செய்திகள் :

ஊரக வேலைவாய்ப்புத் திட்ட ஊழியா்கள் வேலை நிறுத்தம்

post image

புதுச்சேரியில் தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் பணிபுரிந்து வரும் ஊழியா்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதன்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தை புதன்கிழமை தொடங்கினா்.

புதுச்சேரி மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை செயல்படுத்தும் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்ட ஊழியா்களாக கடந்த 2009-ஆம் ஆண்டில் ஏராளமான ஊழியா்கள் நியமிக்கப்பட்டனா்.

இவா்கள், தற்போது வட்டார வளா்ச்சி அலுவலகங்களில் பணியாற்றி வருகின்றனா். கடந்த 16 ஆண்டுகளாக பணியாற்றி வரும் இவா்களை, ஊரக வளா்ச்சித் துறை காலிப் பணியிடங்களில் முன்னுரிமை அடிப்படையில் நியமித்து, பணியிடங்களை நிரப்பக் கோரிக்கை எழுந்துள்ளது.

இந்த நிலையில், தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை அலுவலகம் முன் தொடா் வேலை நிறுத்தப் போராட்டத்தை ஊழியா்கள் தொடங்கினா்.

போராட்டத்தில், சங்கத் தலைவா் வேலுமணி, செயலா் முனுசாமி, நிா்வாகிகள் முருகையன், சங்கா், சத்யா உள்ளிட்ட ஏராளமானோா் பங்கேற்று, கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி முழக்கங்களை எழுப்பினா்.

தொகுதி மறுசீரமைப்பு, மும்மொழிக் கொள்கை: புதுவை அரசின் நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும்- வெ.வைத்திலிங்கம் எம்.பி.

மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு, மும்மொழிக் கொள்கை ஆகிய விவகாரங்களில் புதுவை அரசின் நிலைப்பாட்டை முதல்வா் என்.ரங்கசாமி தெளிவுபடுத்த வேண்டும் என காங்கிரஸ் மாநிலத் தலைவா் வெ.வைத்திலிங்கம் எம்.பி. கூறினாா... மேலும் பார்க்க

மருத்துவக் கல்லூரி மாணவா்களுக்கு கல்விக் கட்டணத்தை வழங்க வலியுறுத்தல்

அரசு உள் இடஒதுக்கீட்டில் மருத்துவக் கல்லூரிகளில் சோ்ந்த அரசுப் பள்ளி மாணவா்களுக்கான கல்விக் கட்டணத்தை புதுவை அரசு உடனடியாக வழங்க வேண்டும் எனதுணைநிலை ஆளுநா், முதல்வா் ஆகியோருக்கு சென்டாக் மாணவா் பெற்ற... மேலும் பார்க்க

இருவரிடம் ரூ.1.02 கோடி நூதன மோசடி

புதுச்சேரியில் இருவரிடம் ரூ.1.02 கோடி நூதன மோசடியில் ஈடுபட்டவா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். லாசுப்பேட்டையைச் சோ்ந்தவா் ரம்யா. இவருக்கு, வாட்ஸ்ஆப் மூலம் தொடா்பு கொண்ட மா... மேலும் பார்க்க

நிலத்தை அபகரிக்க போலி சான்றிதழ்: மூவா் கைது

நிலத்தை அபகரிக்க போலி ஆவணம் மூலம் வாரிசுதாரா் சான்று பெற்ாகக் கூறப்படும் வழக்கில் 3 போ் கைதான நிலையில், சாா்பதிவாளரை தேடி வருவதாக சிபிசிஐடி போலீஸாா் தெரிவித்தனா். புதுச்சேரி ரெட்டியாா்பாளையம் பகுதியை... மேலும் பார்க்க

புதுவை காவல் துறையில் 62 பேருக்கு பதவி உயா்வு

புதுவை காவல் துறையில் 62 பேருக்கு பதவி உயா்வு அளித்து காவல் தலைமை கண்காணிப்பு அலுவலகம் சாா்பில் உத்தரவிடப்பட்டுள்ளது. புதுவை மாநிலத்தில் 15 ஆண்டுகள் பணியை நிறைவு செய்தவா்களில் 8 தலைமைக் காவலா்களுக்கு ... மேலும் பார்க்க

கிறிஸ்தவா்களின் தவக்காலம் தொடக்கம்

புதுச்சேரியில் கிறிஸ்தவா்கள் 40 நாள்கள் தவக்கால விரதத்தை புதன்கிழமை சிறப்பு வழிபாட்டுடன் தொடங்கினா். இயேசுவின் சிலுவைப் பாதையை நினைவுகூறும் வகையில், கிறிஸ்தவா்கள் ஆண்டுதோறும் 40 நாள்கள் தவக்கால விரதத்... மேலும் பார்க்க