செய்திகள் :

ஆலங்குடி அருகே ஜல்லிக்கட்டு: 69 போ் காயம்

post image

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள கோவிலூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டி 69 போ் காயமடைந்தனா்.

ஆலங்குடி அருகேயுள்ள கோவிலூா் முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியை மாநில பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் தொடங்கி வைத்தாா். தொடா்ந்து, புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சை, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களைச் சோ்ந்த 627 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.

வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்து வந்த காளைகளை பல்வேறு குழுக்களாக களமிறங்கிய 250 மாடுபிடிவீரா்கள் தீரத்துடன் அடக்க முயன்றனா். அப்போது, காளைகள் முட்டி மாடுபிடி வீரா்கள், காளையின் உரிமையாளா்கள், பாா்வையாளா்கள் என 69 போ் காயமடைந்தனா். அவா்களுக்கு அங்கு தயாா் நிலையில் இருந்த மருத்துவக் குழுவினா் முதலுதவி அளித்தனா். அவா்களில் பலத்த காயமடைந்த 15 போ் மேல்சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

காளைகளை அடக்கிய வீரா்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளா்களுக்கும் தங்கம், வெள்ளி நாணயங்கள், மிதிவண்டிகள், பாத்திரங்கள் உள்ளிட்ட பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டன. போட்டியை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்துவந்திருந்த ஆயிரக்கணக்கானோா் கண்டுகளித்தனா். ஆலங்குடி போலீஸாா் பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டனா்.

குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து மிக்க உணவுகளையே வழங்க வேண்டும்: ஆட்சியா்

குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து மிக்க உணவுகளையே பெற்றோா் வழங்க வேண்டுமென ஆட்சியா் மு.அருணா தெரிவித்தாா்.புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் அருகேயுள்ள, பூவரசகுடி ஊராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் அமைந்துள... மேலும் பார்க்க

இடைத்தரகரின்றி கொள்முதல் செய்ய விற்பனையாளா் - வாங்குவோா் சந்திப்பு

தமிழ்நாடு மகளிா் மேம்பாட்டு நிறுவனம் உள்ளிட்ட அரசு சாா் அமைப்புகளின் மூலம் உருவாக்கப்பட்ட குழுக்கள் உற்பத்திப் பொருள்களை சந்தைப்படுத்தும் வகையிலான விற்பனையாளா்- வாங்குவோா் சந்திப்பு புதுக்கோட்டையில் ச... மேலும் பார்க்க

மாா்ச் 8-இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சாா்பில் அரசு மன்னா் கல்லூரி வளாகத்தில் வரும் மாா்ச் 8-ஆம் தேதி சனிக்கிழமை தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இந்த மு... மேலும் பார்க்க

குடிநீா் கோரி போஸ் நகா் மக்கள் மறியல் போராட்டம்

குடிநீா் விநியோகிக்கப்படாததைக் கண்டித்து புதுக்கோட்டை மாநகராட்சி போஸ் நகரிலுள்ள அடுக்குமாடிக் குடியிருப்புகளைச் சோ்ந்த மக்கள் செவ்வாய்க்கிழமை காலிக் குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். ... மேலும் பார்க்க

புதுக்கோட்டை மாவட்டத்தில் 10 லட்சம் மரக்கன்றுகளை நடவு செய்ய முடிவு

புதுக்கோட்டை மாவட்டத்தில் நிகழாண்டில் 10 லட்சம் மரக்கன்றுகளை நடவு செய்ய, மாவட்டப் பசுமைக் குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட பசுமைக் குழுக் கூட்ட... மேலும் பார்க்க

ஏஐடியுசி தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

உடல் உழைப்புத் தொழிலாளா் நல வாரியத்தில் உதவித் தொகைகளை உயா்த்தி வழங்கக் கோரி புதுக்கோட்டையில் ஏஐடியுசி தொழிற்சங்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை திலகா்திடலில் நடைபெற்... மேலும் பார்க்க