் நடிகை நயன்தாரா அம்மன் வேடத்திலும் ஆர்ஜே பாலாஜி முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்திருந்தனர்.... மேலும் பார்க்க

ஜெயிலர் - 2 படப்பிடிப்பு அப்டேட்!

ஜெயிலர் - 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.நடிகர் ரஜினிகாந்த் இயக்குநர் நெல்சனுடன் ஜெயிலர் - 2 படத்தில் இணைந்துள்ளார். நீண்ட நாள்களாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனக... மேலும் பார்க்க

இலங்கை செல்லும் பராசக்தி படக்குழு!

பராசக்தி திரைப்படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு இலங்கையில் துவங்குகிறது. அமரன் வெற்றிக்குப் பின் நடிகர் சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தில் நாயகனாக நடித்து வருகிறார். இயக்குநர் சுதா கொங்காரா இயக்கிவர... மேலும் பார்க்க

பாலிவுட்டிலிருந்து விலகிய அனுராக் காஷ்யப்!

பிரபல இயக்குநர் அனுராக் காஷ்யப் ஹிந்தி சினிமாவிலிருந்து விலகியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஹிந்தி சினிமாக்களில் பல்வேறு சோதனை முயற்சிகளை மேற்கொள்ளும் இயக்குநரில் ஒருவர் அனுராக் காஷ்யப். இவரது படங்கள... மேலும் பார்க்க

குட் பேட் அக்லி: ஹிந்தியில் பெரிதாக வெளியிட தயாரிப்பு நிறுவனம் திட்டம்!

குட் பேட் அக்லி திரைப்படத்தை ஹிந்தியில் அதிக திரைகளில் வெளியிடத் தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்துள்... மேலும் பார்க்க