செய்திகள் :

வேலூர்: ``NSG கமாண்டோக்கள் ஒத்திகை பயிற்சி... தவறாக பகிரக் கூடாது'' - எச்சரிக்கும் காவல்துறை

post image

வேலூர் வி.ஐ.டி பல்கலைக்கழக வளாகத்துக்குள் முகமூடி அணிந்த கும்பல் ஒன்று துப்பாக்கி ஆயுதங்களை ஏந்திக்கொண்டு காரில் உள்ளே சென்று... திடீர் குண்டு வெடிப்புகளை நிகழ்த்துவதைப் போன்ற தவறான தகவல்களை சிலர் பதிவிட்டு, இரண்டொரு வீடியோக்களையும் சமூக வலைதள பக்கங்களில் பதிவேற்றம் செய்திருக்கின்றனர். இந்த வீடியோக்கள் தொடர்பான உண்மைத்தன்மை அறியாமல், பலரும் பலவாறாக கேள்விகளையெழுப்பி பகிர்ந்து வருகின்றனர்.

உண்மையில் வி.ஐ.டி பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது, `பயங்கரவாத தடுப்பு கூட்டு ஒத்திகை’ பயிற்சி தான்.

பயங்கரவாத தடுப்பு கூட்டு ஒத்திகை பயிற்சி

முகமூடி அணிந்திருந்த நபர்கள் பயங்கரவாதிகள் கிடையாது. என்.எஸ்.ஜி (National Security Guard) எனும் தேசிய பாதுகாப்புப் படை வீரர்கள். அதாவது, கருப்புப் பூனைகள் என்றழைக்கப்படும், இந்தியாவின் உயரடுக்கு பயங்கரவாத எதிர்ப்புப் படையைச் சேர்ந்த கமாண்டோக்கள். மார்ச் 2-ம் தேதியான கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்த பயிற்சி மேற்கொள்ளப்பட்டது. கமாண்டன்ட் சந்தீப்குமார் தலைமையில் 104 என்.எஸ்.ஜி கமாண்டோக்கள் பங்கேற்றனர்.

இவர்களுடன் தமிழ்நாடு கமாண்டோ பிரிவின் எஸ்.பி அருண் பாலகோபாலன் தலைமையின்கீழ் 57 வீரர்கள் மற்றும் வேலூர் மாவட்ட எஸ்.பி மதிவாணன் தலைமையிலான போலீஸாரும் இணைந்து பயிற்சியில் ஈடுபட்டனர். ஞாயிற்றுக்கிழமை காலை 11.30 மணி முதல் மாலை 6.40 மணி வரை இந்த கூட்டு ஒத்திகை பயிற்சி நடைபெற்று முடிந்தது. இது தொடர்பாக வேலூர் மாவட்டக் காவல்துறை தரப்பில் இருந்தும் விரிவான செய்திக் குறிப்பு வெளியிடப்பட்டது. அதோடு, பத்திரிகை, ஊடகங்களிலும் தெளிவான செய்திகள் ஒளிபரப்பப்பட்டன.

சமூக வலைதள பதிவுகள்

அப்படியிருந்தும், பல்கலைக்கழக வளாகத்துக்கு வெளியிலும், உள்ளேயும் வேடிக்கை பார்க்க நின்றிருந்த சிலர் செல்போன்களில் வீடியோக்களை எடுத்து தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர். இது ஒரு வகையில், சமூக பதற்றத்துக்கும் வழி வகுக்கிறது. தேசப் பாதுகாப்பு தொடர்பான ஒத்திகைப் பயிற்சியை தவறான நோக்கத்துடன் பரப்புவது கடுமையான குற்றம் என எச்சரிக்கை விடுத்திருக்கும் போலீஸார், மேற்கொண்டு பகிரக் கூடாது எனவும் அறிவுறுத்தியிருக்கின்றனர்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

சென்னை: பேராசிரியை வீட்டில் நகை, பணம் திருட்டு... போலீஸில் சிக்கிய மாணவி!

சென்னை, அசோக்நகர், 19-வது அவென்யூ பகுதியில் வசித்து வருபவர் கலாவதி (74). இவர், கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரின் கணவர் மணி. உடல்நலம் பாதிக்கப்பட்ட மணியை கவனித்துக் கொள்ள விழுப... மேலும் பார்க்க

லண்டனிலிருந்து கொரியரில் போதைப்பொருள் கடத்திய கும்பல்; சிக்கியது எப்படி? விசாரணையில் பகீர் தகவல்கள்

உலகம் முழுவதும் இருந்து போதைப்பொருள் மும்பைக்குப் பல்வேறு வடிவங்களில் கடத்தி வரப்படுகிறது. அதிகமான நேரங்களில் சிறிய அளவில் கொரியர் மூலம் கடத்தி வரப்படுகிறது. சில நேரங்களில் போதைப்பொருளை மாத்திரையில் அ... மேலும் பார்க்க

குழந்தை பிரசவித்த ஆதரவற்ற சிறுமி; உறவினர் உட்பட 2 பேர் போக்சோவில் கைது - குடியாத்தம் அதிர்ச்சி!

வேலூர் மாவட்டம், குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த ஆதரவற்ற 16 வயது சிறுமி அவர். சில ஆண்டுகளுக்கு முன்பு சிறுமியின் தந்தை இறந்துவிட்டார். மனவளர்ச்சிக் குன்றிய அவரின் தாயும் நாளடைவில் மாயமாகிவிட்டார்.இதனால்... மேலும் பார்க்க

உ.பி இளம்பெண் கொலை: மொட்டைபோட்டு கங்கையில் நீராடல்; கேரளாவுக்கு தப்ப முயன்றபோது சிக்கிய காதலன்!

உத்தரப்பிரதேச மாநிலம், ஜான்பூரில் மருத்துவமனை ஒன்றிற்கு அருகில் இருந்த புதரில் டிராலி பேக் ஒன்று கிடந்தது. இது குறித்து போலீஸாருக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தனர். போலீஸார் அந்த பேக்கை பறிமுதல் செய்து த... மேலும் பார்க்க

கோவை: மனைவியை சுட்டுக் கொன்று, தற்கொலை செய்த கணவர் - பின்னணி என்ன?

கோவை அருகே மனைவியை துப்பாக்கியால் சுட்டுக்கொன்று, கணவரும் சுட்டு தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம், சூலூர் அருகே உள்ள பட்டணம்புதூர் என்கிற பகுதியில் கிருஷ்ணகுமார் - சங... மேலும் பார்க்க

புல்லட் திருட்டில் ஸ்பெஷலிஸ்ட்; 9 புல்லட்கள் பறிமுதல்; 2 திருடர்கள் சிக்கியது எப்படி?

திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் டூவிலர் திருட்டு அதிகமாக நடப்பதாகத் தொடர்ச்சியான புகார்கள் வரத் தொடங்கின. இதனால் மாவட்ட எஸ்.பி பிரதீப் உத்தரவின் பேரில் தனிப்படை போலீஸார் டூவிலர் திருட்டு வ... மேலும் பார்க்க