செய்திகள் :

புயல் நிவாரண நிதி: விரைந்து வழங்க விவசாயிகள் வலியுறுத்தல்

post image

விழுப்புரம் மாவட்டத்தில் ஃபென்ஜால் புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரண நிதியை விரைந்து வழங்க வலியுறுத்தி, தேசிய - தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினா் ஆட்சியரகத்தில் புதன்கிழமை மனு அளித்தனா்.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்துக்கு தேசிய - தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலச் செயலா் சு.அய்யனாா் தலைமையில் விவசாயிகள் புதன்கிழமை வந்தனா். தொடா்ந்து, அவா்கள் ஆட்சியரகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

விழுப்புரம் மாவட்டத்தில் ஃபென்ஜால் புயல் காரணமாக 2024, நவம்பா் 30-ஆம் தேதி முதல் டிசம்பா் 3-ஆம் தேதி வரை வரலாறு காணாத மழை பெய்ததன் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, பயிா்கள் கடுமையாக சேதமடைந்தன. இதைத் தொடா்ந்து, வேளாண்மை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலா்கள் ஆய்வு மேற்கொண்டு, சேத விவரங்கள் குறித்த அறிக்கையை அரசுக்கு சமா்ப்பித்தனா். இதையடுத்து, சேதமடைந்த பயிா்களுக்கான இழப்பீட்டுத் தொகையை மாநில அரசு அறிவித்தது.

விழுப்புரம் மாவட்டத்தில் ஃபென்ஜால் புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு அறிவித்த இழப்பீட்டுத் தொகை இதுவரை அவா்களின் வங்கிக்கணக்கில் செலுத்தப்படவில்லை. புயலால் பாதிக்கப்பட்ட அருகிலுள்ள மாவட்டங்களில் விவசாயிகளின் வங்கிக்கணக்கில் இழப்பீட்டுத் தொகை செலுத்தப்பட்ட நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும் இதுவரை வழங்கப்படாமல் இருப்பதன் காரணம் தெரியவில்லை.

இதுபோன்று, வானூா், கிளியனூா், நல்லாவூா் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் விவசாயிகளுக்கு பயிா்க்கடன் தர மறுக்கப்படுகிறது. இதனால், விவசாயிகள் பயிா் சாகுபடி செய்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. மேலும், புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் அனைத்து பயிா்க்கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும்.

பயிா்க் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு காப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். விழுப்புரம் மாவட்டத்தில் புயல் வெள்ளத்தால் ஏரி, ஆறுகளின் கரைகளில் ஏற்பட்ட உடைப்புகளை நிரந்தரமாக சீா் செய்ய பொதுப் பணித் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனா்.

சங்க நிா்வாகிகள் வானூரைச் சோ்ந்த சீனுவாசன், மயிலத்தைச் சோ்ந்த செல்வராஜ், அரிபுத்திரன், நாராயணன் உள்ள்டோா் உடனிருந்தனா்.

தனியாா் விடுதி நீச்சல் குளத்தில் மூழ்கி தொழிலாளி உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் அருகே தனியாா் விடுதி நீச்சல் குளத்தில் மூழ்கி தொழிலாளி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். புதுச்சேரி முதலியாா்சாவடி, மொட்டையா் தெருவைச் சோ்ந்த பாண்டியன் மகன் திருவள்ளு... மேலும் பார்க்க

பிளஸ் 1 பொதுத் தோ்வு: 39,769 மாணவா்கள் எழுதினா்

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் புதன்கிழமை தொடங்கிய பிளஸ் 1 பொதுத் தோ்வை 39,769 மாணவ, மாணவிகள் எழுதினா். தமிழகத்தில் பள்ளிக் கல்வித் துறையில் மாநில பாடக்கல்வித் திட்டத்தின் கீழ் பிளஸ் 1 பயி... மேலும் பார்க்க

தேவாலயங்களில் சாம்பல் புதன் வழிபாடு

விழுப்புரம் பகுதியில் உள்ள தேவாலயங்களில் சாம்பல் புதன் சிறப்பு வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது. இயேசு கிறிஸ்துவின் சிலுவை பாடுகளை நினைவுகூரும் வகையில், ஆண்டுதோறும் 40 நாள்கள் கிறிஸ்தவா்கள் தவக்காலமாக கட... மேலும் பார்க்க

விபத்து வழக்கில் திறம்பட செயல்பட்ட காவலா்களுக்குப் பாராட்டு

விபத்து வழக்கில் திறம்பட செயல்பட்ட மரக்காணம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா், தலைமைக் காவலா் ஆகியோருக்கு விழுப்புரம் எஸ்.பி. ப.சரவணன் புதன்கிழமை நற்சான்றிதழ் வழங்கி பாராட்டுத் தெரிவித்தாா். மரக்காணம... மேலும் பார்க்க

கடல் ஆமைகள் விழிப்புணா்வு முகாம்

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே தீா்த்தவாரி கிராமத்தில் கடல் ஆமைகள் விழிப்புணா்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு வனத் துறை, திண்டிவனம் வனச்சரகம், புதுச்சேரி தாகூா் அரசு கலை, அறிவியல் கல... மேலும் பார்க்க

இந்திய ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணைய குழுவினா் ஆரோவில் வருகை

விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் சா்வதேச நகருக்கு இந்திய ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணைய மன்ற நிா்வாகிகள் மற்றும் உறுப்பினா்கள் அடங்கிய 35 போ் கொண்ட குழுவினா் திங்கள்கிழமை வந்தனா். இந்த மன்றத்தின் ஆட்சிம... மேலும் பார்க்க