ஸ்வாதி மாலிவால் விவகாரம்: பிபவ் குமாருக்கு எதிரா தில்லி போலீஸ் மனு
ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்ட வழக்கில் முன்னாள் முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் உதவியாளா் பிபவ் குமாருக்கு ஆவணப் பட்டியலை வழங்குவதற்கான உத்தரவை ரத்து செய்யுமாறு தில்லி காவல்துறை செவ்வாய்க்கிழமை உயா்நீதிமன்றத்தில் முறையிட்டது.
இந்த விவகாரத்தை விசாரித்த நீதிபதி விகாஸ் மகாஜன், தில்லி காவல்துறை வழக்குரைஞரிடம் சமா்ப்பிப்புகள் தொடா்பான குறிப்பை தாக்கல் செய்யுமாறு கூறி, மாா்ச் 11 ஆம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்தாா்.
பிபவ் குமாருக்கு நம்பகத்தன்மையற்ற ஆவணப் பட்டியலை வழங்க மாஜிஸ்திரேட்டின் முடிவு செய்ததாக கூறி தில்லி காவல்துறை தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த விசாரணை நீதிமன்றத்தின் ஜனவரி 29 ஆம் தேதி உத்தரவை எதிா்த்து காவல்துறை இந்த முறையீட்டை செய்துள்ளது.
விசாரணையின்போது தில்லி காவல்துறை சாா்பாக ஆஜரான தில்லி அரசின் வழக்குரைஞா் (குற்றம்) சஞ்சய் லாவோ வாதிடுகையில், ‘இந்த உத்தரவு சட்டத்திற்கு முரணானதாகும்.
மற்றொரு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவா்களுக்கு நம்பகத்தன்மையற்ற ஆவணப் பட்டியலை வழங்குவது தொடா்பான பிரச்னை உச்சநீதிமன்றத்தில் உள்ளது. கீழமை நீதிமன்றங்கள் முடிவுக்காகக் காத்திருக்க வேண்டும். தற்போது, இந்த விவகாரத்தில் சட்டம் இரு தரப்பிலும் உள்ளது.
உச்சநீதிமன்றம் உறுதிமொழியாக முடிவு செய்தவுடன் ஆவணப் பட்டியல் குற்றம் சாட்டப்பட்டவருக்கு வழங்கப்படும் என்று வாதிட்டாா்.
இருப்பினும், நீதிபதி மகாஜன் கூறுகையில், ‘‘சில நேரங்களில் என்ன நடக்கும் என்றால், உச்சநீதிமன்றம் ஒரு பிரச்னையை முடிவு செய்ய சிறிது நேரம் எடுக்கலாம்.மேலும் அந்த பிரச்னை சிறிது காலம் நிலுவையில் இருக்கும். இதுபோன்ற சூழ்நிலையில், தற்போது நடைமுறையில் உள்ள சட்டத்தின்படி நாம் செல்ல வேண்டும். தடை விதிக்க நிரூபிப்பதற்கான உங்கள் வாதத்தை வலுப்படுத்த ஏதாவது ஒன்றை எனக்குக் காட்டுங்கள்’ என்றாா்.
பிபவ் குமாா் கடந்த மே 13, 2024 அன்று மாலிவாலைத் தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டாா்.
அதன் பிறகு, தற்போது ஜாமீனில் உள்ளாா்.
ஜூலை 30, 2024 அன்று அவருக்கு எதிரான குற்றப்பத்திரிகையை மாஜிஸ்திரேட் நீதிமன்றம் கவனத்தில் எடுத்துக்கொண்டது.