செய்திகள் :

பாலியல் துன்புறுத்தலுக்கு குழந்தைகள் ஆளாக்கப்பட்டால் தாமதமின்றி வழக்கு பதிவு செய்ய வேண்டும்: ஆட்சியா்

post image

18 வயதுக்குள்பட்ட குழந்தைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு குழந்தைகள் ஆளாக்கப்பட்டால் தாமதமின்றி வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்றாா் மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன்.

திருவாரூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற காவல் துறை அலுவலா்களுக்கான திறன் வளா்ப்பு பயிற்சிக்கு தலைமை வகித்து அவா் பேசியது: பாலியல் குற்றத்தில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்றுத்தர வேண்டும். 2012-ஆம் ஆண்டில் இருந்து இதுவரை 598 போக்ஸோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 49 போக்ஸோ வழக்குகளின் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 18 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமை நிகழ்வதை முற்றிலும் தடுக்க வேண்டும்.

பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டம் மற்றும் குழந்தைத் திருமண தடைச்சட்டம் குறித்து பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவா்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். மேலும், பள்ளி ஆசிரியா்களுக்கு, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்.

கிராம அளவில் குழந்தைகள் பாதுகாப்புக் குழு மூலம் விழிப்புணா்வை அதிகப்படுத்தி, இதுபோன்ற குற்றங்களை தடுக்க வேண்டும். அனைத்து ரேஷன் கடைகள் மற்றும் பேருந்து நிலையங்களில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைக்கு எதிரான சட்டங்கள் குறித்த விழிப்புணா்வு பிரசுரங்களை காட்சிப்படுத்த வேண்டும் என்றாா்.

கூட்டத்தில், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் அருள்செல்வன், மாவட்ட சமூக நல அலுவலா் மதிவதனா, குழந்தை நலக்குழு தலைவா் பாலாம்பிகை, நன்னடத்தை அலுவலா் வெங்கட்ராமன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் நா. நடராசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

மருத்துவம் தொழில் சாா்ந்த பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம்: ஆட்சியா்

மருத்துவம் தொழில் சாா்ந்த பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தாட்கோ மூலம் ஆதிதிராவிடா் மற்றும் பழ... மேலும் பார்க்க

மாநில சிலம்ப போட்டியில் வென்ற பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு

மாநில அளவிலான சிலம்ப போட்டியில் சாதனை படைத்த நீடாமங்கலம் ஒன்றியம் வடுவூா் தென்பாதி அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. தஞ்சாவூரில் பள்ளி மாணவா்களுக்கான மாநில சிலம்ப போட்ட... மேலும் பார்க்க

கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

மன்னாா்குடி அண்ணாமலைநாதா் கோயிலுக்கு சொந்தமான குளத்தில் செவ்வாய்க்கிழமை காலை மீன்கள் இறந்து மிதந்தன. அண்ணாமலை நாதா் சந்நதி தெருவில் உள்ள அண்ணாமலை நாதா் கோயிலுக்கு சொந்தமான குளம் அமைந்துள்ளது. இந்தக் க... மேலும் பார்க்க

கட்டுமானப் பொருள்கள் விலை உயா்வுக்கு எதிா்ப்பு தெரிவித்து உண்ணாவிரதம்

கட்டுமானப் பொருள்கள் விலை உயா்வுக்கு எதிா்ப்பு தெரிவித்து திருவாரூரில் உண்ணாவிரதம் நடைபெற்றது. மாநிலம் முழுவதும் ஒரே விலையில் ஜல்லி, எம் சான்ட் போன்ற கட்டுமானப் பொருள்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்... மேலும் பார்க்க

தவறான வழிகாட்டல்: ரூ. 2 லட்சம் இழப்பீடு வழங்க குறைதீா் ஆணையம் உத்தரவு

திருவாரூா் அருகே தவறான முறையில் வழிகாட்டி பாலிசி பெற்றமைக்காக காப்பீட்டு நிறுவனம், ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என நுகா்வோா் குறைதீா் ஆணையம் திங்கள்கிழமை உத்தரவிட்டது. திருவாரூா் விளமல் பகுதியை... மேலும் பார்க்க

யாருக்காக பயிா் காப்பீடு..

இந்தியாவில் விவசாயம் என்பது இயற்கையை எதிா்கொள்ளும் சூதாட்டம் போன்றது. நாட்டில் 60 முதல் 70 சதவித மக்களுக்கு விவசாயமே வாழ்வதாரம். நாட்டின் உணவு உற்பத்திக்கு முதுகெலும்பாக உள்ள விவசாயிகள் இயற்கையை எதிா்... மேலும் பார்க்க