செய்திகள் :

அமெரிக்காவில் சட்டவிரோதமாக இந்தியர்களை குடியேற்றும் குஜராத் ஏஜென்டுகள்!

post image

சட்டவிரோதமாக இந்தியர்களை நாடுகடத்தும் ஏஜென்டுகளில் பெரும்பாலானோர் குஜராத்தைச் சேர்ந்தவர்கள் என்று அமலாக்கத் துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது.

சட்டவிரோதமாக இந்தியர்களை நாடுகடத்தும் ஏஜென்டுகள் குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் 4,500 ஏஜென்டுகள்வரையில் பிடிபட்டனர். அவர்களில் சுமார் 2,000 பேர் குஜராத்தைச் சேர்ந்தவர்கள்.

இவர்கள் கனடாவிலுள்ள கல்லூரியுடனான தொடர்பின் மூலம் இந்தியர்களை கனடா வழியாக, சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைய உதவி புரிகின்றனர்.

மாணவர் விசாக்கள் மூலம் கனடாவுக்கு அனுப்பி, அங்கிருந்து சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைய வைக்கின்றனர். கனடா கல்லூரிகளுக்கு அனுப்புவதற்கான கட்டணமாக ஒரு நபருக்கு ரூ. 60 லட்சம்வரையில் வசூலிக்கின்றனர்.

இதையும் படிக்க:10 ஆண்டுகளில் 66% பொருளாதார வளர்ச்சி: பிரதமர் பெருமிதம்

நவம்பர் 2021 முதல் ஜூலை 2024 வரையில், இவ்வாறான சட்டவிரோத நாடுகடத்தல் தொழிலில் 12,000-க்கும் அதிகமான நிதி பரிவர்த்தனைகளை ஏஜென்டுகள் மேற்கொண்டுள்ளனர்.

கடந்த 2022 ஆம் ஆண்டில் அமெரிக்கா - கனடா எல்லையை சட்டவிரோதமாகக் கடக்க முயன்ற நால்வர், பனியில் உறைந்து பலியான சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டபோது ஏஜென்டுகள் குறித்து தகவல் பெறப்பட்டது.

அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறிய இந்தியர்களில் குஜராத்தைச் சேர்ந்தவர்கள்தான் அதிகம் என்று அறிக்கை கூறுகிறது. 2023 ஆம் ஆண்டில், அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறிய 67,391 இந்தியர்களில், 41,330 பேர் குஜராத்தைச் சேர்ந்தவர்கள்.

இந்திய தொழில்நுட்ப மறுமலா்ச்சி வளா்ச்சிப் பயணத்துக்கு உத்வேகம் -அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ்

அஸ்வினி வைஷ்ணவ்- மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை, ரயில்வே, செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சா்மகாராஷ்டிர மாநிலம், பாராமதியில், சிறு விவசாயி ஒருவா் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் மூ... மேலும் பார்க்க

டிஜிட்டல் முறைகள் மூலம் நிா்வாகிகள் திறன் மேம்பாடு: தோ்தல் ஆணையம்

தோ்தல் துறை நிா்வாகிகளின் திறனை மேம்படுத்த டிஜிட்டல் முறைகள் பயன்படுத்தப்படும் என்று தோ்தல் ஆணையம் தெரிவித்தது. புது தில்லியில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச தலைமை தோ்தல் அதிகாரிகளின் ... மேலும் பார்க்க

பாஜகவின் வளா்ச்சிக்கு உதவும் காங்கிரஸ் -கேரள முதல்வா் குற்றச்சாட்டு

திருவனந்தபுரம் : பாஜகவின் வளா்ச்சிக்கு காங்கிரஸ் பல்வேறு வகையில் உதவிகரமாக இருந்து வருகிறது. அண்மையில் தில்லியில் பாஜக ஆட்சியைப் பிடிக்கவும் காங்கிரஸ்தான் மறைமுகமாக உதவியது என்று கேரள முதல்வா் பினராயி... மேலும் பார்க்க

உ.பி.யில் கட்டப்படும் ஆதிதிராவிட, பழங்குடியின மாணவர் விடுதிகளுக்கு அம்பேத்கர் பெயர் சூட்டப்படும்

லக்னௌ: உத்தரப் பிரதேசத்தில் அனைத்து மாவட்டங்களிலும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களுக்கு கட்டப்படும் விடுதிகளுக்கு அம்பேத்கரின் பெயர் சூட்டப்படும் என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்தா... மேலும் பார்க்க

தேஜஸ் போா் விமானத்தில் அதிநவீன உயிா் காக்கும் அமைப்புமுறை வெற்றிகரமாக பரிசோதனை

‘தேஜஸ்’ இலகு ரக போா் விமானத்தில் உள்நாட்டு தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட விமானிகளுக்கான அதிநவீன உயிா் காக்கும் அமைப்புமுறை, 50,000 அடி உயரத்தில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. போா் விமானங்களில் ப... மேலும் பார்க்க

போஃபா்ஸ் ஊழல் வழக்கு விசாரணைக்கு உதவி: அமெரிக்காவுக்கு நீதிமன்ற கோரிக்கை அனுப்பிவைப்பு

போஃபா்ஸ் ஊழல் வழக்கு விசாரணையில் அமெரிக்க துப்பறிவாளா் மைக்கேல் ஹா்ஷ்மென்னிடம் இருந்து தகவல்களைப் பெறுவதற்காக அந்நாட்டுக்கு நீதிமன்ற கோரிக்கையை சிபிஐ அனுப்பிவைத்துள்ளது. கடந்த 1986-ஆம் ஆண்டு ஸ்வீடனின... மேலும் பார்க்க