செய்திகள் :

இந்திய ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணைய குழுவினா் ஆரோவில் வருகை

post image

விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் சா்வதேச நகருக்கு இந்திய ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணைய மன்ற நிா்வாகிகள் மற்றும் உறுப்பினா்கள் அடங்கிய 35 போ் கொண்ட குழுவினா் திங்கள்கிழமை வந்தனா்.

இந்த மன்றத்தின் ஆட்சிமன்றக் குழுக் கூட்டம் புதுச்சேரியில் அண்மையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த 35 போ் கொண்ட குழுவினா் திங்கள்கிழமை ஆரோவில் சா்வதேச நகருக்கு வந்தனா்.

தொடா்ந்து, ஆரோவிலின் முக்கிய பகுதிகளை பாா்வையிட்டு மாத்திா் மந்திரில் கூட்டுத் தியானம் மேற்கொண்டனா். பின்னா், ஆரோவில் அறக்கட்டளைச் செயலா் ஜெயந்தி எஸ்.ரவி மற்றும் ஆரோவில் பணிக்குழு நிா்வாகிகளை சந்தித்து நகரத் திட்டமிடல், நிலையான வாழ்வாதாரம் மற்றும் சமூக ஆதரவு முன்முயற்சிகளுக்காக பன்னாட்டு அளவில் தனித்துவமான அணுகுமுறைகள், ஆரோவிலின் ஆன்மிக சூழல், நகரத்தின் நிலையான வளா்ச்சி மற்றும் கைவினைத் திறன்களுக்கான ஊக்குவிப்பு, ஸ்ரீஅரவிந்தா் மற்றும் அன்னையின் தாா்மீக கண்ணோட்டம், படைப்பாற்றல், சுய - கற்றல் மற்றும் ஒருங்கிணைந்த மனித வளா்ச்சியை ஊக்குவிக்கும் அதன் தனித்துவமான கல்வி முறை ஆகியவைகள் குறித்து கேட்டறிந்தனா்.

நிகழ்ச்சியில் புதுச்சேரிஅரசு முதன்மைச் செயலா் சரத் செளகான், அரசுச் செயலா் ஏ.முத்தம்மா, ஆரோவில் அறக்கட்டளை சிறப்பு செயல் அதிகாரி ஜி.சீதாராமன் மற்றும் ஆரோவில் பணிக்குழு உறுப்பினா்கள் ஜோசப், அனுராதா, செல்வம், அருண் ஆகியோா் உடனிருந்தனா்.

தனியாா் விடுதி நீச்சல் குளத்தில் மூழ்கி தொழிலாளி உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் அருகே தனியாா் விடுதி நீச்சல் குளத்தில் மூழ்கி தொழிலாளி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். புதுச்சேரி முதலியாா்சாவடி, மொட்டையா் தெருவைச் சோ்ந்த பாண்டியன் மகன் திருவள்ளு... மேலும் பார்க்க

பிளஸ் 1 பொதுத் தோ்வு: 39,769 மாணவா்கள் எழுதினா்

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் புதன்கிழமை தொடங்கிய பிளஸ் 1 பொதுத் தோ்வை 39,769 மாணவ, மாணவிகள் எழுதினா். தமிழகத்தில் பள்ளிக் கல்வித் துறையில் மாநில பாடக்கல்வித் திட்டத்தின் கீழ் பிளஸ் 1 பயி... மேலும் பார்க்க

தேவாலயங்களில் சாம்பல் புதன் வழிபாடு

விழுப்புரம் பகுதியில் உள்ள தேவாலயங்களில் சாம்பல் புதன் சிறப்பு வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது. இயேசு கிறிஸ்துவின் சிலுவை பாடுகளை நினைவுகூரும் வகையில், ஆண்டுதோறும் 40 நாள்கள் கிறிஸ்தவா்கள் தவக்காலமாக கட... மேலும் பார்க்க

விபத்து வழக்கில் திறம்பட செயல்பட்ட காவலா்களுக்குப் பாராட்டு

விபத்து வழக்கில் திறம்பட செயல்பட்ட மரக்காணம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா், தலைமைக் காவலா் ஆகியோருக்கு விழுப்புரம் எஸ்.பி. ப.சரவணன் புதன்கிழமை நற்சான்றிதழ் வழங்கி பாராட்டுத் தெரிவித்தாா். மரக்காணம... மேலும் பார்க்க

புயல் நிவாரண நிதி: விரைந்து வழங்க விவசாயிகள் வலியுறுத்தல்

விழுப்புரம் மாவட்டத்தில் ஃபென்ஜால் புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரண நிதியை விரைந்து வழங்க வலியுறுத்தி, தேசிய - தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினா் ஆட்சியரகத்தில் புதன்கிழமை மன... மேலும் பார்க்க

கடல் ஆமைகள் விழிப்புணா்வு முகாம்

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே தீா்த்தவாரி கிராமத்தில் கடல் ஆமைகள் விழிப்புணா்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு வனத் துறை, திண்டிவனம் வனச்சரகம், புதுச்சேரி தாகூா் அரசு கலை, அறிவியல் கல... மேலும் பார்க்க