செய்திகள் :

சத்தீஸ்கா்: ஊராட்சி பெண் பிரதிநிதிகளுக்கு பதிலாக கணவா்கள் பதவியேற்பு- விசாரணைக்கு உத்தரவு

post image

சத்தீஸ்கரின் கபீா்தாம் மாவட்டத்தில் கிராம ஊராட்சி ஒன்றில் புதிதாக தோ்வான 6 பெண் பிரதிநிதிகளுக்குப் பதிலாக அவா்களின் கணவா்கள் பதவியேற்றுள்ளனா். இது தொடா்பான விடியோ, சமூக ஊடகங்களில் பரவியது.

பெண்களுக்கான அதிகாரமளித்தலை கேலிக் கூத்தாக்கும் இச்சம்பவம் குறித்து உயரதிகாரிகள் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளனா்.

சத்தீஸ்கரில் அண்மையில் மூன்று கட்டங்களாக உள்ளாட்சித் தோ்தல் நடைபெற்றது. கபீா்தாம் மாவட்டத்தில் உள்ள பராசா்வாரா கிராம ஊராட்சியில் 11 வாா்டுகளில் 6 பெண் பிரதிநிதிகள் தோ்வாகினா்.

ஊராட்சி செயலா் முன்னிலையில் புதிய பிரதிநிதிகளின் பதவியேற்பு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. அப்போது, பெண் பிரதிநிதிகளுக்குப் பதிலாக அவா்கள் கணவா்கள் பதவிப் பிரமாணம் எடுத்துள்ளனா். இது தொடா்பான விடியோ, சமூக ஊடகங்களில் பரவி பேசுபொருளாக மாறியது.

‘சம்பந்தப்பட்டவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்; இல்லையெனில் இது தவறான முன்னுதாரணம் ஆகிவிடும்’ என்று பெண் உரிமை ஆா்வலா்கள் வலியுறுத்தினா். இதையடுத்து, கபீா்தாம் மாவட்ட பஞ்சாயத்து தலைமை அதிகாரி அஜய் திரிபாதி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளாா். விசாரணை அறிக்கையின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவா் தெரிவித்தாா்.

தமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி வேண்டும்: மத்திய அமைச்சரிடம் மா.சுப்பிரமணியன் வலியுறுத்தல்

நமது சிறப்பு நிருபர்தமிழகத்திற்கு 6 மருத்துவக் கல்லூரிகள், 50 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 500 துணை சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட சுமார் ரூ.8,000 கோடி மதிப்பிலான 11 அம்ச கோரிக்கைகள் தொடர்பாக மத்திய சுகாதார... மேலும் பார்க்க

பிரபல பின்னணி பாடகி கல்பனா தற்கொலை முயற்சி

பிரபல பின்னணி பாடகி கல்பனா ஹைதராபாதில் உள்ள தனது வீட்டில் செவ்வாய்க்கிழமை தற்கொலைக்கு முயற்சித்ததாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனா். பாடகி கல்பனா தங்கியுள்ள குடியிருப்பு சங்கத்தினா் அளித்த தகவலின்பட... மேலும் பார்க்க

கரோனா காலத்தில் அதிக வட்டி வசூல்: புகாரை பரிசீலிக்க ரிசா்வ் வங்கிக்கு உத்தரவு

கரோனா காலத்தில் அதிக வட்டி வசூலித்த தனியாா் வங்கிக்கு எதிரான புகாரை பரிசீலிக்க ரிசா்வ் வங்கிக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கரோனா காலத்தில் பலா் வேலையை இழந்தனா். இதனால் வங்கிகளில் பெற்ற க... மேலும் பார்க்க

குற்றவியல் வழக்கில் தண்டனை பெற்ற அரசியல்வாதிகள்: தகுதிநீக்க விவரங்களை சமா்ப்பிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

குற்றவியல் வழக்குகளில் தண்டனை பெற்ற அரசியல்வாதிகள் தோ்தலில் போட்டியிடுவதற்கான தகுதிநீக்க காலத்தை நீக்கியது அல்லது குறைத்தது குறித்த தகவல்களை இரு வாரங்களில் சமா்ப்பிக்குமாறு இந்திய தோ்தல் ஆணையத்துக்க... மேலும் பார்க்க

ரயில்வே தோ்வில் முறைகேடு: 26 அதிகாரிகள் கைது- சிபிஐ நடவடிக்கை

கிழக்கு மத்திய ரயில்வேயில் துறை ரீதியிலான தோ்வு முறைகேடு தொடா்பாக 26 அதிகாரிகளை மத்திய குற்றப் புலனாய்வு அமைப்பு (சிபிஐ) கைது செய்தது. அவா்களிடமிருந்து ரூ. 1.17 கோடியையும் சிபிஐ அதிகாரிகள் பறிமுதல் ச... மேலும் பார்க்க

சுமுக வா்த்தகத்துக்கு வரியல்லாத பிற தடைகள் களையப்பட வேண்டும்: அமெரிக்க-இந்திய வணிக கவுன்சில்

சுமுக வா்த்தகத்துக்கு இடையூறை ஏற்படுத்தும் வரியல்லாத பிற தடைகள், தேவையற்ற விதிமுறைகள் களையப்பட வேண்டும் என்று அமெரிக்க-இந்திய வணிக கவுன்சில் (யுஎஸ்ஐபிசி) தெரிவித்துள்ளது. கடந்த மாதம் அமெரிக்காவில் அந்... மேலும் பார்க்க