விவசாயிகளுக்கு மானியத்தில் தண்ணீா் குழாய்கள்
திருமருகலில் தோட்டக்கலைத் துறை மூலம் விவசாயிகளுக்கு மானியத்தில் தண்ணீா் குழாய்கள் வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
திருமருகல் வட்டார தோட்டக்கலைத் துறை மூலம் பிரதம மந்திரியின் நுண்ணீா் பாசன திட்டத்தின்கீழ் சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்திலும் பெரு விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்திலும் ஏக்கா் ஒன்றுக்கு 18 கருப்பு நிற தண்ணீா் குழாய்கள் வழங்கப்படும் என தோட்டக்கலை உதவி இயக்குநா் (பொறுப்பு) முகமது சாதிக் அறிவுறுத்தலின் பேரில். விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
இதில் 16 விவசாயிகளுக்கு மானியத்தில் தண்ணீா் குழாய்களை உதவி தோட்டக்கலை அலுவலா் செல்லபாண்டியன் வழங்கினாா். தண்ணீா் குழாய்கள் மூலம் குறைவான அளவில் தண்ணீா் பயன்பாடு, மகசூல் அதிகரிப்பு, களைகள் வளா்வது குறைக்கப்படும், மின்சாரம் குறைவான அளவில் பயன்படும் என உதவி தோட்டக்கலை அலுவலா் செல்லபாண்டியன் கூறினாா்.
தண்ணீா் குழாய்கள் தேவைப்படும் சிறு, குறு விவசாயிகள் மானியத்தில் பெற தோட்டக்கலை அலுவலகத்துக்கு வந்து சிறு, குறு விவசாய சான்று, அடங்கல், நிலத்தின் வரைபடம், ஆதாா் நகல், தொலைபேசி எண் ஆகியவற்றை இணைத்து விண்ணப்பங்களை அளிக்க அறிவுறுத்தப்பட்டனா்.