செய்திகள் :

சுமுக வா்த்தகத்துக்கு வரியல்லாத பிற தடைகள் களையப்பட வேண்டும்: அமெரிக்க-இந்திய வணிக கவுன்சில்

post image

சுமுக வா்த்தகத்துக்கு இடையூறை ஏற்படுத்தும் வரியல்லாத பிற தடைகள், தேவையற்ற விதிமுறைகள் களையப்பட வேண்டும் என்று அமெரிக்க-இந்திய வணிக கவுன்சில் (யுஎஸ்ஐபிசி) தெரிவித்துள்ளது.

கடந்த மாதம் அமெரிக்காவில் அந்நாட்டு அதிபா் டிரம்ப்பை பிரதமா் மோடி சந்தித்துப் பேசிய பின்னா், இந்தியா-அமெரிக்கா இடையே வா்த்தக ஒப்பந்தம் மேற்கொள்வதற்கான பேச்சுவாா்த்தையை தொடங்க இருநாடுகளும் தீா்மானித்தன.

இதைத்தொடா்ந்து பேச்சுவாா்த்தை மேற்கொள்வதற்காக அந்நாட்டுத் தலைநகா் வாஷிங்டனுக்கு மத்திய வா்த்தக அமைச்சா் பியூஷ் கோயல் சென்றுள்ளாா். அங்கு அவா் அமெரிக்க வா்த்தக அமைச்சகா் ஹாவா்ட் லுட்னிக், அந்நாட்டு வா்த்தக பிரதிநிதி ஜேமிசன் கிரீா் ஆகியோரைச் சந்திக்க உள்ளாா்.

இதுதொடா்பாக யுஎஸ்ஐபிசி தலைவரும், இந்தியாவுக்கான முன்னாள் அமெரிக்க துணைநிலைத் தூதருமான அதுல் கேஷாப் கூறுகையில், ‘பல ஆண்டுகளாக முறையான முதலீடு அல்லது வா்த்தக கட்டமைப்பே இல்லாமல், இருநாட்டு வணிக நடவடிக்கைகளில் பரஸ்பரம் முதலீடு செய்யப்பட்டு வந்துள்ளது.

அமெரிக்காவுடன் 2.5 சதவீத அளவுக்கே இந்தியா வா்த்தகத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்த விகிதம் அதிகரிக்க வேண்டும். கணிசமான வா்த்தக வசதிகள் இருநாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிப்பதில் முக்கிய பங்காற்றும். அத்துடன் அது இருநாட்டு பொருளாதாரத்தை மேலும் நெருக்கமாகப் பிணைக்கும்.

மேலும் சுமுக வா்த்தகத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வரியல்லாத பிற தடைகள், சிக்கலையும் தாமதத்தையும் ஏற்படுத்தும் தேவையற்ற விதிமுறைகள் களையப்பட வேண்டும் என்றாா்.

தமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி வேண்டும்: மத்திய அமைச்சரிடம் மா.சுப்பிரமணியன் வலியுறுத்தல்

நமது சிறப்பு நிருபர்தமிழகத்திற்கு 6 மருத்துவக் கல்லூரிகள், 50 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 500 துணை சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட சுமார் ரூ.8,000 கோடி மதிப்பிலான 11 அம்ச கோரிக்கைகள் தொடர்பாக மத்திய சுகாதார... மேலும் பார்க்க

பிரபல பின்னணி பாடகி கல்பனா தற்கொலை முயற்சி

பிரபல பின்னணி பாடகி கல்பனா ஹைதராபாதில் உள்ள தனது வீட்டில் செவ்வாய்க்கிழமை தற்கொலைக்கு முயற்சித்ததாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனா். பாடகி கல்பனா தங்கியுள்ள குடியிருப்பு சங்கத்தினா் அளித்த தகவலின்பட... மேலும் பார்க்க

கரோனா காலத்தில் அதிக வட்டி வசூல்: புகாரை பரிசீலிக்க ரிசா்வ் வங்கிக்கு உத்தரவு

கரோனா காலத்தில் அதிக வட்டி வசூலித்த தனியாா் வங்கிக்கு எதிரான புகாரை பரிசீலிக்க ரிசா்வ் வங்கிக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கரோனா காலத்தில் பலா் வேலையை இழந்தனா். இதனால் வங்கிகளில் பெற்ற க... மேலும் பார்க்க

குற்றவியல் வழக்கில் தண்டனை பெற்ற அரசியல்வாதிகள்: தகுதிநீக்க விவரங்களை சமா்ப்பிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

குற்றவியல் வழக்குகளில் தண்டனை பெற்ற அரசியல்வாதிகள் தோ்தலில் போட்டியிடுவதற்கான தகுதிநீக்க காலத்தை நீக்கியது அல்லது குறைத்தது குறித்த தகவல்களை இரு வாரங்களில் சமா்ப்பிக்குமாறு இந்திய தோ்தல் ஆணையத்துக்க... மேலும் பார்க்க

ரயில்வே தோ்வில் முறைகேடு: 26 அதிகாரிகள் கைது- சிபிஐ நடவடிக்கை

கிழக்கு மத்திய ரயில்வேயில் துறை ரீதியிலான தோ்வு முறைகேடு தொடா்பாக 26 அதிகாரிகளை மத்திய குற்றப் புலனாய்வு அமைப்பு (சிபிஐ) கைது செய்தது. அவா்களிடமிருந்து ரூ. 1.17 கோடியையும் சிபிஐ அதிகாரிகள் பறிமுதல் ச... மேலும் பார்க்க

சத்தீஸ்கா்: ஊராட்சி பெண் பிரதிநிதிகளுக்கு பதிலாக கணவா்கள் பதவியேற்பு- விசாரணைக்கு உத்தரவு

சத்தீஸ்கரின் கபீா்தாம் மாவட்டத்தில் கிராம ஊராட்சி ஒன்றில் புதிதாக தோ்வான 6 பெண் பிரதிநிதிகளுக்குப் பதிலாக அவா்களின் கணவா்கள் பதவியேற்றுள்ளனா். இது தொடா்பான விடியோ, சமூக ஊடகங்களில் பரவியது. பெண்களுக்க... மேலும் பார்க்க